செடிகளை நட நான் தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, குளிர்கால களைகளின் பெரிய கொத்து ஒன்றை நான் பிடுங்கி… அதை காற்றில் எறிந்தேன். எனது கைகளின் கீழே இருந்த அடர்த்தியான புதரில் ஒரு விஷ பாம்பு படுத்து மறைந்திருந்தது- ஒரு அங்குலம்
கீழே வைத்திருந்தால் தவறுதலாக நான் அதை பிடித்திருப்பேன். அந்த கொத்தை மேலே எடுத்தவுடனே நான் அதின் வண்ணமயமான அடையாளங்களை கண்டேன், அதன் மற்ற பகுதி என் கால்களுக்கு இடையில் இருந்த களைகளில் சுருண்டிருந்தது.

சில அடிகள் தள்ளி என் கால்கள் தரையை அடைந்தபோது, நான் கடிபடாததைக் குறித்து தேவனுக்கு நன்றி செலுத்தினேன். நான் அறியாத மற்ற நேரங்களில் எத்தனை முறை அவர் என்னை பாதுகாத்திருப்பார் என்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டேன்.

தேவன் தன் ஜனத்தை காக்கிறவர். வாக்குத்தம்பண்ணப்பட்ட தேசத்தில் நுழைவதற்கு முன்பு மோசே இஸ்ரவேலர்களிடம்   “கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்” .  (உபாகமம் 31:8) அவர்கள் தேவனை காணவில்லை ஆயினும்கூட அவர் அவர்களுடன் இருந்தார்.
 
சில சமயங்களில் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத கஷ்டமான காரியங்கள் நடக்கின்றன, ஆனாலும் எண்ணிமுடியாதமுறை நாம் விழிப்புடன் இல்லாதபோதும் தேவன் நம்மை பாதுகாத்ததை நாம் பிரதிபலிக்கலாம்.

அவரது ஜனங்கள் மீது அவரது பரிபூரண, தெய்வீக பராமரிப்பு ஒவ்வொரு நாளும் உள்ளது என வேதம் நமக்கு நினைப்பூட்டுகிறது. அவர் எப்பொழுதும் நம்முடனே இருக்கிறார் (மத்தேயு 28:20).