போதுமானதல்லவோ?
ஆலயத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது என்னுடைய மகள் பின் இருக்கையில் அமர்ந்தபடி பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மற்ற குழந்தைகள் அவளிடம் பகிர்ந்தளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தன. நான் அவர்களின் எண்ணத்தை திசை திருப்பும்படி. சிற்றுண்டிகளைச் சேமித்து வைப்பவளிடம், இன்றைய வகுப்பில் என்ன செய்தீர்கள்? என்று கேட்டேன். அவர்கள் ஒரு கூடை நிறைய ரொட்டிகளையும் மீனையும் தயாரித்ததாகவும், ஏனெனில் ஒரு குழந்தை இயேசுவுக்கு ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீனையும் கொடுத்தது. இயேசு அதைக் கொண்டு 5000 பேருக்கு மேலான ஜனங்களை போஷித்தார் (யோவா. 6:1-13) எனக் கூறினாள்.
இது அச்சிறுவனின் பகிர்ந்தளிக்கும் குணத்தைக் காட்டுகிறது. தேவன் உன்னுடைய மீனையும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்கிறாரென நினைக்கிறாயா? எனக் கேட்டேன். இல்லை சும்மா என பதிலளித்தாள்.
நான் அவள் அத்தனை பிஸ்கட்டுகளையும் அவளே வைத்துக் கொள்வதை ஊக்குவிக்கக் கூடாதென முயற்சித்தேன். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. அனைவருக்கும் கொடுக்கும்படி போதுமானதாக இல்லை என்றாள்.
பகிர்தல் என்பது கடினமானதுதான். நம் கையில் உள்ளதைப் பற்றிக் கொள்வது எளிதுதான். ஒரு வேளை நாம் கணக்குப் போட்டு, அனைவருக்கும் போதியதாக இல்லை எனக் காரணம் கூறலாம். நம் கணிப்பு என்னவெனின் நாம் இப்பொழுது கொடுத்து விட்டால் பின்னர் நமது தேவைக்கு ஒன்றுமிராது என்பதே.
நாம் அனைவரும் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள். நாம் உதாரண குணமுள்ளவர்களாயிருக்கும்படி, தேவன் நம்மை எல்லா வகைகளிலும் வளப்படுத்தியுள்ளார் (2 கொரி. 9:10-11) என பவுல் நினைப்பூட்டுகின்றார். பரலோகம் என்பது பற்றாக்குறையை கணக்கிடும் இடம் அல்ல, ஏராளமானவற்றையே கொண்டது. நாம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளலாம். ஏனெனில் நாம் மற்றவர்களிடம் உதாரத்துவமாயிருக்கும்போது தேவன் நம்மை கவனித்துக் கொள்வார் என வாக்களித்துள்ளார்.
நன்றியறிதலை வளர்த்துக் கொள்ளல்
நீ நன்றியுள்ள ஓர் உணர்வை வளர்த்துக் கொள்ள விரும்புகிறாயோ? பதினேழாம் நூற்றாணடில் வாழ்ந்த பிரிட்டனைக் சேர்ந்த கவிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட், தன்னுடைய நன்றியுணர்வு என்ற பாடலின் இலக்கை அடைய உற்சாகப்படுத்துகிறார். “நீர் எனக்கு மிக அதிகமானவைகளைக் கொடுத்திருக்கிறீர் இன்னுமொன்றை, நன்றியுணர்வுள்ள இருதயத்தைத் தாரும்.” என்ற பாடல்கள் மூலம் தன் வாசகர்களிடம் ஊக்குவிக்க விரும்பினார்.
ஹெர்பர்ட், நன்றியோடிருக்க அவருக்குத் தேவையான ஒன்றைக் கண்டு கொண்டார். அது தேவன் அவருக்குத் தந்திருக்கின்ற ஆசிர்வாதங்களைக் குறித்த ஒரு விழிப்புணர்வு.
இயேசு கிறிஸ்துவே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்று என்று வேதாகமம் நமக்குத் தெரிவிக்கின்றது. ரோமர் 11:36ல் “சகலமும்; அவராலும் அவர் மூலமாயும அவருக்காகவும் இருக்கிறது” எனச் சொல்லப்பட்டுள்ளது. “சகலமும்” என்பது ஆடம்பர மற்றும் இவ்வுலகில் ஒவ்வொரு நாள் வாழ்விற்கும் தேவையான அனைத்து நன்கொடைகளையும் குறிக்கும். நம் வாழ்வில் நாம் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு நன்மையும் நம் பரலோகத் தந்தையிடமிருந்து வருகிறது (யாக். 1:17). அவர் நம்மீது வைத்துள்ள அன்பினால், விருப்பத்தோடு இந்த நன்கொடைகளைத் தருகிறார்.
என்னுடைய வாழ்வில் தேவனுடைய ஆசீர்வாதங்களைக் குறித்த விழிப்புணர்வை நான் விரிவாக்கிக்கொள்ளுவதற்கு, நான் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கின்ற மகிழ்ச்சிக்கு காரணர் என் தேவனே என்பதை ஒப்புக் கொள்ளக் கூடிய இருதயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கற்றுக் கொண்டேன். நான் பெற்றுக் கொண்ட நன்மைகள் என்னுடைய முயற்சியால் பெற்றுக் கொண்டவையல்ல. இன்றைக்கு நான் அனுபவிக்கும் நன்மைகள்: ஒரு மென்மையான காலையில் நான் ஓடுவதும், மாலைப் பொழுதில் என் நண்பர்களோடு செலவிடுவதும், என் சமையல் பொருட்கள் அறையில் நிரப்பப்பட்டுள்ள பொருட்களால், நான் என் மகள்களோடு செய்துகொள்ளும், பிரெஞ்ச் டோஸ்ட், நான் என் ஜன்னல் வழியே வெளியுலகைப் பார்க்கும் போது கிடைக்கின்ற அழகும், புதிதாக தயாரிக்கப்பட்ட சூடான காப்பியின் நறுமணமும், இவையெல்லாம் தேவன் தரும் ஆசீர்வாதங்களே.
இதுவரை தேவன் எனக்குத் தந்துள்ள மிக அதிகமான நன்மைகள் எவை? அவைகளைக் காணும்படி நம் கண்களைத் திறப்போமாகில் ஒரு நன்றியுணர்வுள்ள இருதயத்தை உருவாக்கிக்கொள்வோம்.