எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

கிறிஸ்துவுக்குள் இணைக்கப்பட்டிருத்தல்

வேதாகமத்தில் பெயர்களின் பட்டியல் வரும்பொழுது, அவற்றை வாசிக்காமல் விட்டுவிட நமக்கு ஓர் எண்ணம் தோன்றும். ஆனால் இயேசு, அவரோடு இணைந்து ஊழியம் செய்ய அழைக்கப் பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் பொக்கிஷங்களைக் கண்டுகொள்ளலாம். அவர்களில் அநேகர் நம்மால் நன்கு அறியப்பட்டவர்கள் - கல் என்று அர்த்தம்கொள்ளும் பேதுரு என்று இயேசுவால் பெயரிடப்பட்ட சீமோன், மீன் பிடிக்கும் சகோதரர்களான யாக்கோபு, யோவான், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரை நன்கு அறிவோம். ஆனால், இயேசுவின் சீஷர்கள் ஆகும் முன்பு ஒருவருக்கொருவர் எதிராளிகளாக இருந்திருக்கக்கூடிய ஆயக்காரனாகிய மத்தேயு, செலோத்தியனாகிய சீமோன் ஆகியோரை எளிதாக கவனிக்காமல் விட்டுவிடுவோம்.

மத்தேயு ரோமர்களுக்காக வரி வசூலித்தவன். ஆகவே, யூதர்கள் அவனை எதிராளியாக பார்த்தனர். ஆயக்காரர்கள் அவர்களது நேர்மையற்ற நடக்கைகளாலும், தேவனுக்கு மட்டுமே அல்லாது அவர்களை ஆண்டுவந்த ரோமர்களுக்கு வரிப்பணம் வசூலித்ததாலும் யூதர்களால் வெறுக்கப்பட்டார்கள். மறுபுரத்தில் இயேசுவின் அழைப்புக்கு முன்பாக செலோத்தியனாகிய சீமோன் யூதர்களின் தீவிரவாத குழுவில் சேர்ந்தவனாகவும், ரோமர்களை வெறுப்பவனாகவும், வன்முறையினால் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு அவர்களது ஆட்சியை கவிழ்த்துப் போடவும் தீவிரமாக இருந்தவன்.

மத்தேயுவும், சீமோனும் எதிர் எதிரான அரசியல் நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் மனப்பூசல்கள் உடையவர்களாகவோ அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதாகவோ நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் இயேசுவை பின்பற்றின பொழுது அவர்களுக்கு இடையே முன்பிருந்த கருத்து வேற்றுமைகளை களைந்து எறிவதில் வெற்றி கண்டிருப்பார்கள்.

மனிதனாக அவதரித்த தேவகுமாரனாகிய இயேசுவின் மீது நாமும் கூட நமது கண்களைப் பதித்தால், பரிசுத்தாவியின் உதவியினால், உடன் விசுவாசிகளோடு உள்ள ஐக்கியத்தில் மேலும், மேலும் அதிகமாய் ஊன்றக் கட்டப்படுவோம்.

மெய்யான ஐஸ்வர்யம்

என்னுடைய தோழியின் தகப்பனாருடைய நினைவுநாள் ஜெபக்கூட்டத்தில், “உன் தந்தையை சந்திக்கும் வரையில் மற்றவர்களுக்கு உதவும் பொழுதுகூட ஒருவரால் உற்சாகமாயும், சந்தோஷமாயும் இருக்க முடியும் என்பதை அறியாதிருந்தேன்”, என்று ஒருவர் அவளிடம் கூறினார். மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலமும், அன்பையும், களிப்பையும் பகிர்ந்தும்,  முன்பின் அறியாதவர்களை சந்தித்து நட்பு பாராட்டுவதின் மூலமும், அவளுடைய தந்தை தேவனுடைய ராஜ்ஜியத்தைக் கட்ட அவரது பங்களித்தார். அவர் மரித்த பொழுது அன்பை பரம்பரை சொத்தாக விட்டுச்சென்றார். அதற்கு எதிர்மறையாக என் தோழியின் அத்தையோ, அதாவது அவள் தந்தையின் சகோதரி, அவருடைய…

திருமணத்திற்கு தயார்

“எனக்குப் பசிக்கிறது”, என்று என்னுடைய எட்டு வயது மகள் கூறினாள். அதற்கு நான், “மன்னித்துவிடு, உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. நாம் டிக்-டாக்-டோ விளையாடலாம்” என அவளிடம் கூறினேன். ஒரு மதிய வேளை திருமணத்தில் கலந்துக் கொள்ளும்படியாய் ஆலயத்திலே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதப்பட்டு கொண்டிருக்கும் மணமகளின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம். இன்னும் எவ்வளவு நேரம் ஆகக்கூடும் என்று தெரியவில்லை. ஆயினும் திருமணம் தொடங்கும் வரையில் எப்படியாவது என் மகளை சமாளித்து விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.

நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில்,…

தேவனின் வார்த்தைகளை வெளிப்படுத்தும் நபர்

ரேடியோவில் நடக்கவிருந்த பேட்டிக்காக வர இருந்த தொலைபேசியின் அழைப்பிற்காக என் நரம்புகள் படபடக்கக் காத்திருந்தேன். அந்த பேட்டியின் காட்சி அமைப்பாளர், என்ன கேள்விகள் கேட்கப் போகிறாரோவென்றும், நான் அதற்கு என்ன விதமாக பதிலளிக்கப்போவது என்றும் சிந்தித்தேன். “கர்த்தாவே, எழுதுவதில் நான் திறமையுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் மோசேயைப் போல பேசுவதற்கு தயக்கப்படுகிறேன். பேசுவதற்கான வார்த்தைகளை நீரே தரவேண்டுமென்று நம்புகிறேன்” என்று நான் ஜெபித்தேன்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவனுடைய ஜனங்களை மீட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்ற மோசேயோடு நான் என்னை ஒப்பிடவில்லை. இஸ்ரவேல் ஜனங்களை…

சுட்டெரிக்கும் சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காக்கப்படல்

நான் பிரிட்டனில் வாழ்ந்து வருவதால் வெயிலின் சூட்டினால் ஏற்படும் தோல் வியாதியைப்பற்றி பொதுவாக நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், இங்கு சூரியன் மிக கடுமையான மேகத்தால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். சமீபகாலத்தில் நான் ஸ்பெயின் நாட்டில் சில நாட்கள் கழிக்க வேண்டியதிருந்தது. எனது தோல் வெளிறிய நிறத்தில் இருந்ததால், குடையின் நிழலுக்குள் ஓடி ஒளியாமல் பத்து நிமிடங்களுக்கு மட்டும்தான் என்னால் சூரிய ஒளியில் இருக்க முடிந்ததை விரைவில் உணர்ந்தேன்.

மத்திய தரைக்கடலின் சுட்டெரிக்கும் சூரிய கதிரின் தாக்கத்தை நான் எண்ணினபொழுது தேவன் அவரது மக்களின் வலது பக்கத்தில்…

தேவன் பயன்படுத்தும் உப்புத்தாள் (சாண்ட் பேப்பர்)

என் சிநேகிதி கூறிய வார்த்தை என்னைக் கொட்டியது போலிருந்தது. என்னுடைய திடமான கருத்தைக் குறித்து அவளுடைய குத்துவது போன்ற விமரிசனத்தை, மீண்டும், மீண்டும் என் மனம் அசைபோட்டு போராடிக் கொண்டிருந்ததை நிறுத்தி, தூங்குவதற்கு முயற்சித்தேன். தேவஞானத்தையும், சமாதானத்தையும் தரும்படி படுத்துக்கொண்டே ஜெபித்தேன். பல வாரங்களாகியும் அக்காரியம் என்னை உறுத்திக்கொண்டே இருந்ததால்,“நான் மிகவும் புண்பட்டிருக்கிறேன். தேவனே, நான் எந்தக் காரியத்தை மாற்றிக்கொள்ள வேண்டும், அவள் கூறுவது எவ்விதத்தில் சரி என்று எனக்குக் காண்பியும்” என்று ஜெபித்தேன்.

என் வாழ்க்கையில் என் சிநேகிதி தேவனின் உப்புத்தாள் போன்று…

துக்கத்திலிருந்து களிப்பு

நான் பணிபுரிந்த நிருவனத்தில் பத்தாண்டுகளுக்கு முன் என்னைப் பணியிலிருந்து நீக்கி “நாங்கள் உங்களைப் பணியிலிருந்து நீக்குகிறோம்” என்று கூறியபொழுது என் தலை சுற்றியது. பதிப்பாசிரியராக பணிபுரிந்த எனக்கு அவ்வேளையில் மனம் சுக்குநூறாகஉடைந்தது. நான் சுயமாகச் செய்து கொண்டிருந்த பணியும் நிறைவடையப் போகிறது என்று சமீபத்தில் கேள்விப்பட்டேன். ஆனால், இம்முறை அச்செய்தி என்னை நிலைகுலையச் செய்யவில்லை. ஏனென்றால் என் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற தேவன் உண்மையுள்ளவர் என்பதைப் பல ஆண்டுகளாக அனுபவித்திருந்தேன். ஆகையால் நான் முன்போல் அதிகமாய் அசைக்கப்படவில்லை.

வேதனையும், ஏமாற்றங்களும் நிறைந்த விழுந்துபோன இவ்வுலகத்தில்…

உண்மையான செய்தித் தொடர்பு

என்னுடைய வட லண்டன் சுற்றுப்புறங்களில் நான் நடந்து செல்லும்பொழுது, போலிஷ், ஜப்பானிஷ், ஹிந்தி, குரோயேஷியன், இத்தாலியன் என்பது போன்ற பல மொழிகளில் மக்கள் தனித்தனியே உரையாடுவதைக் கேட்க முடியும். இப்படிப்பட்ட வேற்றுமை எனக்கு பரலோகத்தை ருசிப்பது போன்ற ஓர் உணர்வை உண்டாக்கும். ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியாது. ஓர் ரஷ்ய உணவுவிடுதி, அல்லது போலிஷ் சந்தைக்குள் நான் நுழையும்பொழுது வேறு வேறு விதமான பேச்சு வழக்குகளையும், சத்தங்களையும் கேட்க முடியும். அப்பொழுது பெந்தெகொஸ்தே நாளன்று சீடர்கள் என்ன பேசினார்கள்…

நமது புதிய நாமம்

அவள் தன்னைத்தானே “கவலைப்படுபவள்” என்று அழைத்துக்கொண்டாள், ஆனால் அவள் குழந்தை ஓர் விபத்தில் காயப்பட்ட பொழுது அந்தப் பெயரிலிருந்து தன்னை எவ்வாறு விடுவித்துக் கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டாள். அவள் பிள்ளை சுகமடைந்து வரும்பொழுது, ஒவ்வொரு வாரமும் சிநேகிதருடன் பேசவும், ஜெபிக்கவும் கூடிவந்து தேவனிடமிருந்து உதவியையும், சுகத்தையும் வேண்டி நின்றாள். பல மாதங்களாக இவ்வாறு தன் பயத்தையும், தேவைகளையும் தேவனிடத்தில் வைத்தபொழுது, தான் ஓர் “கவலைப்படுபவளாக” இருந்த நிலையிலிருந்து “ஜெபவீராங்கனையாக”மாறுவதை உணர்ந்தாள். இந்த தேவையற்ற தலைவலி போன்ற போராட்டத்தால் தேவனோடு அவளுக்குள்ள ஐக்கியம் மிகவும் ஆழமாகியது.…