அவன் தன்னுடைய மனைவியை ஒரு கார் விபத்தில் இழ ந்தபின்பு, நாங்கள் இருவரும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் சந்தித்துக் கொள்வோம். சில வேளைகளில் அவன் பதில் தர முடியாத கேள்விகளோடு வருவான், சில வேளைகளில் அவனுக்கு ஆறுதலளிக்கும் நினைவுகளோடு வருவான். உடைக்கப்பட்ட இந்த உலகத்தின் தீய விளைவுகளில் ஒன்று தான் இந்த விபத்து என்பதை காலம் கடந்த போது ஏற்றுக் கொண்டான், தேவன் இவற்றின் மத்தியில் கிரியை செய்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், எங்களுடைய ஆலயத்தில், துயரத்தையும், அதனை எப்படி புலம்பித் தீர்ப்பது என்பதையும் குறித்து பாடம் நடத்தினார், சீக்கிரத்தில் அவர், இழப்பைச் சந்தித்து, வருந்தும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகச் சிறந்து விழங்கினார். சில வேலைகளில் தேவனுக்கு கொடுக்கும்படி நம்மிடம் ஒன்றுமில்லை என்று நினைக்கும் போது, தேவன் “போதுமானதாக இல்லை” என்று நாம் கருதுவதை எடுத்து விட்டு, அதைத் “தேவைக்கு அதிகமானதாக” மாற்றுகின்றார். 

ஜனங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி, இயேசு சீஷர்களிடம் கூறுகின்றார். அவர்களோ தங்களிடம் ஒன்றுமில்லையென மறுக்கின்றனர், இயேசு, அவர்களிடமிருந்த கொஞ்ச உணவைப் பெருகச் செய்து, சீஷர்களிடம் திரும்பி, அந்த அப்பங்களை அவர்களிடம் கொடுத்து, அவர் செய்ய விரும்பியதை நிறைவேற்றி, “நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள்!” (லூக். 9:13-16) என்றார். கிறிஸ்து அற்புதங்களைச் செய்கிறார், ஆனால், நாம் அதில் ஈடு பட வேண்டுமென அவர் விரும்புகின்றார்.

“நீ எப்படியிருந்தாலும், உன்னிடமிருப்பது எதுவாயிருந்தாலும், அதை என்னுடைய கரத்தில் வை, உடைந்து போன உன்னுடைய வாழ்க்கையை, உன்னுடைய கதையை, உன்னுடைய பெலவீனங்களை, உன்னுடைய தோல்விகளை, உன்னுடைய வேதனைகளை, உன்னுடைய துன்பங்கள் யாவற்றையும் என்னுடைய கரங்களில் வைத்து விடு, அவற்றைக் கொண்டு, நான் செய்யும் காரியங்களைப் பார்த்து நீ அதிசயிப்பாய்” என்று தேவன் நம்மைப் பார்த்துக் கூறுகின்றார். நம்முடைய வெறுமையிலிருந்து நிறைவைக் கொண்டுவர அவராலேயாகும். நம்முடைய பெலவீனங்களின் வழியாக அவருடைய வல்லமையை வெளிப்படுத்த அவராலே கூடும்.