“மேல் நாட்டினர் கைக்கடிகாரம் வைத்திருப்பர். ஆப்பிரிக்கர்களுக்கு நேரமுண்டு” என்று ஓ.எஸ். கின்னஸ் என்பவர் தன்னுடைய “சாத்தியமற்ற மக்கள்” என்ற புத்தகத்தில் ஓர் ஆப்பிரிக்க பழமொழியைச் சுட்டிக்காட்டியிருந்தார். இது, “எனக்கு நேரமில்லை” என்று என்னிடம் கேட்டுக் கொள்பவர்களின் வேண்டுகோளை நான் நிராகரித்ததை குறித்துச் சிந்திக்க வைத்தது. நான், இந்த கொடுமையான அவசரகால அட்டவணைகளும், காலக்கெடுகளும் நம் வாழ்வை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.

சங்கீதம் 90ல் மோசே ஜெபிப்பதைப் பார்க்கின்றோம். “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி. எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (வச. 12), “நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (எபே. 5:15-16) என பவுல் எழுதுகின்றார்.

பவுலும், மோசேயும் நம்மை ஞானத்தோடு காலத்தைப் பயன்படுத்தும்படி சொல்வது, வெறுமனே கடிகாரத்தை கவனிக்கச் சொல்வதாக நினைக்க வேண்டாம். சூழ்நிலை நம்மை ஒரு நெருக்கமான கால அட்டவணையை பின்பற்றும்படி அழைக்கலாம் அல்லது நம்முடைய நேரத்தை பிறருக்குக் கொடுக்கும்படி நம்மைக் கட்டாயப்படுத்தலாம்.

இந்த உலகில் நாம் கிறிஸ்துவுக்காக நம்மை வேறுபடுத்திக் காட்ட நமக்கு சொற்ப காலம்தான் செலவிடமுடிகிறது. ஆனால், நாம் அந்த சந்தர்ப்பத்தை விரிவாக்கிக்கொள்ள வேண்டும். எப்படியெனில், நம்முடைய கடிகாரங்களையும், திட்டங்களையும் சிறிது நேரத்திற்குத் தள்ளிவிட்டு, கிறிஸ்துவின் பொறுமையோடு கூடிய அன்பை, தேவன் நம் வாழ்வில் நாம் சந்திக்கும்படி கொண்டு வருபவர்களிடம் காட்ட வேண்டும்.

காலத்திற்கப்பாற்பட்ட தேவனின் பெலத்தாலும், கிருபையாலும் வாழுகின்ற நாம் நம்முடைய நேரத்தை நித்தியத்திற்காகச் செலவிடுவோம்.