ஒரு மனிதன் தன் வீட்டின் வெளியே ஒர் பாதுகாப்பு கேமராவைப் பொருத்திய பின்னர் அந்த அமைப்பு சரியாக இயங்குகின்றதா என்பதைச் சோதிப்பதற்காக அதன் படங்களைப் பார்வையிட்டார். அதில். ஓர் அகன்ற மார்புடைய கரிய உடையணிந்த ஓர் உருவம் அவருடைய முற்றத்தில் உலா வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் இன்னும் சற்று கூர்ந்து அந்த மனிதன் என்ன செய்கிறாரென கவனித்தார். அப்பொழுது அங்கு நடமாடிய மனிதன் அறிமுகமானவர் போலத் தெரிந்தார். கடைசியாக. அவருடைய விட்டின் பின்புறத்தில் எல்லைக்குள் நடமாடிய அந்த நபர் வேறு யாருமல்ல, தன்னுடைய உருவம் தான் அதில் பதிந்துள்ளது எனக் கண்டுகொண்டார்!

சில சந்தர்ப்பங்களில் நாம் நம்முடைய உடலைவிட்டு வெளியே வந்து நம்மைப் பார்க்கக் கூடுமானால், நம்மை எப்படிப்பட்டவராகப் பார்ப்போம்? தாவீதின் இருதயம் கடினப்பட்டது. வெளியேயிருந்து அவனைக் குறித்து அவனைப்பார்க்கும்படியாக அவனுக்கு ஒரு தேவை ஏற்பட்டது. தேவன் அவனைக் காணும் கண்ணோட்டத்தோடு, பத்சேபாளுடன் அவனுடையப் பங்கினை அவன் பார்த்தபோது, தேவன் அவனை விடுவிக்கும்படி நாத்தானை அனுப்புகின்றார் (2 சாமு. 12).

நாத்தான் தாவீதிடம் ஓர் ஐசுரியவான் தன் விருந்தாளியை உபசரிக்க, ஓர் ஏழை மனிதன் வளர்த்த ஒரேயொரு ஆட்டுக்குட்டியை எடுத்துக் கொண்ட கதையைக் கூறுகின்றான். ஐசுரியவானிடம் மந்தை, மந்தையாக ஆடுகளிருந்த போதிலும் அவன் அந்த ஏழையின் ஒற்றை ஆட்டைப் பிடித்து அடித்து சமைத்து விட்டான். இந்தக் கதையிலுள்ள ஐசுரியவான் தாவீது தான் என நாத்தான் குறிப்பிட்டபோது தான் தாவீது தான் உரியாவிற்கு இழைத்த கொடுமையை உணர்கின்றான். அதன் விளைவுகளை நாத்தான் தெரிவிக்கின்றான். அதில் முக்கியமானதென்னவெனில், அவர் தாவீதிடம், “கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்” (வச. 13) என்பதே.

தேவன் நம் வாழ்விலுள்ள பாவச் செயல்களை வெளிப்படுத்துவதன் நோக்கம், நம்மைத் தண்டிப்பதற்கு அல்ல நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, நாம் காயப்படுத்தினவர்களோடு மனம் பொருந்தவே நமக்குதவுகின்றார். மனந்திரும்புதல் மூலம் தேவனோடுள்ள உறவை நாம் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடிகிறது. தேவனோடு புதுப்பிக்கப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்ள மனந்திரும்புதல் வழிவகுக்கின்றது. தேவன் தரும் மன்னிப்பு, கிருபையின் வழியே அவருடன் நெருங்கிச் சேர முடிகிறது.