சூசன்னா சிபர் 18-ஆம் நூற்றாண்டின் பிரபல பாடகிகளில் ஒருவர். பாடல்திறனோடு தன் திருமண வாழ்க்கையில் நிகழ்ந்த அவலங்களுக்காகவும் இவள் அதிகமாய் அறியப்பட்டிருந்தார். ஆகையால்தான், புகழ்மிக்க ஹேண்டலின் மேசியா (Messiah) இசைவரிகளை ஏப்ரல் 1742-ஆண்டில் டப்ளின் நகரில் அரங்கேற்றினபோது, நேயர்களில் அநேகர் இவளை ஒரு தனிபாடகியாக பாடவிட்டதை அங்கீகரிக்கவில்லை.

துவக்கவிழாவில் பாடகி சிபர் “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார் (ஏசா. 53:3) என்ற வரியை பாடினாள். அந்த வார்த்தைகளை கேட்டு பக்திபரவசமடைந்த போதகர் பாட்ரிக் டெலனி என்பவர் எழும்பி நின்று, “ஸ்திரியே, இதன் நிமித்தம் உன் பாவங்கள் அனைத்தும் உனக்கு மன்னிக்கபடுவதாக!” என்றார்.

சூசன்னா சிபருக்கும், ஹேண்டலின் மேசியாவிற்கும் உள்ள தொடர்பு தெளிவானது. “துக்கம் நிறைந்தவரான” – மேசியா இயேசு – பாவத்தின் காரணமாகவே “அசட்டைபண்ணப்பட்டவரும் புறக்கணிக்கப்பட்டவருமாக” இருந்தார். “என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார் (வச. 11). எனவும் தீரிக்கன் ஏசாயா கூறியுள்ளார்.

மேசியாவிற்கும் நமக்கும் உள்ள தொடர்பும் அப்படியே உள்ளது. சூசன்னா சிபரோடோ அல்லது நியாயந்தீர்க்கும் கூட்டத்தாரோடோ அல்லது இரண்டிற்கும் இடையிலோ நாம் எங்கு நின்றாலும், நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்பி தேவன் அருளும் மன்னிப்பை பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். தம்முடைய வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக இயேசு பிதாவாகிய தேவனோடு நமக்கு உள்ள உறவை மீட்டெடுக்கிறார்.

இதன் நிமித்தமாக – இயேசு செய்த எல்லாவற்றினிமித்மாக – நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதாக