ஒரு பிரசித்திபெற்ற வேதாகமப் பயிற்சி கல்லூரியில், ஒரு மாணவன் தன்னுடைய வகுப்பில் பிரசங்கம் செய்தான். அந்த இளம் மாணவன் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தினான். உள்ளான உணர்வோடும், சரளமான பேச்சோடும் தன்னுடைய பிரசங்கத்தை முடித்து, மிகவும் திருப்தியடைந்தவனாய் அமர்ந்தான். அவனுடைய பேராசிரியர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின்னர், “இது மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டது. ஆனால், உன்னுடைய செய்தியின் எந்த பகுதியிலும் ஒரு வார்த்தை கூட தேவனைப்பற்றி சொல்லவேயில்லை” என்றார்.

சில வேளைகளில் நாமனைவரும் சந்திக்கின்ற பிரச்சனையையே அந்த பேராசிரியரும் குறிப்பிட்டார். நாம் நம்மையே முக்கியப்படுத்தி பேசுகின்றோம். (நாம் எதைச் செய்கின்றோம், எதைச் சொல்கின்றோம், என்பதையே முக்கியப்படுத்துகின்றோம்) உண்மையில் தேவன் தான் நம் வாழ்வின் கதாநாயகன். என் காரியங்கள் எல்லாவற்றையும் தேவன் பார்த்துக் கொள்வார் என்று சொல்லிக் கொண்டு, நம்முடைய செயல்கள் யாவும் என்னையேச் சார்ந்திருக்கின்றன என்பதாகச் செயல் படுகின்றோம்.

நம் வாழ்வின் காரணரும் நம்மை நடத்தும் மெய்யான வல்லமையும் தேவனே என வேதாகமம் சுட்டிக்காட்டுகின்றது. நம்முடைய விசுவாச செயல்களெல்லாமே “இயேசுவின் நாமத்தினாலும்” அவருடைய வல்லமையினால் மட்டுமே நடைபெறும் (சங். 118:10-11). தேவனே நம்மை இரட்சிக்கின்றார், நம்மை மீட்கின்றார், நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்திக்கிறார். “அது கர்த்தராலே ஆயிற்று” (வச. 23).

எனவே நம்முடைய மனப் பாரங்களை விட்டு விடுவோம். நாம் பதட்டப்படவும், ஒப்பிடவும், நம்முடைய ஆவல்களை நிறைவேற்ற நம்மை வருத்திக் கொள்ளவும் வேண்டாம். தேவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர் மீதுள்ள நம்பிக்கையோடு, அவர் காட்டும் வழி நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து, அதன் வழி நடத்தலேயாகும்.