எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

உட்புறக் காட்சி

ஓய்வு பெற்ற இயற்பியல் வல்லுநராகிய ஏரி வான்ட் ரயட் வித்தியாசமான முறையில் கலைப் பொருட்களை செய்து வருகிறார். அவர் தாவரங்களையும், இறந்த போன விலங்குகளையும் வரிசையாக அடுக்கி அவற்றின் எக்ஸ்ரே எடுக்கிறார். பின்பு மேம்படுத்தப்பட்ட x-ரேக்களை கணிணியின் நினைவகத்தில் இடுவதற்காக அவற்றை மின் செய்தியாக மாற்றுகிறார். பின்பு அவரது படங்களின் சில பகுதிகளுக்கு வண்ணமேற்றுகிறார். அவரது கலைத்திறன், பூக்கள், மீன் பறவைகள், ஊர்வன, குரங்குகள் போன்றவற்றின் சிக்கலான உள் அமைப்பை தெளிவாக விளக்குகின்றன.
பொருட்களை வெளியே பார்க்கும் காட்சியை விட உள் அமைப்பைப் பார்க்கும்…

கவனக் குறைவான வார்த்தைகள்

நான் என் வாகனத்தை ஏறக்குறைய அரைமணி நேரம் ஓட்டிச் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென, பின் இருக்கையிலிருந்த எனது மகள் வீரிட்டுக் கத்தினாள். “என்ன நடந்தது” என்று நான் கேட்ட பொழுது அவளுடைய சகோதரன் அவளது கையைப் பிடித்து இழுத்தான் என்றாள். அவள் அவனைக் கிள்ளினதினால் அவள் கையை இறுகப்பிடித்து இழுத்ததாக அவன் கூறினான். அவன் அன்பற்ற கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசினதினால் அவன் கையைக் கிள்ளினேன் என்றாள்.
துரதிஷ்டவசமாக, சிறு பிள்ளைகள் மத்தியில் காணப்படும் இப்படிப்பட்ட தன்மை பெரியவர்களின் உறவுகள் மத்தியிலும் ஏற்படுகிறது. ஒருவர்…

தரிசனப்பள்ளத்தாக்கு

பாவியாகிய மனிதனுக்கும், பரிசுத்தராகிய தேவனுக்கும் இடையே உள்ள தூரத்தை கடும் தூய்மைவாதிக் குழு (puritan) வைச் சார்ந்த மக்களின் “தரிசனப்பள்ளத்தாக்கு” என்ற ஜெபம் விளக்குகிறது. அந்த ஜெபத்தில் “என்னை தரிசனப்பள்ளதாக்கிற்கு கொண்டுவந்தீர்... பாவமாகிய மலைகளால் சூழப்பட்ட நான் உமது மகிமையைக் கண்டேன்” என்று மனிதன் தேவனிடம் கூறுகிறான். அவனது பாவத்தன்மையை அவன் அறிந்திருந்தபொழுதும் இன்னமும் நம்பிக்கையுள்ளது. “மிகவும் ஆழமான கிணறுகளிலிருந்து நட்சத்திரங்களைக் காணலாம். ஆழம் அதிகரிக்க, உமது நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிவிடும்” என்று அந்த மனிதன் தொடர்ந்து கூறுகிறான். “எனது இருள் சூழ்ந்த நிலையில்…

ஈக்களின் நினைவூட்டல்

நான் தற்பொழுது வாடகைக்கு எடுத்துள்ள சிறிய அலுவலகத்தில் எனது வேலையை ஆரம்பித்தபொழுது, அங்கு வாழ்த்து வந்தவை ஒருசில மோப்பி இன ஈக்கள்தான். அநேக ஈக்கள் இறந்து அவற்றின் உடல்கள் தரையிலும், ஜன்னல்களிலும் சிதறிக் கிடந்தன. அவற்றில் ஒன்றைமட்டும் என் பார்வைபடுமாறு விட்டுவிட்டு மற்ற ஈக்களை அப்புறப்படுத்திவிட்டேன்.

ஓவ்வொரு நாளையும் நான் நலமாக வாழ அந்த இறந்து போன ஈயின் உடல் எனக்கு நினைவூட்டியது. ஜீவனைப் பற்றி நினைவூட்ட மரணம் சிறந்த காரியமாகும். ஜீவன் ஒரு விலைமதிப்பற்ற பரிசு. “உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு.” (வச 4)…