“அவசரகுணத்தை எப்படியாகிலும் விட்டுவிடு” எனும் சிந்தனையாளர் டாலஸ் விலாரட் அவர்களின் கூற்றை என்னுடைய இரண்டு நண்பர்கள் எனக்கு ஞாபகப்படுத்தினபோது, அதனைக் கவனிக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். நான் எங்கே சுற்றுகிறேன், எங்கே என் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கிறேன்? எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய ஆலோசனை மற்றும் உதவியை நாடாமல், எங்கே நான் அவசர அவசரமாக ஓடுகிறேன்? தொடர்ந்து வந்த வாரங்கள் மற்றும் மாதங்களில், அந்த வார்த்தைகளை நான் நினைவுகூர்ந்து தேவன் மற்றும் தேவனுடைய ஞானத்தின் பக்கமாய் என் மனதை திசைத்திருப்பினேன். என்னுடைய வழிகளை நான் சார்ந்திராமல், அவரை நம்புவதற்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்.

சொல்லப்போனால், அவசர அவசரமாக ஓடுவது தீர்க்கதரிசி ஏசாயாவின் “பூரண சமாதானத்துக்கு” எதிரான ஒன்றாகவே தோன்றுகிறது. “உறுதியான மனதையுடைய அவர்கள் தேவனையே நம்பியிருப்பதால், தேவன் அவர்களுக்கு இந்த பரிசைக் கொடுக்கிறார். (வச. 3). நேற்றோ, இன்றோ, நாளையோ அல்லது நித்தியகாலமோ ஆனாலும் சரி அவரே நம்பிக்கைக்கு உரியவர். ஏனெனில் வேதம் சொல்லுகிறது, “கர்த்தரே நித்திய கன்மலையாக இருக்கிறார் (வச. 4). நம்முடைய முழுமனதுடனும், அவரை நம்புவதே, அவசர வாழ்க்கைக்கான மாற்று மருந்து.

நாம் எப்படி அவசரப்படுகிறோம் அல்லது ஆத்திரப்படுகிறோம் என்பதை உணருகிறோமா? பார்க்கப்போனால், அதற்குமாறாக, நாம் ஒருவித சமாதானத்தை அனுபவிக்கலாம் அல்லாவிட்டால், நாம் இந்த இரண்டிற்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ளோம்.

நாம் எங்கே இருந்தாலும் சரி, நம்மை ஒருபோதும் கைவிடாதவரும் நமக்கு சமாதானத்தை தருகிறவருமாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையாய் உள்ள நாம் எல்லாவித அவசரத்தையும் களைந்துபோட்டிட வேண்டுகிறேன்.