என்னுடைய முதல் வேலையை நான் ஓர் உணவகத்தில் ஆரம்பித்தேன். ஒரு சனிக்கிழமை மாலையில் ஒரு மனிதன் எங்கள் உணவகம் அருகிலேயே நின்று கொண்டிருந்தான். பின்னர் நான் வேலையிலிருந்து வெளியே வருகின்ற நேரம் எது என்று அவன் என்னிடம் கேட்டான். அது எனக்கு சற்று பயமாக இருந்தது. நேரமாகிய போதும் அவன் பொரியல்களையும், ஒரு பானத்தையும் கட்டளையிட்டான். மேலாளராலும் அவனை வெளியேற்ற முடியவில்லை. நான் மிக அதிக தூரத்திலிருந்து வராவிடினும், என்னுடைய வீட்டிற்குச் செல்ல இரண்டு இருண்ட வாகன நிறுத்தும் இடங்களையும், ஒரு பரந்த மணல்வெளியையும் கடந்து செல்லவேண்டும். கடைசியாக நடு இரவு நேரத்தில் நான் அலுவலகத்திலுள்ள தொலைபேசியில் பேசச் சென்றேன்.

தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்ட என்னுடைய தந்தை, தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து ஐந்து நிமிடத்திற்குள் என்னை அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.

என்னுடைய தந்தை எப்படியாயினும் அந்த இரவில் வந்து உதவுவார் என்று எனக்கிருந்த உறுதி, சங்கீதம் 91ல் நாம் வாசிக்கின்ற உத்தரவாதத்தை நினைவுபடுத்தியது. நம் பரலோகத் தந்தை எப்போதும் நம்மோடிருக்கின்றார். நாம் குழப்பத்திலோ, பயத்திலோ அல்லது தேவையிலோ இருக்கும் போது நம்மை பாதுகாக்கின்றார். நம்மீது கரிசனையுள்ளவராயிருக்கின்றார். “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன்” (சங். 91:5) என்று கூறுகின்றார். அவர் நாம் பாதுகாப்பாக ஓடி ஒதுங்குகின்ற இடம் மட்டுமல்ல, அவர் நம்முடைய தங்கும் இடம் (வச. 1) நாம் அடைக்கலமாகத் தங்கிக்கொள்ளும் கன்மலையாயிருக்கின்றார் (வச. 2).

நம்முடைய பயம், அபாயம், அல்லது நிலையற்ற நேரங்களில், தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பி அவரை நோக்கிக் கூப்பிடும் போது, அவர் நமக்கு மறு உத்தரவு அருளிச் செய்து, ஆபத்தில் நம்மோடிருந்து நம்மைத் தப்புவிக்கின்றவராயிருக்கிறார் (வச. 14-15). தேவன் நமக்குப் பாதுகாப்பான தங்குமிடமாயிருக்கிறார்.