2020ஆம் ஆண்டில் ஏறெடுக்கப்பட்ட இந்தியாவின் நடுத்தர வயதுள்ளவர்களைப் பற்றிய ஆய்வில், சராசரியாக இந்தியர்கள் இயந்திர திரை கருவிகளைப் பார்வையிடும் நேரம் தினசரி 2 மணிநேரத்தில் இருந்து 4.5 மணிநேரமாக அதிகரித்துள்ளது. ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், ஒரு கேள்விக்கான பதிலைக் கண்டறிய கூகிளில் நான் எவ்வளவு தேடுகிறேன் அல்லது நாள் முழுவதும் என் தொலைபேசியில் வரும் உரைகள், அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களின் முடிவில்லாத விழிப்பூட்டல்களுக்கு பதிலளிப்பேன் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இந்த புள்ளிவிவரம் மிகவும் குறைவாய் தெரிகிறது. நம்மை ஒழுங்கமைக்கவும், தகவல் தெரிந்துகொள்ளவும், நம்மில் பலர் கருவிகளையே தொடர்ந்து சார்ந்துகொள்ளுகிறோம்.

கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் ஸ்மார்ட்போனை விட சிறந்த உபகரணங்கள் உள்ளது. தேவன் நம்மை நேசிக்கிறார்; பராமரிக்கிறார். மேலும் நம் தேவைகளுக்காய் நாம் அவரை சார்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறார். நாம் ஜெபிக்கும்போது, “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்” (1 யோவான் 5:14) என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம் என்று வேதாகமம் அறிவுறுத்துகிறது. வேதத்தை வாசித்து அவற்றை நம் இருதயத்தில் பதிய வைப்பதின் மூலம், சமாதானம், ஞானம், விசுவாசம் போன்ற காரியங்களை அவர் நமக்கு அருளுவார் என்ற நம்பிக்கையுடன் அவரிடத்தில் நாம் ஜெபிக்கலாம் (வச. 15).

சில சமயங்களில் நம்முடைய சூழ்நிலையில் எந்த மாற்றமும் நேராதபோது, தேவன் நம் ஜெபத்தைக் கேட்கவில்லை என்று தோன்றலாம். ஆனால் எல்லா சூழ்நிலையிலும் நம்முடைய தேவைக்காய் அவரை சார்ந்துகொள்ளும்போது, அவர் மீதான நம்முடைய விசுவாசம் பெருகத் துவங்குகிறது (சங்கீதம் 116:2). அவர் நாம் கேட்ட அனைத்தையும் கொடுக்கவில்லையென்றாலும், நம்முடைய தேவைக்கேற்ப காரியங்களை ஏற்ற நேரத்தில் அருளுவார் என்ற விசுவாசத்தில் வளர நமக்கு உறுதுணையாயிருக்கிறது.