2024 உலக டி20 கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதியபோது, கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகளில் ஒன்று என்று பலர் அழைக்கும் நம்பமுடியாத போட்டியாக இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் இரண்டாவது டி 20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, நாடே கொண்டாட்டத்தில் வெடித்தது. மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். பல நகரங்கள் மூவர்ணக் கொடிகளால் நிறைந்த காட்சியை ஒரு விண்ணிலிருந்து கானும்போது அது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்து வதாயிருந்தது.. மகிழ்ச்சியின் வெடிப்பில் நகரமே அதிர்ந்தது போல் இருந்தது

மகிழ்ச்சி எப்போதும் ஓர் அற்புதமான பரிசு. ஒரு நகரமும் அதிலுள்ள மக்களும் நீடித்த மகிழ்ச்சியை எவ்விதம் அனுபவிக்கக்கூடும் என்று நீதிமொழிகள் விவரிக்கிறது. “நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்” (நீதிமொழிகள் 11:10) என்று நீதிமொழிகள் கூறுகிறது. மனுஷீகத்தைக் குறித்த தேவனுடைய தெய்வீகத் திட்டத்தின்படி வாழ்கிறவர்கள், சமூகத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு செய்யும்போது தேவனுடைய நீதி ஆளுகை செய்கிறது என்கிற நற்செய்தியை மக்கள் பெறுகின்றனர். பேராசை குறைகிறது. ஏழைகளுக்கு ஆதரவு கிடைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எப்பொழுதெல்லாம் தேவனுடைய திட்டத்திற்கேற்ற வாழ்க்கைமுறை செழித்தோங்குகிறதோ, அப்போது நகரத்தில் மகிழ்ச்சியும் “ஆசீர்வாதமும்” தங்கும் (வச. 11).

நாம் தேவனுடைய வழிகளை உண்மையாக பின்பற்றினால், அதன் விளைவு அனைவருக்கும் நன்மை அளிப்பதாய் இருக்கும். நாம் வாழும் முறை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை சிறப்பாகவும், முழுமையாகவும் மாற்றும். உலகை பண்படுத்துவதற்கான தெய்வீக முயற்சியில் ஓர் அங்கத்தினராய் செயல்படுவதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். நகரத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர் நம்மை அழைக்கிறார்.