பூச்செடிகளைக் குறித்த என் கருத்தும், எங்கள் பக்கத்து வீட்டு பசுமாடுகளின் கருத்தும் வித்தியாசமானது. ஒவ்வொரு கோடையிலும் நான் பூச்செடிகளை நடுகையில், அதின் பூத்துக்குலுங்கும் அழகையே எதிர்பார்ப்பேன். ஆனால், அந்த மாடுகள் அதைக் குறித்து சற்றும் கவலைப்படுவதில்லை. அதில் ஒன்றும் மிச்சமில்லாமல் தின்றுவிடும். ஒவ்வொரு கோடையிலும் இந்த நாலு குளம்பு நண்பர்களுடன் போராடி, என் பூக்களைக் காப்பாற்றுவதே என் ஆண்டான்டு வழக்கமாக மாறினது. சிலவேளை நான் ஜெயிப்பேன், சிலவேளை அவை ஜெயிக்கும்.
இதேபோன்ற ஒரு யுத்தத்தைத் தான் கிறிஸ்தவர்களாய் நாம் ஒவ்வொருநாளும் நம் எதிரியான சாத்தானுடன் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். தேவனுடைய மகிமைக்காய் ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைவதே நம் இலக்காய் வைத்து செயல்படுகிறோம். நம் விசுவாசத்தை அவமாக்கி, நம் வளர்ச்சியை சாத்தான் தடைபண்ண வேண்டுமென்றுள்ளான். ஆனால் நம்மை பரிபூரணமுள்ளவர்களாக்க, அனைத்து அதிகாரங்களுக்கும் மேலானவரான இயேசுவால் கூடும் (கொலோசெயர் 2:10). அதாவது, அவர் நம்மை முழுமையாக்குகிறார் என்று பொருள். கிறிஸ்து சிலுவையில் பெற்ற வெற்றி என்பது, மாடுகளிடமிருந்து தப்பித்து பூத்துக்குலுங்கும் அந்த பூக்களைப் போன்றது.
இயேசு நமக்கு விரோதமாக இருந்த கையெழுத்தைக் குலைத்து (வச.14), சிலுவையின்மேல் ஆணியடித்து, நம்மைக் கட்டியிருந்த அனைத்து அதிகாரங்களின் மீதும் ஜெயமெடுத்தார். நாம் “விசுவாசத்தில் உறுதிப்பட்டு” (வச.7), அவரோடே உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம் (வச.13). அவரால் நாம் பெலப்படுத்தப்பட்டு (வச.10), எதிரியின் தாக்குதல்களை மேற்கொண்டு, கிறிஸ்துவில் வாழ்ந்து நம் மெய்யான அழகோடு பூத்துக் குலுங்குவோம்.