2018 ஆம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த, விளையாட்டு வீரரான காலின் ஓ பிராடி, இதுவரை நடைபெறாத ஒரு வகை நடையை மேற்கொண்டார். அவர் அனுதின தேவைக்கான பொருட்கள் அடங்கிய வண்டியை இழுத்துக் கொண்டே நடந்தார், இவ்வாறு, ஓ பிராடி அண்டார்டிகா பகுதி முழுவதும் தனியாக, 932 மைல்களை 54 நாட்களில் கடந்தார். அது ஒரு மறக்க முடியாத, அர்ப்பணமும், தைரியமும் உடைய பிரயாணமாக இருந்தது.

பனியிலும் குளிரிலும் தனிமையாக சோர்வடையச் செய்யும் நீண்ட தூரத்தை நடந்த அனுபவத்தைப் பற்றி, ஓ பிராடி கூறும் போது, “நான் ஆழ்ந்த முயற்சிக்குள் இழுக்கப்பட்டேன், முழு நேரமும் என்னுடைய கவனம் இலக்கின் முடிவையே நோக்கியிருந்தது, என்னுடைய சிந்தனை முழுவதையும் இந்த பிரயாணத்தில் ஏற்பட்ட ஆழ்ந்த அனுபவங்களையே நினைத்துக்கொள்ள அனுமதித்தேன்” என்றார்.

இயேசுவின் விசுவாசிகளாகிய நாமும் கைக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றினை இவ்வாக்கியம் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் தேவனை மகிமைப் படுத்துபவர்களாகவும், மற்றவர்களுக்கு தேவனை வெளிப்படுத்துபவர்களாகவும் வாழ வேண்டும் என்பதையே இலக்காக கொண்டிருக்க வேண்டும். ஆபத்து நிறைந்த பாதை வழியே பயணிக்கும் பவுல், “என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” என அப்போஸ்தலர் 20:24ல் குறிப்பிடுகின்றார்.

நாம் இயேசுவோடுள்ள உறவில், நாம் அவரோடு நடக்கும் போது, நம்முடைய வாழ்க்கைப் பயணத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்வோமாக, ஒரு நாள் நம்முடைய இரட்சகரை முகமுகமாய் சந்திப்போம் என்பதைக் கருத்தில் கொண்டவர்களாய் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.