மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
மத்தேயு 5:16

என் கொள்ளுப்பாட்டியின் வேதாகமத்தை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. ஒரு குழந்தையின் கையெழுத்தில் “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்” (மத். 5:3-4) என்ற வசனங்கள் எழுதப்பட்ட ஒரு சிறிய காகிதம் அந்த வேதாகமத்தில் இருந்து விழுந்தது. அந்த வசனங்களுக்குப் பக்கத்தில் தடுமாற்றத்துடன் எழுதப்பட்ட என் அம்மாவின் கையெழுத்து இருந்தது.

வசனங்களைப் படித்து, அவற்றை மனனம் செய்ய ஏதுவாக, தன் பேரப்பிள்ளைகளுக்கு வேதாகம வசனங்களை எழுதக் கற்றுக்கொடுப்பது என் கொள்ளுப்பாட்டியின் வழக்கமாக இருந்தது. அந்த காகிதத்தைப் பார்த்தவுடன், அதன் பின்னணி என் நினைவுக்கு வந்து, என் கண்களில் கண்ணீர் வந்தது. என் அம்மா சிறுமியாக இருந்தபோது, என் தாத்தா இறந்துவிட்டார். என் அம்மாவின் தந்தை இறந்த சில வாரங்களிலேயே அவரது தம்பியும் (என் மாமா) இறந்துபோனார். இந்த துயரமான சூழ்நிலையில் என் கொள்ளுப்பாட்டி, என் அம்மாவுக்கு இயேசு கிறிஸ்து மட்டுமே தரக்கூடிய சமாதானம் பற்றி எடுத்துக்கூறினார்.

“அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும், உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்,” (2 தீமோத்தேயு 1:5) என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார். விசுவாசம் என்பது பரம்பரையாய் வரும் சொத்து அல்ல. அது பகிரப்படுவது. தீமோத்தேயுவின் பாட்டியும், அம்மாவும் தங்கள் விசுவாசத்தை அவருடன் பகிர்ந்துகொண்டார்கள். அவரும் விசுவாசித்தார்.

இயேசுவில் நம்பிக்கை வைக்கும்படி நமக்கு நெருக்கமானவர்களை நாம் ஊக்குவிக்கும்போது, நாம் அன்பு என்னும் பரம்பரைசொத்தை அவர்களுக்குக் கொடுக்கிறோம். என் கொள்ளுப்பாட்டி தன் இரட்சகர் மீது வைத்திருந்த அன்பின் சாட்சியாக என் அம்மாவின் சிறு காகிதக் குறிப்பு இருந்தது. நமக்குப் பின் வருபவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றிக் கூறுவது எத்தனை நன்மையானது.