எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

தியாகம் நிறைந்த விசுவாசம்

என்னுடைய கணவர் போதகராக உள்ள ஆலயத்தின் அருகில் எங்கள் வீடு உள்ளது. ஒரு ஞாயிற்றுகிழமை மத்தியான வேளையிலே, என் வீட்டு தோட்டத்தில் அமர்ந்தவாரு, ஆலயத்திலிருந்து பாரசீக மொழியில் மிதந்து வந்த துதி ஆராதனை சத்தத்தை கேட்டுக்கொண்டிருந்தேன். லண்டனில் உள்ள எங்கள் ஆலயத்தில் உற்சாகமிக்க ஈரானிய அங்கத்தினர் உள்ளனர். அவர்கள் எதிர்கொண்ட சில உபத்திரவங்களைப் பற்றி கேட்கும்பொழுது, கிறிஸ்துவின் மேலுள்ள அவர்களுடைய வாஞ்சையை அறிந்து கொள்ளலாம். அவற்றோடு ஒப்பிடும்பொழுது நாம் நம்மை சிறியவர்களாக எண்ணக்கூடும். உதாரணத்திற்கு, கிறிஸ்துவை விசுவாசித்ததினால் தன் உயிரைத் துறக்க நேர்ந்த தலைமைப் போதகருடைய சகோதரனின் தியாகம். இந்த உண்மையான விசுவாசிகள், முதலாவது இரத்தசாட்சியான ஸ்தேவானுடைய வழியை பின்பற்றுகிறார்கள்.

ஆதி திருச்சபையிலே முதலாவதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவரான ஸ்தேவான், “பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும்” (அப். 6:8) செய்த பொழுது, எருசலேமிலே அநேகரால் கவனிக்கப்பட்டு, யூத அதிகாரிகள் முன்பு, தன்னுடைய செய்கைகளுக்கு விளக்கமளிக்குமாறு கொண்டு செல்லப்பட்டான். அவனை குற்றப் படுத்தியவர்களின் இருதய கடினத்தை விவரிக்கும் முன்பு, கிறிஸ்துவின் மேலுள்ள தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து உணர்ச்சிமிக்க விளக்கமளித்தான். அதைக்கேட்டு மனந்திரும்புவதற்கு பதிலாக அவர்கள் “மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லை கடித்தார்கள்” (7:54). ஆத்திரமடைந்த அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்து கல்லெறிந்து கொன்று போட்டார்கள். அவனோ அப்பொழுதும் அவர்களை மன்னிக்குமாறு ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.

கிறிஸ்துவின் சுவிசேஷம் மூர்க்கத்தனமான எதிர்ப்பை உண்டுபண்ணக் கூடும் என்பதை ஸ்தேவான் மற்றும் இன்றைய இரத்த சாட்சிகளின் கதைகள்மூலம் அறிந்து கொள்ளலாம். ஒருவேளை நம்முடைய விசுவாசத்தினிமித்தம் நாம் எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இன்று உலகத்தில் உபத்திரவப்படும் சபைக்காக நாம் ஜெபிக்க வேண்டும்; ஒருவேளை நாமும் சோதிக்கப்பட்டால் நமக்காக எல்லா பாடுகளையும் அனுபவித்த கிறிஸ்துவின் முன்பு உண்மையுள்ளவர்களாய் நிற்க கிருபை பெறுவோமாக.

செயல்படும் அன்பு

“ஏதாவது சில துணிகள் துவைக்க வேண்டி இருந்தால், துவைத்துத் தரட்டுமா?” என லண்டனில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினரைப் பார்த்துக் கேட்டேன். உடனே அவருடைய முகம் பிரகாசமாகி, அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற அவருடைய மகளைப் பார்த்து, “உன் அழுக்குத் துணிகளை எல்லாம் கொண்டு வா. எமி நம்முடைய துணியையெல்லாம் துவைக்கப் போகிறாள்!” என்றார். சில துணிகள் மாத்திரமே துவைக்கும்படி உதவ நினைத்து, இப்பொழுது ஒரு அழுக்கு மூட்டையையே துவைக்க ஏற்பட்ட நிலையைக் குறித்து நான் புன்னகைத்தேன்.

பின்பு அத்துணிகளை கொடியிலே காயப்போட்டுக் கொண்டிருந்தபொழுது, அன்று காலை வாசித்த வேத பகுதியிலுள்ள ஒரு வசனம் என் நினைவுக்கு வந்தது. அது “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (பிலி. 2:3). பவுல், பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தை நான் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் பிலிப்பியர்களை நோக்கி தேவனுடைய அழைப்பின் மகிமைக்கேற்ப, நாம் ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும்படியாய் உபதேசித்து உற்சாகப்படுத்துகிறார். உபத்திரவப்பட்டு கொண்டிருந்த அவர்களைப் பார்த்து பவுல் ஒரே மனதுடையவர்களாய் இருக்கும்படி உற்சாகப்படுத்துகிறார். ஏனெனில் கிறிஸ்துவுக்குள்ளான அவர்களுடைய ஐக்கியத்தின் விளைவாகப் பிறக்கும் அவர்களுடைய ஒற்றுமை, ஒருவருக்கொருவர் உதவி செய்வதின்மூலம் வெளிப்பட்டு, விசுவாசத்திலே அவர்களை பலப்படச் செய்யும் என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார்.

நாம் சுயநலமான நோக்கமோ அல்லது வீண் பெருமையோ இல்லாமல் பிறரை நேசிப்பதாகக் கூறலாம், ஆனால், நம் இருதயத்தின் உண்மையான நிலை, நம்முடைய அன்பை செயலில் காட்டும்பொழுது தான் வெளிப்படுகிறது. அவ்வளவு துணிகளைத் துவைக்கும்போது முறுமுறுக்கத் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுபவளாக என்னுடைய அன்பை, சுத்த இருதயத்துடனே, செயலிலே என் நண்பர்களுக்கு வெளிப்படுத்தும்படியாகவே அழைக்கப்பட்டிருக்கிறேன்.

தேவனுடைய மகிமைக்கென்று நாம் நம்முடைய குடும்பத்தினர், நண்பர் மற்றும் அருகில் இருப்பவர்களுக்கு உதவ வழிகளை கண்டடைவோம்.

செவிகொடுக்கும் தேவன்

ஜலதோஷத்தாலும், ஒவ்வாமையினாலும் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு சத்தங்கள் எதையும் தெளிவாகக் கேட்க முடியாமல், நீருக்குள் மூழ்கி இருந்ததுபோல உணர்ந்தேன். அநேக வாரங்களுக்கு சத்தத்தை தெளிவாக கேட்க இயலாமல் கஷ்டப்பட்டேன். அவ்வாறு நான் கஷ்டப்பட்ட பொழுதுதான் சாதாரண நாட்களில் தெளிவாகக் கேட்ககூடிய தன்மையை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருந்ததை உணர்ந்தேன்.

சிறுவனான சாமுவேல் ஆலயத்தில் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, அவனது பெயரைச் சொல்லி கூப்பிட்ட சத்தம் கேட்டபொழுது, அரைகுறை தூக்கத்திலிருந்து எழுந்தான் (1 சாமு. 3:4). மூன்று முறை அவன் பிரதான ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாக வந்து நின்றான். மூன்றாவது முறைதான், தேவன் சாமுவேலைக் கூப்பிடுகிறார் என்பதை ஏலி உணர்ந்தான். அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாக இருந்தது (வச. 1). இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கும் பழக்கமில்லாதிருந்தார்கள். ஆனால், தேவனுடைய சத்தத்திற்கு எவ்வாறு மாறுத்தரம் கூறவேண்டுமென்று ஏலி சாமுவேலுக்குப் போதித்தான் (வச. 9).

சாமுவேலின் காலத்தில் இருந்ததை விட இந்தக் காலங்களில் தேவன் அதிகமாக பேசுகிறார். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபி. 1:1–2) என்று எபிரெயருக்கு எழுதின நிரூபம் கூறுகிறது. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்து நமக்கு கற்பித்தவைகளில் வாழ, நம்மை வழிநடத்துகிற, பரிசுத்தாவியானவர் பெந்தெகொஸ்தே நாளன்று அருளப்பட்டதைப்பற்றி வாசிக்கின்றோம். ஆனால் அவருடைய சத்தத்தைக் கேட்கவும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய ஜலதோஷத்தின் பொழுது நான் தண்ணீருக்கு அடியில் உள்ளவளைப் போல, எதையும் தெளிவாக கேட்க முடியாமல் இருந்தேனோ, அது போலவே நாம் இருக்கிறோம். கர்த்தருடைய வழிநடத்துதல் இதுதான் என்று நாம் எண்ணும் காரியங்களை வேதாகமத்தின் உதவியின் மூலமாகவும், மூத்த விசுவாசிகளின் மூலமாகவும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக இருப்பதால் நாம் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம். நமக்கு ஜீவனை கொடுப்பதைப்பற்றி நம்மோடு கூடப்பேச தேவன் அதிகம் விரும்புகிறார்.

கிறிஸ்துவுக்குள் இணைக்கப்பட்டிருத்தல்

வேதாகமத்தில் பெயர்களின் பட்டியல் வரும்பொழுது, அவற்றை வாசிக்காமல் விட்டுவிட நமக்கு ஓர் எண்ணம் தோன்றும். ஆனால் இயேசு, அவரோடு இணைந்து ஊழியம் செய்ய அழைக்கப் பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் பொக்கிஷங்களைக் கண்டுகொள்ளலாம். அவர்களில் அநேகர் நம்மால் நன்கு அறியப்பட்டவர்கள் - கல் என்று அர்த்தம்கொள்ளும் பேதுரு என்று இயேசுவால் பெயரிடப்பட்ட சீமோன், மீன் பிடிக்கும் சகோதரர்களான யாக்கோபு, யோவான், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரை நன்கு அறிவோம். ஆனால், இயேசுவின் சீஷர்கள் ஆகும் முன்பு ஒருவருக்கொருவர் எதிராளிகளாக இருந்திருக்கக்கூடிய ஆயக்காரனாகிய மத்தேயு, செலோத்தியனாகிய சீமோன் ஆகியோரை எளிதாக கவனிக்காமல் விட்டுவிடுவோம்.

மத்தேயு ரோமர்களுக்காக வரி வசூலித்தவன். ஆகவே, யூதர்கள் அவனை எதிராளியாக பார்த்தனர். ஆயக்காரர்கள் அவர்களது நேர்மையற்ற நடக்கைகளாலும், தேவனுக்கு மட்டுமே அல்லாது அவர்களை ஆண்டுவந்த ரோமர்களுக்கு வரிப்பணம் வசூலித்ததாலும் யூதர்களால் வெறுக்கப்பட்டார்கள். மறுபுரத்தில் இயேசுவின் அழைப்புக்கு முன்பாக செலோத்தியனாகிய சீமோன் யூதர்களின் தீவிரவாத குழுவில் சேர்ந்தவனாகவும், ரோமர்களை வெறுப்பவனாகவும், வன்முறையினால் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு அவர்களது ஆட்சியை கவிழ்த்துப் போடவும் தீவிரமாக இருந்தவன்.

மத்தேயுவும், சீமோனும் எதிர் எதிரான அரசியல் நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் மனப்பூசல்கள் உடையவர்களாகவோ அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதாகவோ நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் இயேசுவை பின்பற்றின பொழுது அவர்களுக்கு இடையே முன்பிருந்த கருத்து வேற்றுமைகளை களைந்து எறிவதில் வெற்றி கண்டிருப்பார்கள்.

மனிதனாக அவதரித்த தேவகுமாரனாகிய இயேசுவின் மீது நாமும் கூட நமது கண்களைப் பதித்தால், பரிசுத்தாவியின் உதவியினால், உடன் விசுவாசிகளோடு உள்ள ஐக்கியத்தில் மேலும், மேலும் அதிகமாய் ஊன்றக் கட்டப்படுவோம்.

மெய்யான ஐஸ்வர்யம்

என்னுடைய தோழியின் தகப்பனாருடைய நினைவுநாள் ஜெபக்கூட்டத்தில், “உன் தந்தையை சந்திக்கும் வரையில் மற்றவர்களுக்கு உதவும் பொழுதுகூட ஒருவரால் உற்சாகமாயும், சந்தோஷமாயும் இருக்க முடியும் என்பதை அறியாதிருந்தேன்”, என்று ஒருவர் அவளிடம் கூறினார். மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலமும், அன்பையும், களிப்பையும் பகிர்ந்தும்,  முன்பின் அறியாதவர்களை சந்தித்து நட்பு பாராட்டுவதின் மூலமும், அவளுடைய தந்தை தேவனுடைய ராஜ்ஜியத்தைக் கட்ட அவரது பங்களித்தார். அவர் மரித்த பொழுது அன்பை பரம்பரை சொத்தாக விட்டுச்சென்றார். அதற்கு எதிர்மறையாக என் தோழியின் அத்தையோ, அதாவது அவள் தந்தையின் சகோதரி, அவருடைய…

திருமணத்திற்கு தயார்

“எனக்குப் பசிக்கிறது”, என்று என்னுடைய எட்டு வயது மகள் கூறினாள். அதற்கு நான், “மன்னித்துவிடு, உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. நாம் டிக்-டாக்-டோ விளையாடலாம்” என அவளிடம் கூறினேன். ஒரு மதிய வேளை திருமணத்தில் கலந்துக் கொள்ளும்படியாய் ஆலயத்திலே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதப்பட்டு கொண்டிருக்கும் மணமகளின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம். இன்னும் எவ்வளவு நேரம் ஆகக்கூடும் என்று தெரியவில்லை. ஆயினும் திருமணம் தொடங்கும் வரையில் எப்படியாவது என் மகளை சமாளித்து விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.

நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில்,…

தேவனின் வார்த்தைகளை வெளிப்படுத்தும் நபர்

ரேடியோவில் நடக்கவிருந்த பேட்டிக்காக வர இருந்த தொலைபேசியின் அழைப்பிற்காக என் நரம்புகள் படபடக்கக் காத்திருந்தேன். அந்த பேட்டியின் காட்சி அமைப்பாளர், என்ன கேள்விகள் கேட்கப் போகிறாரோவென்றும், நான் அதற்கு என்ன விதமாக பதிலளிக்கப்போவது என்றும் சிந்தித்தேன். “கர்த்தாவே, எழுதுவதில் நான் திறமையுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் மோசேயைப் போல பேசுவதற்கு தயக்கப்படுகிறேன். பேசுவதற்கான வார்த்தைகளை நீரே தரவேண்டுமென்று நம்புகிறேன்” என்று நான் ஜெபித்தேன்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவனுடைய ஜனங்களை மீட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்ற மோசேயோடு நான் என்னை ஒப்பிடவில்லை. இஸ்ரவேல் ஜனங்களை…

சுட்டெரிக்கும் சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காக்கப்படல்

நான் பிரிட்டனில் வாழ்ந்து வருவதால் வெயிலின் சூட்டினால் ஏற்படும் தோல் வியாதியைப்பற்றி பொதுவாக நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், இங்கு சூரியன் மிக கடுமையான மேகத்தால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். சமீபகாலத்தில் நான் ஸ்பெயின் நாட்டில் சில நாட்கள் கழிக்க வேண்டியதிருந்தது. எனது தோல் வெளிறிய நிறத்தில் இருந்ததால், குடையின் நிழலுக்குள் ஓடி ஒளியாமல் பத்து நிமிடங்களுக்கு மட்டும்தான் என்னால் சூரிய ஒளியில் இருக்க முடிந்ததை விரைவில் உணர்ந்தேன்.

மத்திய தரைக்கடலின் சுட்டெரிக்கும் சூரிய கதிரின் தாக்கத்தை நான் எண்ணினபொழுது தேவன் அவரது மக்களின் வலது பக்கத்தில்…

தேவன் பயன்படுத்தும் உப்புத்தாள் (சாண்ட் பேப்பர்)

என் சிநேகிதி கூறிய வார்த்தை என்னைக் கொட்டியது போலிருந்தது. என்னுடைய திடமான கருத்தைக் குறித்து அவளுடைய குத்துவது போன்ற விமரிசனத்தை, மீண்டும், மீண்டும் என் மனம் அசைபோட்டு போராடிக் கொண்டிருந்ததை நிறுத்தி, தூங்குவதற்கு முயற்சித்தேன். தேவஞானத்தையும், சமாதானத்தையும் தரும்படி படுத்துக்கொண்டே ஜெபித்தேன். பல வாரங்களாகியும் அக்காரியம் என்னை உறுத்திக்கொண்டே இருந்ததால்,“நான் மிகவும் புண்பட்டிருக்கிறேன். தேவனே, நான் எந்தக் காரியத்தை மாற்றிக்கொள்ள வேண்டும், அவள் கூறுவது எவ்விதத்தில் சரி என்று எனக்குக் காண்பியும்” என்று ஜெபித்தேன்.

என் வாழ்க்கையில் என் சிநேகிதி தேவனின் உப்புத்தாள் போன்று…