Archives: மார்ச் 2024

நித்திய மரபு

அமெரிக்காவின் பெரும் பொருளியல் வீழ்ச்சியின்போது, ஸ்ட் பெளவுல் எனப்பட்ட மணல் புயல்கள் அங்கு பேரழிவை ஏற்படுத்துகையில், கன்சாஸின் ஹியாவதாவில் வசிக்கும் ஜான்மில்பர்ன் டேவிஸ் தனக்கென ஒரு பெயரை சம்பாதிக்க முடிவு செய்தார். குழந்தைகள் இல்லாத அவர் தானே சம்பாதித்து கோடீஸ்வரர் ஆனார். டேவிஸ், சேவை அல்லது பொருளாதார வளர்ச்சியில் முதலீடு செய்திருக்கலாம். அதற்கு பதிலாக, பெரும் செலவில், அவர் தனக்கு ஒரு சிலையும் மற்றும் தனது இறந்த மனைவியின் பதினொரு பெரிய சிலைகளை உள்ளூர் கல்லறையில் நிறுவ ஏற்பாடு செய்தார்.

"கன்சாஸில் என்னை வெறுக்கிறார்கள்" என்று டேவிஸ் பத்திரிகையாளர் எர்னி பைலிடம் கூறினார். மருத்துவமனை, நீச்சல் குளம் அல்லது பூங்கா போன்ற பொது வசதிகளை கட்டுவதற்கு அவர் நிதியளிக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் விரும்பினர். ஆனால் அவர் சொன்னது என்னவென்றால், "இது என் பணம், நான் விரும்பியபடி செலவிடுகிறேன்."

சாலொமோன் ராஜா, அவருடைய காலத்தின் பெருஞ்செல்வந்தராக இவ்வாறு எழுதினார், "பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை" என்றும் "பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்" (பிரசங்கி 5:10–11). செல்வத்தின் கெடுக்கும் போக்குகளை சாலொமோன் நன்கு அறிந்திருந்தார். அப்போஸ்தலன் பவுலும் செல்வத்தின் சோதனையைப் புரிந்துகொண்டு, இயேசுவுக்குக் கீழ்ப்படிய தன் வாழ்க்கையை முதலீடு செய்யத் தேர்ந்தெடுத்தார். ரோமானிய சிறைச்சாலையில் மரணதண்டனைக்காகக் காத்திருந்த அவர், ஜெயம்பெற்றவராக, "நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்…. ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோத்தேயு 4:6-7) என்று எழுதினார்.

நமக்காக நாம் சிலை வைப்பதும் அல்லது சேர்த்து வைப்பதும் நீடிக்காது. ஒருவருக்கொருவர் மற்றும் கிறிஸ்துவுக்காக கொடுப்பதே நீடிக்கும். எப்படி நேசிக்க வேண்டும் என்பதைக் காட்டுபவர் அவரே.

சுவிசேஷத்தின் இருதயம்

குருத்தோலை ஞாயிறு முதல் உயிர்த்தெழுதல் ஞாயிறு வரை, இயேசுவைச் சிலுவைக்கு இட்டுச் செல்லும் பாதையில் அவருடைய அடிச்சுவடுகளைக் காண்கிறோம். இது ஒரு பரீட்சயமான சம்பவம் தான், ஆனால் மிக முக்கியமான ஒன்று, தேவன் தம் ஜனங்கள் மீது கொண்டுள்ள அபரிமிதமான அன்பைப் பற்றியும், நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க அவர் எந்த அளவிற்குச் செல்வார் என்பதைப் பற்றியும் பேசுகிறது. எந்தவொரு பரிச்சயத்தையும் ஒதுக்கிவிட்டு, வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தைப் புதிதாக்கப்பட்ட பார்வையுடன் அணுகுவோம். சுவிசேஷத்தின் இதயத்தில் நம் கண்களைப் பதிப்போம்: இயேசு, தேவன் நமக்கு…

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். "ஏன் இப்படி செய்தாய்?" என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், "எனக்கு பசித்தது" என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், "அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்" (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, "புசித்துக் குடித்து" மற்றும் "தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்" (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது ​​நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை "நன்மைகளால்" (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். "என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, "நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்" (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், "எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்" (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை "விசாலத்திலே" (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.

கிறிஸ்துவில் தைரியம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், மேரி மெக்டோவல் சிகாகோவின் கொடூரமான பட்டிகளை அறியாமல் வாழ்ந்தார். அவரது வீடு இருபது மைல்களுக்கு அப்பால் இருந்தபோதிலும், பட்டிகளில் உள்ள தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யத் தூண்டிய கொடூரமான அவர்களின் நிலைமைகள் பற்றி அவளுக்குத் தெரியாது. அவர்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி அறிந்தவுடன், மெக்டொவல் அவர்கள் மத்தியில் குடியேறினார். அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். ஒரு சிறிய கடையின் பின்புறத்தில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிப்பது உட்பட அவர்களின் தேவைகளை அவள் நிறைவேற்றினாள்.

தான் நேரடியாக பாதிக்கப்படாதபோதும், பிறர் நலனுக்காக துணிவது எஸ்தரும் செய்த காரியம். அவர் பெர்சியாவின் ராணி (எஸ்தர் 2:17) மேலும் பாரசீகம் முழுவதும் நாடுகடத்தப்பட்டிருந்த அவளுடைய இஸ்ரவேலர்களை காட்டிலும் பல சலுகைகளை பெற்றிருந்தார். இருப்பினும், எஸ்தர் பெர்சியாவில் உள்ள இஸ்ரவேலர்களின் நிலையை கருத்தில் கொண்டார் மற்றும் அவர்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்தார், "சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்" (4:16) என்றாள். அவள் மௌனமாக இருந்திருக்கலாம், ஏனென்றால் அவள் யூதர் என்று அவளுடைய ராஜாவாகிய அவளுடைய கணவனுக்குத் தெரியாது (2:10). ஆனால், உதவிக்காக தன் உறவினர்களின் வேண்டுகோளை புறக்கணியாமல், யூதர்களை அழிக்கும் தீய சதியை அம்பலப்படுத்த தைரியமாக  பணியாற்றினாள்.

மேரி மெக்டோவல் அல்லது ராணி எஸ்தர் போல அசாத்தியமான காரியங்களுக்காக நம்மால் நிற்க முடியாமல் போகலாம், ஆனால் பிறரின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு உதவ தேவன் நமக்கு வழங்கியதை பயன்படுத்துங்கள்.