செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே, ஒரு சுற்றுப்பாதையில், டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு சிறிய கோள் தெரிந்தது. அங்கு விலையேறப்பெற்ற தங்கம், இரும்பு, நிக்கல் மற்றும் பிளாட்டினம் கிடைக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பூமிவாசிகள் தற்போதைக்கு இந்த வளத்தை அனுபவிக்கவில்லை. அதில் உள்ளப் பாறையை ஆய்வுசெய்ய ஓர் ஆய்வுக்குழுவை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

நமக்கு எட்டாத விலையேறப்பெற்றவைகளை நினைக்கும் போது ஆசையைத் தூண்டுகிறதாகவும் அதே நேரத்தில் சோர்வடையச் செய்கிறதாகவும் இருக்கிறது. ஆனால் நிச்சயமாய் ஒருநாள், விஞ்ஞானிகள் அந்த கிரகத்தில் இருக்கும் பொக்கிஷங்களை கண்டெடுப்பர். நாம் கைக்கெட்டுகிற தூரத்தில் இருக்கும் பொக்கிஷங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? அதை நோக்கிச் செல்கிறோமா? 

முதலாம் நூற்றாண்டின் ரோம திருச்சபைக்கு, பவுல், தேவனோடுள்ள உறவின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பொக்கிஷங்களைக் குறித்து குறிப்பிடுகிறார்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” (ரோமர் 11:33). ஜேம்ஸ் டென்னி என்னும் வேத நிபுணர், இந்தப் பொக்கிஷங்களை, “உலகத்தின் பெரிய தேவையை சந்திக்கும் தேவ அன்பாகிய பொக்கிஷம்” எனக் குறிப்பிடுகிறார்.

தங்கத்தைக் காட்டிலும், வெகு தூரத்திலிருக்கும் கோள்களைக் காட்டிலும், இதுவல்லவா தேவையில் இருப்போருக்கு வேண்டும்? பரிசுத்த ஆவியானவருடைய துணையோடு தெய்வீக ஞானம் என்னும் பொக்கிஷத்தை நாம் வேதத்தில் தோண்டியெடுக்க வேண்டும். இந்தப் பொக்கிஷங்களை தோண்டி, தேவனை இன்னும் அறிந்துகொள்வதற்கு தேவன் நமக்கு உதவிசெய்வாராக.