சில நாட்களுக்கு முன்பு நான் எனது நண்பனோடு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கு பார்வையிட வந்தோரின் வரிசை, குறைவாகவே காணப்பட்டது. ஆனால், அக்கட்டிடத்தின் உள்ளே சென்றபின் அந்த நுழைவு வராண்டா, படிக்கட்டு, அதன் வழியேயுள்ள மற்றொரு அறை அனைத்திலும் இருந்த நீண்ட வரிசை மக்களைக் கண்டோம். ஒவ்வொரு புதிய திருப்பமும் நாங்கள் இன்னமும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைத் தெரிவித்தது.

கவர்ச்சிகரமானவற்றிலும், கருத்து பூங்காக்களிலும் மக்கள் வரிசை சிறிதாக தோன்றும்படி கவனமாக வழியை அமைக்கின்றனர். எனினும் நாங்கள் “கட்டிடத்தின் திருப்பத்தை” அடைந்தபோது ஏமாற்றங்களையே சந்தித்தோம்.

சில வேளைகளில் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் மிகவும் கடுமையாக இருக்கலாம். நாம் எதிர்பார்க்கும் வேலை கைக்கூடவில்லை, நாம் நம்பிய நண்பர்கள் ஏமாற்றிவிட்டனர், நாம் ஏங்கிய வாழ்க்கைத் துணை அமையவில்லை. இத்தனை இதய நொறுங்குதலிலும் தேவனுடைய வார்த்தைகள், அவர் மீதுள்ள நம்பிக்கையைப் பற்றி ஒரு புதிய உண்மையைப் பேசுகின்றது, அப்போஸ்தலனாகிய பவுல், “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகின்றோம், மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோம. 5:3-5) என எழுதுகிறோம்.

நாம் நமது நம்பிக்கையை தேவன் மீது வைக்கும் போது, எத்தனை தடைகளை நாம் சந்தித்தாலும் அவருடைய ஆவியானவர் மூலம், நாம் அவரால் நிபந்தனையற்று நேசிக்கப்படுகிறோம், ஒரு நாள் நாமும் அவரோடு கூட வாழ்வோம் என்ற உண்மையைப் பேசுகின்றார். நமக்கு அடிக்கடி ஏமாற்றத்தையே தருகின்ற இந்த உலகில் தேவன் நமக்கு உண்மையான நம்பிக்கையைத் தந்திருக்கிறார் என்பது எத்தனை நலமானது.