பத்தாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டின் கோர்டொபா பகுதியை மூன்றாம் அப்த்-அல்- ரஹ்மான் ஆட்சி செய்தார். தன்னுடைய மக்களால் நேசிக்கப்பட்டவராய், எதிரிகளை பயமுறுத்தியவராய், கூட்டாளிகள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவராய் 50 ஆண்டுகள் வெற்றிகரமாய் ஆட்சி செய்த பின்பு, தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தார். “செல்வமும், கனமும், வல்லமையும், மகிழ்ச்சியும் என்னுடைய அழைப்பிற்குக் காத்திருக்கிறது” என்று தன்னுடைய சிலாக்கியத்தைக் குறித்துக் கூறினார். ஆனால் அவர் மெய்யாய் மகிழ்ந்திருந்த நாட்களை கணக்கிட்டால், அவை வெறும் பதினான்கு நாட்களேயாகும். 

பிரசங்கியின் ஆசிரியரும் செல்வமும் கனமும் அதிகம் கொண்டவர் (பிரசங்கி 2:7-9). வல்லமையும் மகிழ்ச்சியும் உடையவர் (1:12; 2:1-3). அவருடைய சொந்த வாழ்வின் மதிப்பீடும் அபத்தமானது. மகிழ்ச்சி, குறைவானதையே கொடுக்க (2:1-2), அதிகமாய் பெருக வேண்டும் என்ற விருப்பத்தை ஐசுவரியம் அதிகரிக்கிறது (5:10-11) என்கிறார். வெற்றி என்பது திறமையால் அல்ல, காலம் தான் அதை தீர்மானிக்கிறது (9:11) என்றும் கூறுகிறார். ஆனால் பிரசங்கியின் மதிப்பீடு அப்த்-அல்-ரஹ்மானுடையது போல தெளிவில்லாமல் இல்லை. தேவனை விசுவாசிப்பதே அவருடைய மகிழ்ச்சிக்கான ஆதாரமாய் காண்பிக்கிறார். உண்பது, பிரயாசப்படுவது, நன்மை செய்வது ஆகிய எல்லாவற்றிலும் தேவனை மையமாகக் கொண்டு செய்யப்படவேண்டும் என்கிறார் (2:25; 3:12-13).

“ஓ மனிதனே! உன்னுடைய நம்பிக்கையை இந்த உலகின் மீது வைக்காதே” என்று அப்த்-அல்- ரஹ்மான் தன் முடிவைத் தெரிவிக்கிறார். நாம் நித்தியத்திற்காக படைக்கப்பட்டோம் என்பதினால் (3:11), உலகம் கொடுக்கும் மகிழ்ச்சியால் நாம் திருப்தியடைய முடியாது. அவரைப் போல நம்முடைய வாழ்விலும் உண்பது, பிரயாசப்படுவது, நன்மை செய்வது ஆகிய எல்லாவற்றிலும் தேவனை மையமாகக் கொண்டு செயல்படும்போது மெய்யான மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க முடியும்.