கிளியோப்பெட்ரா, கலிலியோ, ஷேக்ஸ்பியர், எல்விஸ், பீலே ஆகிய இவர்கள் பிரசித்திப் பெற்வர்களாகையால் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள ஒரேயொரு பெயரே போதுமானது. சரித்திரத்தில் இவர்கள் முக்கிய இடத்திலிருக்கக் காரணம், அவர்கள் யார் எதைச் செய்தார்கள் என்பதே. ஆனால், இவைகளுக்கும் மற்ற எந்த பெயருக்கும் மிகவும் மேலாக நிற்கும் ஒரு பெயர் உண்டு.

தேவகுமாரன் இந்த உலகில் பிறப்பதற்கு முன் தேவதூதன் மரியாளுக்கும் யோசேப்புக்கும் அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத். 1:21), “அவர் உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார்” (லூக். 1:32) எனக் கூறினார். இயேசு பிரபலமானவராக இவ்வுலகிற்கு வரவில்லை. ஆனால், ஒரு பணிவிடைக்காரனாகத் தன்னைத் தாழ்த்தி, சிலுவையில் மரித்தார். எனவே யார் யார் அவரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களை அவர் மன்னித்து, அவர்களைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுதலையாக்குகின்றார்.

அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதுகின்றார், “ ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்னும்படிக்கு எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி. 2:9-11).

நம்முடைய மிகப் பெரிய மகிழ்ச்சியிலும் அவசரமானத் தேவைகளிலும் நாம் பற்றிக் கொள்ள வேண்டிய நாமம் இயேசு என்பதே. அவர் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார். அவருடைய அன்பு ஒருபோதும் மாறாதது.