உலகத்தின் வடபகுதிக்கு இன்றுதான் வசந்த காலத்தின் முதல் நாள். நீ ஆஸ்திரேலியாவில் வசித்தால், இன்று இலையுதிர் காலத்தின் முதல் நாள். வட அரைக்கோளத்தில் வசந்த கால சம பகல் இரவு நாள் இருக்கும்போது, தென் அரைக்கோளத்தில் இலையுதிர்கால சம பகல் இரவு நாளாக இருக்கும். இன்று, பூமத்திய பகுதியில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும். எனவே இன்று பகல் நேரமும், இரவு நேரமும் ஏறத்தாழ சமமாக பூமி முழுவதும் இருக்கும்.

புதிய பருவகாலம் என்பது அநேகருக்கு முக்கியமானதாகத் தோன்றும். சிலர் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பர். ஏனெனில், புதிய கால நிலை புதிய நம்பிக்கையைத் தரும் என நம்பினர். ஒரு வேளை நீயும் விஸ்கான்சினில் வசந்த காலத்தை எதிர்பார்த்து, குளிர்கால முடிவை காலண்டரில் குறித்துக் கொண்டிருக்கலாம். அல்லது நீ மெல்போர்னில் வசித்து வந்தால், இலையுதிர்காலம் சூரியனிடமிருந்து ஒரு விடுதலையைத் தருமென எதிர்பார்க்க முடியாது.

நம் வாழ்க்கையிலும் பல கால நிலைகளின் வழியாகக் கடந்து செல்கிறோம். ஆனால் இதற்கும் பருவகாலத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. பிரசங்கியை எழுதியவர் சொல்கிறார், சூரியனுக்குக் கீழே ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு. தேவன் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலத்தைக் குறித்திருக்கின்றார். அப்படியொரு வாழ்க்கை காலத்திற்குள் நாம் வாழ்கின்றோம் (3:1-11).

மோசே தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய காலத்தைக் குறித்துச் சொல்கின்றார். (உபா. 31:2) தன்னுடைய தலைமைத்துவ பணியை யோசுவாவிடம் கொடுக்க வேண்டியிருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். பவுல் ரோமாபுரியில் வீட்டுச் சிறையிலிருந்தபோது ஒரு தனிமையான காலத்தைச் சந்தித்தார். அவர் தன்னைப் பார்க்க வரும்படி பார்வையாளர்களை அழைக்கின்றார். ஆனாலும் தேவன் அவர் பக்கம் இருக்கிறார் என்பதை உணர்கிறார்.

வாழ்வில் எத்தகைய காலம் இருந்தாலும் சரி, நம்முடைய தேவன் வல்லவராகவும், உதவுபவராகவும், நமக்குத் துணையாளராகவும் இருப்பதால் அவருக்கு நன்றி கூறுவோம்.