எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜுலி ஆக்கமன் லிங்க்கட்டுரைகள்

முழுமையான சூரிய வெளிச்சம்

நான் புதிதாக வாங்க எண்ணின செடி சுற்றப்பட்டிருந்த முகப்புத்தாளில் கொடுக்கப்பட்ட விவரங்களில், “இந்தச் செடி வளர்வதற்கு முழு சூரிய வெளிச்சம் தேவைப்படுகிறது” என்று தெளிவாகக் கொடுக்கப்பட்டிருந்ததை நன்கு அறிந்திருந்தேன். எங்களது முற்றம் பொதுவாக நல்ல நிழலாகத்தான் இருந்தது முழு சூரிய வெளிச்சம் தேவைப்படும் தாவரங்களுக்கு எங்களது முற்றம் ஒத்துவராது. ஆனால் அந்தச் செடி எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் நிறம், அதன் இலைகளின் வடிவம், அதன் உயரம், அதன் வாசனை அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே அந்தச் செடியை வாங்கி வீட்டிற்கு கொண்டு…

உற்று கவனித்தல்

நான் என் வீட்டின் ஓர் நிகழ்ச்சிக்காக, என் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது, வரும் விருந்தினர் நான் சுத்தம் செய்தவற்றை பார்க்காமல், நான் சுத்தம் செய்யாதவற்றை மாத்திரம் பார்ப்பார்கள் என்று எண்ணி மனம் தளர்ந்து போனேன். இந்த எண்ணம் வேதாந்தரீதியாகவும், ஆத்தும ரீதியாகவும் ஓர் கேள்வியை எழுப்பியது. ஏன் மக்கள் சரியானதைப் பார்க்காதவாறு, சீக்கிரம் தவறான காரியங்களையே பார்க்கிறார்கள் என்பதே. நாம் அநேகமாக அன்பான காரியங்களை ஞாபகத்தில் வைக்காமல் கொடூரமான காரியங்களையே ஞாபகத்தில் வைக்கிறோம். குற்றங்களே நம் மனதை ஈர்க்கிறதேயன்றி தயாளமான செயல்களை…

பரலோகத்தைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு

எங்கள் சபைக்கு மிக அருகில் உள்ள சாலையில் அமைத்துள்ள உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்காவில் தான் அனைத்து சபை சமூக கூடுகை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த மாலை வேளையிலே, அப்பூங்காவில் எனக்கு பல வருடங்களாக பரிட்சயமானவர்களிடம் மற்றும் சமீபத்தில் சந்திக்காதவர்களிடமும் நான் பேசி மகிழ்ந்து வாழ்த்து பரிமாறி, தாவர விரும்பிகளால் செவ்வையாய் பராமரிக்கப்பட அச்சூழலை ரசித்து மகிழ்ந்திருக்கையில், ஒரு சபையானது எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல சின்னங்கள் அங்கு பரவியிருந்ததை உணர்ந்தேன். அதாவது பரலோகம் எப்படியிருக்கும் என்பதை சிறிது வெளிக்காட்டுவது போல்…

சிறந்த சந்தோஷம்

நான் சிறுவனாய் இருந்த பொழுது, பாதுகாப்பற்றது அல்லது ஞானமற்றது என்று என் பெற்றோரால் கருதப்பட்ட காரியங்களுக்காக, நான் எவ்வளவுதான் கெஞ்சினாலும், திறமையாக வாதாடுவதாகக் கருதி “எல்லோரும் இதை செய்கிறார்கள்” என்று சொன்னாலும், அதற்கு அவர்கள் சம்மதித்ததேயில்லை.

நாம் வளர வளர, நம்முடைய விருப்பத்தின்படி நடப்பதற்காக, நமது வாதங்களில், சாக்கு போக்குகளையும், சாமர்த்தியமான காரணகாரியங்களையும் பிணைத்து, “யாரும் பாதிக்கப்படமாட்டார்கள்.” “இது சட்டவிரோதமானதல்ல”, “முதலில் பாதிக்கப்பட்ட இதை அவன்தான் எனக்கு செய்தான்”, அல்லது “அவளுக்கு இது தெரிய வராது” என்று கூறுவோம். இதில், நம்முடைய தேவையே மற்றெல்லாவற்றையும்…

பரிபூரணர்களாக இருப்பது எப்படி?

எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இருக்க வேண்டுமென்ற உணர்வு கிறிஸ்மஸ் காலங்களில் மிகவும் அதிகமாக ஏற்படுகிறது. கிறிஸ்மஸை சிறந்த முறையில் கொண்டாடுவது பற்றி யோசித்து அதற்காக நமது முழு முயற்சியையும் பயன்படுத்துகிறோம். கடைகளுக்குச் சென்று சிறந்த பரிசுப் பொருட்களை தேர்ந்தெடுக்கிறோம். கிறிஸ்மஸ் தினத்தன்று சிறந்த உணவு தயாரிக்க வேண்டுமென்று திட்டமிடுகிறோம். சிறந்த வாழ்த்து அட்டைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது சிறந்த குடும்பக் கடிதங்களை எழுதுகிறோம். நம்மால் செயல்படக்கூடிய திறமையைவிட, சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற கற்பனைத்திறன் மிக அதிகமாக இருப்பதால் நமது முயற்சிகள் மனச் சோர்விற்கும், ஏமாற்றத்திற்கும் நேராக…

மிகவும் சிறந்த பரிசு

ஓவ்வொரு ஆண்டும் எங்களது ஊர் தாவரஇயல்பூங்கா, உலகமெங்கும் பல்வேறு முறைகளில் நடக்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை கண் காட்சியாக காண்பிக்கும் பொறுப்பை திறம்பட நடத்துகிறது. அதில் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி பிரான்ஸ் தேசத்து கிறிஸ்மஸ் குடில் காட்சியாகும். வழக்கமாக மேய்ப்பர்கள், பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகியவற்றை முன்னணையில் படைக்கும் ஞானிகள் அடங்கிய காட்சியாக இல்லாமல், பிரான்ஸ் தேசத்து கிராமப்புற மக்கள் அவர்களது பரிசுகளை பாலகன் இயேசுவுக்கு படைக்கும் காட்சியாக அது இருந்தது. அவர்கள் ரொட்டி திராட்ச ரசம், பாலாடைக் கட்டி, பூக்கள் போன்ற தேவன்…

நம்மை நாமே பார்த்துக் கொள்ளல்

முகம் பார்க்கும் கண்ணாடிகளோ, பளபளப்பான பரப்புகளோ கண்டு பிடிக்கும் முன்பு அநேக ஆண்டுகளாக மக்கள் அவர்களது பிம்பத்தை அதிகமாக பார்த்ததே கிடையாது. தேங்கி நிற்கும் தண்ணீர்க் குட்டைகள் ஓடைகள், ஆறுகள் இவைகளின் மூலம்தான் அவர்கள் அவர்களது முகத்தின் சாயலைப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடி அந்த நிலைமையை முற்றிலும் மாற்றிவிட்டது, கேமரா கண்டு பிடிப்பு நமது தோற்றத்தைப் பற்றிய எண்ணங்களை புதிய உயர்வான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. கேமராவின் உதவியினால் நமது வாழ்க்கை முழுவதும், எந்தப் பருவத்திலும் நமது நிலையான பிம்பத்தை…

கண்களுக்கு மறைந்து போதல்

நான் வசிக்கும் பகுதியில் தாவரங்களில் சில பகுதிகள் பூமிக்கு அடியிலேயே சில காலம் இருந்து விட்டு, மறுபடியும் முளைத்து வெளியே வரக்கூடிய காலமாகும். பூமியியே பனி விழுந்து தரை உறைந்து போகும் முன்பு தாவரங்கள் அழகாக பூத்துக் குலுங்குகின்றன. பனிக்காலம் முடிந்து மறுபடியும் வசந்தகாலம் வரும் வரை பூமிக்கடியில் மறைந்திருக்கின்றன. பனியிலே இறுகிப்போன மண் இளக்கமானவுடன், இவை மறுபடியும் தங்கள் தலைகளை வானத்திற்கு நேராய் உயர்த்துகின்றன. உயர்த்தி பற்பல வண்ணப் பூக்களால் தங்கள் சிருஷ்டிகரை ஆராதிக்கின்றன.
நமது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் செயலற்று அமைதியாக…

ஆவிக்கேற்ற பரிசோதனை

நமது உடலில் ஏற்படும் உடல் நலக்குறைவுகளினால், உடல் நலம் அதிகமாக பாதிக்கப்படும் முன்பே ஒழுங்காக மருத்துவ பரிசோதனை அவ்வப்பொழுது செய்து கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். நமது ஆவிக்கேற்ற வாழ்வின் நலத்திற்காக மாற்கு 12:30ல் இயேசுவினால் கூறப்பட்டுள்ள தலை சிறந்த கட்டளையை அடிப்படையாகக் கொண்டு சில கேள்விகள் கேட்பதின் மூலம் நமது ஆவிக்கேற்ற வாழ்வின் நலத்தை பரிசோதனை செய்யலாம்.
தேவன் முதலில் என்மேல் அன்பு கூர்ந்தபடியினால் அவரை நான் என் முழு மனதுடன் நேசிக்கின்றேனா? உலகப் பிரகாரமான ஆஸ்தியா அல்லது கிறிஸ்துவுக்குள் எனக்கு…