ஒரு பையன் மூளை வாத நோயோடு பிறந்தான். அதனால் அவனால் பேசவோ பிறரோடு தொடர்பு கொள்ளவோ முடியவில்லை. ஆனால், அவனுடைய தாயார் சான்டல் பிரையன் சோர்ந்து போகவில்லை. அவன் பத்து வயதாயிருந்த போது, அவனுடைய கண்கள் மூலமாகவும். ஓர் எழுத்துப் பலகையின் உதவியாலும் அவனோடு தொடர்புகொள்ளத் தெரிந்து கொண்டார். இந்த வழிமுறைக்குப் பின்னர் அவள் சொன்னது, “அவன் திறக்கப்பட்டான் நான் அவனிடம் எதையும் கேட்கலாம்”: என்றாள். இப்பொழுது யோனத்தானால் எழுதவும், வாசிக்கவும் முடிகிறது. அவன் செய்யுள்களையும் எழுதுகின்றான். கண்கள் மூலம் புரிந்துகொள்கின்றான். அவனுடைய குடும்ப நபர்களோடும், நண்பர்களொடும் “பேசுவது” எப்படியிருக்கும் என்று கேட்டபோது, அவன் “நான் அவர்களை நேசிக்கிறேன் என்று சொல்லுவது மிகவும் அற்புதமானது” என்று கூறினான்.

யோனாத்தானின் கதை நம்மை ஆழமாகத் தொடுவதாக இருக்கிறது, நம்மையும் தேவன் எவ்வாறு பாவமாகிய சிறையிலிருந்து விடுவிக்கின்றார் என்பதை நினைக்கச் செய்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதும் போது, “முன்பு நாம் தேவனுக்கு அந்நியராக இருந்தோம்” (கொலோ. 1:21) எனக் குறிப்பிடுகின்றார். நம்முடைய துர்க்கிரியைகள் நம்மை தேவனுக்கு பகைஞராக்கியது. ஆனால், கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம் நம்மை “தேவனுக்கு முன்பாக பரிசுத்தராக” ஒப்புரவாக்கினார் (வச. 21) இப்பொழுது நாம் “சகல வித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்து கொள்ள… அவருடைய வல்லமையால் பலப்படுத்தப்படுகிறோம்” (வச. 10-11).

நம்முடைய திறக்கப்பட்ட சத்தத்தை, தேவனைத் துதிக்கவும், அவர் நம்மை பாவ வாழ்விலிருந்து விடுவித்தார் என்ற சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளவும் பயன்படுத்துவோம். தேவன் மீதுள்ள நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக் கொண்டு நம் விசுவாச வாழ்வைத் தொடருவோம்.