வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஏன் இந்த கால்பந்து உள்ளது? நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் நான் அருகில் சென்ற போது தான், அந்த சாம்பல் நிற உருண்டை, பந்து அல்ல; அது ஒரு வாத்து என தெரிந்து கொண்டேன் – இதுவரைக் கண்டிராத அளவு மிகவும் கவலை தோய்ந்த வாத்து அது.

நான் வேலை செய்யும் இடத்துக்கு அருகிலுள்ள புல் தரையில் குளிர் கால மாதங்களில், வாத்துக்கள் கூட்டமாக வரும், ஆனால் இன்றைக்கு ஒன்றே ஒன்று, தன்னுடைய கழுத்தை வளைத்து, தன்னுடைய தலையை இறக்கைக்குள் திணித்துள்ளது. உன்னுடைய நண்பர்கள் எங்கே? என நான் கேட்டுக் கொண்டேன். பாவம், தனியாக உள்ளது. மிகவும் தனிமையில் உள்ளது. நான் அதனை அணைத்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த தனிமையான இறகுள்ள நண்பனைப் போல, ஒரு வாத்து தனிமையில் இருப்பதைக் காண்பது மிகவும் அரிது. வாத்துக்கள் கூட்டமாக வாழும். பறக்கும் போது, காற்றைக் கிழிப்பதற்கு வசதியாக, அவை v வடிவத்தில் பறக்கும். அவை சேர்ந்து வாழ்வதற்கென்றே படைக்கப் பட்டுள்ளன.

மனிதர்களாகிய நாமும் கூட்டமாக வாழும்படி படைக்கப் பட்டுள்ளோம் (ஆதி. 2:18). பிரசங்கி 4:10ல் தனிமையாக இருப்பது எத்தனை பாதுகாப்பற்றது என்று சாலமோன் அரசன் விளக்குகின்றார். “ஒருவன் விழுந்தால், அவன் உடனாளி அவனைத் தூக்கி விடுவான்; ஒண்டியாய் இருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே” என்கின்றார். அ நேகர் சேர்ந்திருப்பது பெலனைத்தரும் எனவும் கூறுகிறார், “ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12) என்று சொல்கின்றார். 

இது நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பொருத்தமானது. தேவன் நம்மை தனிமையில், பாதுகாப்பற்றவகையில் பிரிக்கப்பட்டவர்களாய் “பறக்கும்படி” விரும்பவில்லை. நமக்கு உறவுகள் அவசியம், நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவும், புதுப்பித்துக் கொள்ளவும் வளரவும் அது உதவியாய் இருக்கும்.
(1 கொரி. 12:21)

வாழ்க்கைப் பாதையில் பலத்த எதிர் காற்று வீசும் போது, இணைந்து நாம் உறுதியாக நிற்போம், இணைந்து வாழ்வோம்.