சாம் பணி ஓய்வு பெற்றபோது, கிடைத்த தொகையின் கணக்கை ஒவ்வொரு நாளும் இரு முறை சரிபார்த்தான். அவன் 30 ஆண்டுகளாகச் சேமித்தான். அத்தோடு, பங்குச் சந்தை விலையேற்றத்தாலும் அவனுக்குப் போதுமான பணம் இருந்ததால், ஓய்வு பெற்றான். ஆனால், பங்குச் சந்தை சரியாமல் இருக்க வேண்டுமே. இந்த பயத்தினால், சாம் தன்னிடமிருந்த எஞ்சிய பணத்தைக் குறித்து கவலையுற்றான்.

“யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி” என்று எரேமியா தீர்க்கதரிசி எச்சரிக்கின்றார்.

யூதாவின் விக்கிரக ஆராதனை குறிப்பிடத்தகுந்தது. அவர்கள்  தேவனை அறிவர், அப்படியிருந்தும் அவர்களால் எவ்வாறு மற்றவற்றை வணங்க முடிகிறது? அவர்கள் தங்களின் லாபத்திற்காக இரண்டுபேரையும் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். மரணத்திற்குப் பின் உள்ள வாழ்விற்காக தேவனையும், ஏனெனில் உண்மையான தேவனால் தான், அவர்களை உயிர்த்தெழச் செய்ய முடியும். ஆனால், இப்பொழுது என்ன வேண்டும்? அந்நிய தேவர்கள் சுகத்தையும், செல்வத்தையும், செழிப்பையும் தருவதாக வாக்களிக்கின்றார்களே, ஒரு வேளை அப்படியிருந்தால், நாம் ஏன் அவர்களிடம் கேட்கக் கூடாது? என்று நினைக்கின்றார்கள்.

யூதாவின் விக்கிரக ஆராதனையைப் போன்று நாமும் சோதனையில் இழுக்கப்படுகின்றோம். திறமை, கல்வி, செல்வம் அனைத்தையும் பெற்றிருப்பது நல்லது. ஆனால் நாம் கவனத்தோடு இல்லையெனில், நம்முடைய நம்பிக்கை இவற்றின் மீது சென்றுவிடும். நாம் சாகும் போது நம்முடைய தேவன்  நமக்குத் தேவை, நாம் இப்பொழுதே தேவன் நம்மை ஆசீர்வதிக்கும்படி கேட்போம். நாம் இவற்றின் மீது சற்றே சாய்ந்து கொள்ளலாம் என்று எண்ணாதே.

உன்னுடைய நம்பிக்கை எங்கேயுள்ளது? விக்கிரகங்கள் இன்னமும் சிலைகளாகவே உள்ளன. தேவன் நமக்குத் தந்துள்ள அநேக நன்மைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.  ஆனால், இவை ஒன்றின் மீதும் நம்பிக்கையை வைப்பதில்லை என்று தேவனிடம் சொல்லு. உன்னுடைய நம்பிக்கை தேவனாகிய கர்த்தர் மீதேயிருக்கட்டும்.