அந்தப் புன்னகை மனிதன்
மளிகைக் கடைக்குச் செல்வது என்பது நான் மிகவும் விரும்பும் ஒரு காரியமல்ல. ஆனால், அது இவ்வுலக வாழ்வோடு இணைந்த ஒன்று, கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஒன்று.
ஆனால், இந்த வேலையில் ஓர் அங்கத்தை எதிர்பார்த்துச் செல்ல நான் தூண்டப்பட்டேன். அது ப்ரெட் நிற்கும் பகுதியில் அமைந்த வெளியே போகும் வரிசை. ப்ரெட் அந்த வெளியே செல்லும் வரிசைக்கு அதை ஒரு காட்சி நேரமாக மாற்றிவிட்டார். அவர் வியத்தகுவகையில் வேகமாகச் செயல்படுவதோடு, முகத்தில் பெரிய சிரிப்பும், சில வேளைகளில் நடனமும், அதனோடு சிலவேளைகளில் பாடலையும் கொண்டிருப்பார். அத்தோடு கரணமிட்டுத் திரும்பி நினைக்க முடியாத வேகத்தில் நாம் வாங்கிய பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொடுப்பார் யாவரும் கடினமானதாகப் பார்க்கும் ஒரு வேலையை ப்ரெட் மிகவும் ஆர்வத்தோடு செய்வதைக் காணலாம். ஒரு நொடிப் பொழுதில் அவருடைய உற்சாகமான ஆவி அந்த வரிசையிலுள்ள அனைவரின் வாழ்வையும் பிரகாசிக்கச் செய்யும்.
ப்ரெட் தன்னுடைய வேலையைச் செய்யும் முறை என்னுடைய மரியாதையையும், பாராட்டையும் பெற்றது. அவருடைய மகிழ்ச்சியான நடத்தையும், சேவை செய்யும் ஆவலும், அங்கு வரிசையிலிருப்போரின் அத்தனை தேவைகளையும் நன்கு கவனித்துச் செய்வதும், அப்போஸ்தலனாகிய பவுல், நாம் எப்படி வேலை செய்ய வேண்டுமென கொலோசெயர் 3:22ல் குறிப்பிட்டிருக்கின்றாரோ அதே போலிருந்தது. “நீங்கள் மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல் தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ் செய்யுங்கள்”
நாம் இயேசுவோடு ஐக்கியமாக இருக்கும் போது, எந்த வேலையை நாம் செய்ய நேர்ந்தாலும் அது தேவனுடைய பிரசன்னத்தை நம் வாழ்வில் காட்டும் சந்தர்ப்பமாகக் கொள்ள வேண்டும். எந்த வேலையும் பெரிதென்றும், சிறிதென்றுமில்லை. அது எவ்வாறிருந்தாலும், எந்த வேலையாயினும் நம்முடைய பொறுப்புக்களை மகிழ்ச்சியோடும், புதிய வகையிலும் மிகச் சிறப்பாகவும் கையாள்வது நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களாகும்.
நாம் பயப்படும் பொது ஒரு நங்கூரம்
நீங்கள் கவலைப்படுபவரா? நானும் அப்படித்தான். நான் அநேகமாக எல்லா நாட்களிலும் பதட்டத்தோடு போராடிக் கொண்டிருப்பவன். நான் பெரிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிறிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிலவேளைகளில் எல்லாவற்றைக் குறித்தும் கவலைப்படுவேன். என்னுடைய வாலிபப்பருவத்தில் ஒருமுறை என்னுடைய பெற்றோர் வர 4 மணி நேரம் தாமதமான போது, நான் காவல்துறையை அழைத்துவிட்டேன்.
வேதாகமம் நம்மை பயப்பட வேண்டாமென அடிக்கடி சொல்லுகிறது. தேவனுடைய நன்மையும், வல்லமையும் நமக்கிருப்பதால், அவர் இயேசுவை நமக்காக பலியாக அனுப்பியதால் பரிசுத்த ஆவியானவரை நமக்கு வழிகாட்டும்படி தந்துள்ளதால், நம்முடைய வாழ்வை பயம் மேற்கொள்ளத் தேவையில்லை. நாம் கடினமான சூழல்களையும் எளிதாக சந்திக்கலாம். தேவன் நம்முடைய சூழ்நிலைகளில் நம்மோடுவருவதாக வாக்களித்துள்ளார்.
நான் மிகவும் பயப்பட்ட நேரங்களில் எனக்கு மிகவும் உதவிய பகுதி ஏசாயா 51:12-16. இப்பகுதியில், மிக அதிகமாக வேதனைகளை அனுபவித்த அவருடைய ஜனங்களிடம் தேவன் இன்னும் அவர்களோடு இருப்பதாக நினைப்பூட்டுகின்றார். நாம் எத்தகைய கடினமான வேளைகளை சந்தித்தாலும் அவருடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் நம்மோடிருப்பது உண்மை. “நான் நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” என ஏசாயா தீர்க்கன் மூலமாக உரைக்கின்றார்.
நான் இந்த வாக்குத்தத்தத்தை நேசிக்கின்றேன், இந்த வார்த்தைகள் என் ஆன்மாவையும், உணர்வுகளையும் வலுப்படுத்துகின்ற நங்கூரம், என்னுடைய பயம் என் மேல் விழுந்து என்னை அமுக்குகையில், என் வாழ்வின் துயரங்கள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும் போது, நான் இந்த வாக்கைப் பற்றிக்கொள்வேன் (வச. 13). இந்தப் பகுதியின் மூலம் நாம் நம்பிக்கையோடு அவரைச் சார்ந்து “வானங்களை விரித்தவரை”, நம்மை ஆறுதல் செய்கிறவரை, நோக்கி நம் கண்களை உயர்த்திப் பார்க்கும்படி நம்மையழைக்கின்றார் (வச. 13).
தேனீக்களும், பாம்புகளும்
சில பிரச்சனைகள் என்றால் தந்தையின் பெயர் அங்கு எழுதப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, சமீபத்தில் என்னுடைய குழந்தைகள் எங்கள் வீட்டின் முன் தாழ்வாரத்தின் பகுதியில், சுவரில் ஏற்பட்ட விரிசலில் தேனீக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே நான் பூச்சி விரட்டும் மருந்தோடு, தேனீக்களோடு போராட சென்றேன். ஐந்து முறை தேனீக்களால் கொட்டப்பட்டேன்.
பூச்சிகளால் கொட்டப்படுதல் எனக்கு விருப்பமில்லாத செயல்தான். ஆனால், என் பிள்ளைகளையோ, மனைவியையோ அவை கடிப்பதைவிட என்னைக் கடிப்பதே மேல். என் குடும்பத்தினரின் நல்வாழ்வுதான் என்னுடைய வேலையின் பிரதான நோக்கமாயிருக்கும். என் குழந்தைகளுக்கு ஒரு தேவையிருந்தால், அவர்கள் என்னைக் கொண்டே செய்யவிரும்புவார்கள். அவர்கள் பயப்படும் காரியங்களில் அவர்களைப் பாதுகாக்க அவர்கள் என்னை நம்பினார்கள்.
மத்தேயு 7ல், இயேசு நமக்குப் போதிப்பது என்னவெனின், நம்முடைய தேவைகளைக் குறித்து தேவனிடம் நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள இயேசு ஒரு விளக்கத்தைத் தருகின்றார். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?” (வச. 9-10) ஓர் அன்பு பெற்றோர் எதைக் கொடுப்பார் என நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால், இயேசு நம் பிதாவின் தயாள குணத்தின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடக் கூடாதென்பதற்காக “ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (வச. 11) என்றார்.
நான் என்னுடைய குழந்தைகளை இதையும் விட அதிகமாக நேசிக்க முடியாதென நினைக்கின்றேன். ஆனால், தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பில் மறைந்து போகும் என இயேசு கூறுகின்றார்.
நாம் பயப்படும் பொது ஒரு நங்கூரம்
நீங்கள் கவலைப்படுபவரா? நானும் அப்படித்தான். நான் அநேகமாக எல்லா நாட்களிலும் பதட்டத்தோடு போராடிக் கொண்டிருப்பவன். நான் பெரிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிறிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிலவேளைகளில் எல்லாவற்றைக் குறித்தும் கவலைப்படுவேன். என்னுடைய வாலிபப்பருவத்தில் ஒருமுறை என்னுடைய பெற்றோர் வர 4 மணி நேரம் தாமதமான போது, நான் காவல்துறையை அழைத்துவிட்டேன்.
வேதாகமம் நம்மை பயப்பட வேண்டாமென அடிக்கடி சொல்லுகிறது. தேவனுடைய நன்மையும், வல்லமையும் நமக்கிருப்பதால், அவர் இயேசுவை நமக்காக பலியாக அனுப்பியதால் பரிசுத்த ஆவியானவரை நமக்கு வழிகாட்டும்படி தந்துள்ளதால், நம்முடைய வாழ்வை பயம் மேற்கொள்ளத் தேவையில்லை. நாம் கடினமான சூழல்களையும் எளிதாக சந்திக்கலாம். தேவன் நம்முடைய சூழ்நிலைகளில் நம்மோடுவருவதாக வாக்களித்துள்ளார்.
நான் மிகவும் பயப்பட்ட நேரங்களில் எனக்கு மிகவும் உதவிய பகுதி ஏசாயா 51:12-16. இப்பகுதியில், மிக அதிகமாக வேதனைகளை அனுபவித்த அவருடைய ஜனங்களிடம் தேவன் இன்னும் அவர்களோடு இருப்பதாக நினைப்பூட்டுகின்றார். நாம் எத்தகைய கடினமான வேளைகளை சந்தித்தாலும் அவருடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் நம்மோடிருப்பது உண்மை. “நான் நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” என ஏசாயா தீர்க்கன் மூலமாக உரைக்கின்றார்.
நான் இந்த வாக்குத்தத்தத்தை நேசிக்கின்றேன், இந்த வார்த்தைகள் என் ஆன்மாவையும், உணர்வுகளையும் வலுப்படுத்துகின்ற நங்கூரம், என்னுடைய பயம் என் மேல் விழுந்து என்னை அமுக்குகையில், என் வாழ்வின் துயரங்கள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும் போது, நான் இந்த வாக்கைப் பற்றிக்கொள்வேன் (வச. 13). இந்தப் பகுதியின் மூலம் நாம் நம்பிக்கையோடு அவரைச் சார்ந்து “வானங்களை விரித்தவரை”, நம்மை ஆறுதல் செய்கிறவரை, நோக்கி நம் கண்களை உயர்த்திப் பார்க்கும்படி நம்மையழைக்கின்றார் (வச. 13).
“நேசிக்கத்தகுந்தது!”
“நேசிக்கத் தகுந்தவள்!” என்ற வார்த்தைகளை, காலையில் எழுந்து தயாராகிக்கொண்டிருந்த என் மகளிடமிருந்து வந்தன. எனக்கொன்றும் புரியவில்லை. தன்னுடைய உறவினர் ஒருவரிடமிருந்து பெற்ற தன்னுடைய மேல் சட்டையைத் சுட்டிக் காட்டினாள். அந்தத்ச் சட்டையின் முன் பகுதியில் இந்த வார்த்தைகளிருந்தன. “நேசிக்கத்தகுந்தவள்” என்று நான் அவளைக் கட்டித் தழுவிக்கொண்டேன். அவளும் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டாள். “நீ நேசிக்கத்தகுந்தவள்” என நான் மீண்டும் கூறினேன். அவளுடைய சிரிப்பு இன்னும் அதிகரித்தது. அவள் நகர்ந்து சென்றபோது இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே சென்றாள்.
நான் மிகச் சிறந்த தந்தையல்ல ஆனால் அந்த நேரத்தில் நான் சரியான தந்தையாகச் செயல்பட்டேன். தற்செயலாய் நடந்த அந்த அழகிய உரையாடலின் போது, என்னுடைய நிபந்தனையற்ற அன்பைப் பெற்ற என் மகளின் பிரகாசமான முகத்தைக் கவனித்தேன். அது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு சித்திரம் போலிருந்தது. அவளுடைய சட்டையிலிருந்த வார்த்தைகளும், அவளுடைய தந்தை அவளைக் குறித்து எண்ணியிருப்பதும் பொருந்தியிருக்கிறது என்பதை அவள் அறிவாள்.
நாம் அளவற்ற அன்பினைக் கொண்டுள்ள ஒரு தந்தையால் நேசிக்கப்படுகிறோம் என்பதை நம்மில் எத்தனை பேர் நம் இருதயத்தில் உணர்ந்திருக்கின்றோம்? சிலவேளைகளில் இந்த உண்மையோடு நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். இஸ்ரவேலரும் அப்படியே உணர்ந்தனர். அவர்களுடைய சோதனைகளின் போது தேவன் அவர்களை நேசிக்கவில்லை என்று எண்ணினர். ஆகையால், எரேமியா 31:3ல் தீர்க்கதரிசி, தேவன் அவர்களுக்கு முன்பு கூறியிருந்ததை நினைவுபடுத்துகின்றார். “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” என்று தேவன் விளம்பியுள்ளார். நாமும் இத்தகைய நிபந்தனையற்ற அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் நம்முடைய காயங்கள், ஏமாற்றங்கள், தவறுகளினால் நாம் நேசிக்கப்பட முடியாதவர்கள் என்று நினைக்கிறோம். தேவனுடைய கரங்கள் ஒரு நேர்த்தியான தந்தையின் கரங்கள், அவருடைய அன்பிற்குள் இளைப்பாறும்படி நம்மை அழைக்கின்றன.
நிரம்பி வழிதல்
‘‘இல்லை! இல்லை! இல்லை!” நான் கத்தினேன். அது ஒன்றும் உதவவில்லை. சிறிதளவும் உதவவில்லை. தண்ணீரை அடைப்பதற்கு நான் எடுத்த புத்திசாலித்தனமான தீர்வு வேலை செய்யவில்லை. நான் என்ன நினைத்தேனோ அதற்கு நேர் மாறாகவே நடந்தது. நான் அந்த கைப்பிடியை கீழே தள்ளிய போதே என் தவறைத் தெரிந்து கொண்டேன். தண்ணீர் நிரம்பி வழிய நான் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றேன்.
எத்தனை நேரம் நம் குழந்தைகள் பாலை ஊற்றும்போது தவறுதலாக எல்லா இடங்களிலும் பாலைக் கொட்டியிருக்கின்றனர். எத்தனை முறை இரண்டு லிட்டர் சோடா பாட்டில் பெட்டிக்குள் சுழன்று வெடித்து விபரீத விளைவுகளை ஏற்படத்தியிருக்கின்றது.
திரவங்களைக் கொட்டுதல் நல்ல காரியமல்ல. ஆனால் இதிலும் ஒரு விதிவிலக்கு உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு நிரம்பி வழியும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும்படி சொல்கின்றார் (ரோம. 15:13). நாம் எப்பொழுதும் மகிழ்ச்சி, சமாதானம், மற்றும் நம்பிக்கையினால் நிரம்பி வழியும்படி நிரப்பப்பட விரும்புவோம். பரலோகத் தந்தையின் மீதுள்ள நம்பிக்கையாலும், ஞானத்தாலும் மிக அதிகமாக நிரப்பப்பட்டு நிரம்பி வழியும்படிச் செய்வோம். அதனை தேவன் நம் வாழ்வின் வெளிச்சமான அழகிய காலங்களில் அப்படிச் செய்வார். நம் வாழ்க்கையாகிய கோப்பை சிறிய அசைவிற்கும் நிரம்பி வழியும். எப்படியாயினும் நம் வாழ்வில் மேலோங்கி நிற்கும் நம்பிக்கை நிரம்பி வழிந்து நம்மைச் சுற்றியுள்ளவர்களை நனைக்கும்படி இருக்கட்டும்.
நமது புயலின் நடுவே
பயங்கர புயல்காற்று, மிரட்டும் மின்னல், மோதியடிக்கும் அலைகள். சாவின் விளிம்பை தொட்டுவிட்ட உணர்வு. தாத்தாவுடன் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நான் அங்கேயே நெடுநேரம் தங்கிவிட்டேன். மாலையில் சூரியன் மறைந்ததும் வீசின சூரைக்காற்றினால் எங்கள் படகு பயங்கரமாய் தத்தளித்தது. படகு கவிழாமல் இருக்க அதன் முன்பகுதியில் உட்காரவேண்டும் என்று தாத்தா அறிவுறுத்தினார். திகில் உள்ளத்தை கவ்வியது. ஆனாலும், எப்படியோ, நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். எனக்கு வயது பதினான்கு.
தேவனுடைய ஆறுதலையும் பாதுகாப்பையும் வேண்டினேன். புயல் ஓய்ந்தபாடில்லை, ஆனாலும் நாங்கள் எப்படியோ தப்பி கரையேறினோம். அன்றைக்கு அந்த இரவு புயலில் உணர்ந்த தேவபிரசன்னத்தின் நிச்சயத்தை இன்னொருமுறை உணர்ந்தேனா என்று தெரியவில்லை.
புயல்கள் இயேசுவுக்கு புதியவைகள் அல்ல. மாற்கு 4:35-41 வசனங்களில் இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, இன்னும் சற்றுநேரத்தில் பயங்கர புயல் வீசப்போகும் ஒரு ஏரியை கடந்துபோகச் சொன்னார். அன்றைக்கு இரவு வீசின கோரப்புயல் அந்த முரட்டு மீனவர்களை ஒரு கை பார்த்தது. தாங்கள் சாகப்போகிறோம் என்றே நினைத்தார்கள். ஆனாலும் இயேசு கடலை அமரச்செய்து தம்முடைய சீடர்களை ஆழமான விசுவாச அனுபவத்திற்கு நேராக நடத்தினார்.
அதேபோல்தான் நம்முடைய புயல்களின் நடுவே அவரை நம்பும்படிக்கு அவர் நம்மை அழைக்கிறார். சில சமயங்களில் அவர் அற்புதமாய் காற்றையும், அலைகளையும் அமைதிப்படுத்துகிறார். சில வேளைகளில் அதற்கு இணையான இன்னொரு அற்புதத்தையும் நிகழ்த்துகிறார்: நம்முடைய இருதயங்களை ஸ்திரப்படுத்தி அவரை நம்பத் துணைபுரிகிறார். “இரையாதே! அமைதலாயிரு” என்று அலைகளை பார்த்து கட்டளையிடக்கூடிய வல்லமை தம்மிடமுண்டு என்பதை நாம் விசுவாசித்து பலப்படவேண்டும் என்று விரும்புகிறார்.
தேவன் நம்மை நிரப்பும் போது
நான் என்ன செய்தேன்? இது என் வாழ்வை மிகவும் களிகூரச் செய்த நேரமாயிருந்திருக்க வேண்டும். அதிலும் நான் தனிமையில் தள்ளப்பட்ட நேரம், என்னுடைய கல்லூரி படிப்பிற்குப் பின்னர் எனக்கு கிடைத்த முதல் வேலை. நான் வளர்ந்த பட்டணத்திலிருந்து சில நூறு மைல்களுக்கப்பால் உள்ள ஓர் இடத்தில் கிடைத்தது. ஆனால் அந்த முதல் அடியின் சுகம் சீக்கிரத்தில் மறைந்தது. எனக்கு ஒரு சிறிய தங்கும் இடம் கிடைத்தது. அதில் இருக்கைகள் மற்றும் படுக்கைகள் இல்லை. அந்தப் பட்டணம் நான் இதற்கு முன் அறியாத இடம். அங்கு யாரையும் எனக்குத் தெரியாது. அந்த வேலை எனக்கு ஆர்வமளிப்பதாக இருந்தும், தனிமை என்னை மிகவும் வாட்டியது.
ஓர் இரவில் நான் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தேன். நான் என்னுடைய வேதாகமத்தைத் திறந்தேன். சங்கீதம் 16ல் நிலைத்து விட்டேன். அதில் வசனம் 11ல் தேவனுடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு எனக் கூறுகிறது. நான், தேவனே இந்த வேலை எனக்குச் சரியானது தான். ஆனால் நான் தனிமையை உணருகிறேன். தயவு கூர்ந்து நான் உம்முடைய சமூகத்தை உணரும்படிச் செய்யும் என ஜெபித்தேன். நான் இந்த வேண்டுதலை வெவ்வேறு வகைகளில் சில வாரங்களாகச் செய்தேன். சில இரவுகள் கடந்த போது என்னுடைய தனிமை உணர்வு சற்று தணிந்தது. நான் தேவனுடைய பிரசன்னத்தை ஆழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்தேன். சில இரவுகளில் தனிமையாகப் பிரிக்கப்பட்ட வேதனையை இன்னும் உணர்கிறேன்.
நான் இந்த வார்த்தையை மீண்டும் வாசிக்கும் போது, ஒவ்வொரு இரவும் என் இருதயம் இந்த வசனத்தில் நிலைத்து விடும். தேவன் படிப்படியாக என் நம்பிக்கையை ஆழப்படுத்தினார். அவருடைய உண்மையை, இதற்கு முன் அனுபவியாத விதத்தில் உணர்ந்தேன். என்னுடைய வேலை, என்னுடைய இருதயத்தை நான் அவரிடம் ஊற்றும்படியாக கொடுக்கப்பட்ட வேலை என்பதைக் கற்றுக் கொண்டேன். அவருடைய வாக்கின் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய ஆவியில் என்னை நிரப்பும்படி, நான் பொறுமையாக அவருடைய செயலுக்காகக் காத்திருக்கின்றேன்.
எட்டுக்கால் பூச்சியும், தேவனுடைய பிரசன்னம்
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும் ... தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும்... வேண்டிக்கொள்கிறேன். எபேசியர் 3:16-19. எட்டுக்கால் பூச்சிகள் - எந்தவொரு குழந்தையும் இவற்றை விரும்புவதில்லை. அதுவும் அவர்கள் தூங்கப் போகும் நேரத்தில் அவர்கள் அறையில் இருப்பதை விரும்புவதில்லை. என்னுடைய மகள் தூங்குவதற்கு தயாராகும் போது அவளுடைய படுக்கைக்கு மிக அருகில் ஒன்றைக் கண்டுவிட்டாள். அப்பா... எட்டுக்கால் பூச்சி... எனக் கத்தினாள். எத்தனைத் தேடியும் அந்த எட்டுக்கால் பூச்சியைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அது உன்னைக் கடிக்காது என்று அவளுக்கு உறுதியளித்தேன். ஆனால் அவள் நம்பவில்லை. நான் அவளின் படுக்கைக்கு அருகிலேயே காவல் இருக்கிறேன் என்று சொன்ன பின்பு தான், ஏற்றுக் கொண்டாள். நான் அவள் படுக்கையினருகில் நின்று கொண்டிருக்க, அவள் தன் படுக்கைக்குச் சென்றாள்.
என்னுடைய மகள் படுத்தப்பின்பு நான் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு, நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். நான் உன்னருகிலேயே இருக்கின்றேன். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள். தேவன் உன்னை அம்மாவையும் அப்பாவையும் விட அதிகமாக நேசிக்கின்றார். அவர் உனக்கு மிக அருகில் இருக்கின்றார். நீ பயப்படும் போதெல்லாம் அவரிடம் ஜெபி என்றேன். அது அவளைத் தேற்றுவதாக இருந்தது. அவளும் சமாதானத்துடன் சீக்கிரத்தில் தூங்கி விட்டாள்.
தேவன் நம் அருகிலேயே இருக்கிறாரென வேதாகமம் திரும்பத் திரும்ப நமக்கு உறுதியளிக்கின்றது (சங். 145:18, ரோ. 8:38-39. யாக். 4:7-8). சில வேளைகளில் நாம் இதை நம்புவதற்குத் தடுமாறுகிறோம். எனவே தான் பவுல் எபேசு சபை விசுவாசிகள் உள்ளான மனுஷனில் வல்லமையாய் பெலப்பட்டு உண்மையை புரிந்து கொள்ளும்படி ஜெபம் செய்கிறார். நாம் பயந்தோமாகில் தேவனுடைய பாதையை விட்டு விலகி விடுவோம். நான் என் மகளின் கரத்தை அன்போடு பற்றியபோது அவள் அமைதியாக அன்றிரவு தூங்கிவிட்டதைப் போன்று ஜெபத்தின் மூலம் நம்முடைய பரலோகத் தந்தையும் நம் அருகில் வந்திருக்கின்றார்.