எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லேஸ்லி ஹோகட்டுரைகள்

உள்ளே நுளைவதற்கான உரிமை

அது இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியில் போடப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைப் போலவே இருந்தாலும், மிகவும் பயபக்தியை தூண்டக்கூடியதாக இருந்தது. யாத்திராகமம் 25 முதல் 27 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள நுணுக்கமான விளக்கங்களின்படியே அதே அளவிலும், அதே மாதிரியிலும் அமைக்கப்பட்டதாய் இருந்தது. ஆனால், முதலில் அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தைப் போல உண்மையான தங்கமோ, சீத்தீம் மரமோ பயன்படுத்தப்படவில்லை. அந்த மாதிரி ஆசரிப்புக் கூடாரம் இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியிலிருந்த பாலைவனத்தில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கத்தக்கதாக உயர்ந்து நின்றது.

எங்களுடைய பயணக் குழுவினர்கள், அந்த, மாதிரி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருந்த “பரிசுத்த ஸ்தலம்”, “மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்” சென்று “உடன்படிக்கைப் பெட்டியைப் பார்க்க” அழைத்து செல்லப்பட்ட பொழுது எங்களில் ஒருசிலர் உள்ளே நுழைவதற்கு சற்றே தயங்கினார்கள். இது பிரதான ஆசாரியன் மட்டும் செல்லக் கூடிய மகா பரிசுத்த ஸ்தலமல்லவா? மிகவும் சாதாரணமாக நாங்கள் இதற்குள் நுழைவது எப்படி? என்று கூறினார்கள்.

ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் மக்கள் அவர்களது பலிகளைச் செலுத்த ஆசரிப்புக் கூடாரத்தை நெருங்கும் பொழுது, சர்வ வல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தில் வரப்போகிறோம் என்ற உணர்வினால் எவ்வளவு பயத்துடன் வந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க இயலுகிறது. தேவன் அவர்களுக்கு கூறவேண்டிய காரியங்களை எப்பொழுதெல்லாம் கூற வேண்டுமென்று விரும்பினாரோ, அப்பொழுதெல்லாம், மோசேயின் மூலமாக கூறிய பொழுது எவ்வளவு ஆச்சரியம் அடைந்திருப்பார்கள்!

இயேசு கிறிஸ்துவின் மரணத்தினாலே நமக்கும்; தேவனுக்கும் இடையே உள்ள திரை கிழிக்கப்பட்டதால், இன்று நீங்களும் நானும் தைரியமாக தேவனுடைய கிருபாசனத்தண்டையில் சேருகிறோம். (எபி. 12:22-23). நாம் விரும்பும் பொழுதெல்லாம் தேவனோடு பேசலாம்; அவருடைய வசனத்தை வாசிப்பதின்மூலம் அவர் நமக்கு கூறுவதை நேரடியாகக் கேட்கலாம். இஸ்ரவேல் மக்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவது ஒரு கனவாக இருந்தது. ஆனால், நாமோ தேவனோடு கூட நேரிடையாக தொடர்பு கொள்வதை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறோம். தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக பிதாவிடம் வரக்கூடிய பிரமிக்கத்தக்க இந்த உரிமையை மிகச் சாதாரணமாக கருதாமல் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதுகிறோம்.

தகப்பனாரைப் போலவே

ஒரு குழந்தை அதன் பெற்றோரைப் பார்த்து, அவர்களைப் போலவே அனைத்து செயல்களையும் செய்ய பார்ப்பது அதிக மகிழ்ச்சி அளிக்கும் காரியமாகும். காரில் குழந்தைகள் ஆசனத்தில், பெல்ட் மாட்டப்பட்டு அமர்ந்திருக்கும் சிறுவன், அவனது கற்பனையில் காரின் ஸ்டீயரிங்கை இயக்குவதுபோல எண்ணிக்கொண்டே, காரை ஓட்டுகிற தனது தகப்பனார் என்ன செய்கிறார் என்று இடையிடையே உன்னிப்பாகக் கவனித்து செயல்படுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

நான் சிறுவனாக இருந்தபொழுது அவ்வாறு செய்ததை இப்பொழுது நினைவுகூருகிறேன். என் தகப்பனார் செய்ததுபோலவே, நானும் செய்தது எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது. நான் அவரைப் போலவே செயல்பட்டதைப் பார்த்த என் தகப்பனார் என்னைவிட அதிகம் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பது நிச்சயம்.

இழந்து போனவர்களைத் தேடி, தேவையானவர்களுக்கு உதவியளித்து, வியாதியஸ்தர்களுக்கு சுகம் அருளி, பிதா செய்ததையே அவரது அன்பின் குமாரனும் செய்ததைப் பார்த்த தேவனும், அதைப் போலவே மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று எண்ணுகிறேன். “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளை செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (யோவா. 5:19) என்று இயேசு கூறினார்.

“பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து… நம்மில் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்” என்று (எபே. 5:1,2) நாமும் அவ்வாறே செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் இயேசுவைப் போலவே தொடர்ந்து வளரும்பொழுது, பிதா நேசிப்பது போலவே நாமும் நேசிக்கவும், அவர் மன்னித்ததுபோல மன்னிக்கவும், அவர் இரங்குவதுபோல இரங்கவும், அவருக்கு பிடித்தமான வழியில் வாழவும் செய்ய முயற்சிப்போம். ஆவியின் வல்லமையினால், அவரது செயல்களைப்போலவே நாமும் செய்வது மிக மிக மகிழ்ச்சியான காரியமாகும். ஏனெனில் அதன் பலன் பிதாவின் அன்பும், கனிவும் நிறைந்த புன்சிரிப்பாகும்.