எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவ் பிரானன்கட்டுரைகள்

“மிகவும் உதவியாக”

பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.ரோமர் 12:13

கிறிஸ்தவ வானொலி நிலையத்திற்கு அழைத்தவர் தனது மனைவி அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வருவதாகக் கூறினார். பின்னர் அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் என் இதயத்தில் ஆழமாகப் பேசியது: "எங்கள் தேவாலய குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த நேரத்தில் எங்களை கவனித்துக்கொள்வதில் மிகவும் உதவியாக இருந்தார்கள்."

இந்த எளிய அறிக்கையை நான் கேட்டபோது, கிறிஸ்தவ விருந்தோம்பல் மற்றும் கவனிப்பின் மதிப்பு மற்றும் அவசியத்தை அது எனக்கு நினைவூட்டியது. வாழ்க்கையை மாற்றும் நற்செய்தியின் சக்தியை நிரூபிக்க மிகச் சிறந்த வழிகளில் ஒன்று சக விசுவாசிகளின் அன்பும் ஆதரவும் என்று நான் நினைக்க ஆரம்பித்தேன்.

முதல் பேதுருவில், அப்போஸ்தலன் ஒரு கடிதத்தை முதல் நூற்றாண்டு தேவாலயங்கள் மத்தியில் பரப்பினார்; இப்போது அது துருக்கி நாடு. அந்த கடிதத்தில், ரோமர் 12: 13-ல் தனது நண்பர் பவுல் எழுதிய ஒரு காரியத்தைச் செய்யும்படி வாசகர்களை வலியுறித்தினார்: “விருந்தோம்பலைப் பயிற்சி செய்யுங்கள்.” பேதுரு, “ஒருவருக்கொருவர் ஆழமாக நேசிக்கவும். . . விருந்தோம்பலை வழங்குங்கள், ”மேலும் தேவன் அவர்களுக்கு அளித்த பரிசுகளை“ மற்றவர்களுக்கு சேவை செய்ய ”பயன்படுத்தும்படி அவர் சொன்னார் (1 பேதுரு 4: 8-10). இயேசுவில் உள்ள அனைத்து விசுவாசிகளுக்கு சக விசுவாசிகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் அங்கு தெளிவாக உள்ளன.

அந்த அழைப்பாளரின் மனைவியைப் போன்றவர்களை நாம் அனைவரும் அறிவோம் - தேவையுள்ளவர்களுக்கு யாரோ ஒருவர் உடன் வந்து அக்கறை மற்றும் கிறிஸ்துவைப் போன்ற அன்பைக் காட்ட. தேவனின் பலத்தில், "மிகவும் உதவி செய்பவர்கள்" என்று அறியப்படுகிறவர்களுள் நாமும் ஒருவராக இருப்போம்.

தேவனிடம் முறையிடுவது

ஒரு நாள் காலையில், குடும்ப ஜெபம் ஒரு ஆச்சர்யமான அறிவிப்புடன் முடிவடைந்தது. “ஆமென்” என்று அப்பா சொன்னவுடனேயே ஐந்து வயது கவி, “நான் யோவானுக்கு ஜெபம் செய்தேன். ஏனென்றால் ஜெபத்தின் போது அவன் கண்களைத் திறந்திருந்த்தான் என்று அறிவித்தாள்.

வேதம் பரிந்துபேசும் ஜெபத்திற்கு நம்மை அழைப்பது, உங்கள் பத்து வயது சகோதரரின் பிரார்த்தனை நெறிமுறைக்காக ஜெபிப்பதை மனதில் வைத்து கொண்டு அல்ல என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஆனால் மற்றவர்களுக்காக நாம் ஜெபிக்க முடியும் என்பதையாவது கவி உணர்ந்தாள்.

வேறொருவருக்காக ஜெபிப்பதன் முக்கியத்துவத்தை வேதாகம ஆசிரியர் ஓஸ்வால்ட் சேம்பர்ஸ் வலியுறுத்துகிறார். “பரிந்துபேசுதல் என்பது உங்களை தேவனின் இடத்தில் வைக்கிறது; அது அவருடைய மனதையும், கண்ணோட்டத்தையும் கொண்டுள்ளது” என்று அவர் சொன்னார். தேவனைப் பற்றியும், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றியும் நமக்குத் தெரிந்தவற்றின் வெளிச்சத்தில் மற்றவர்களுக்காக ஜெபிப்பது இது.

பரிந்துபேசும் ஜெபத்திற்கு தானியேல் 9 ல், ஒரு சிறந்த உதாரணத்தைக் காண்கிறோம். யூதர்கள் பாபிலோனில் எழுபது ஆண்டுகள் சிறைபிடிக்கப்படுவார்கள் என்ற தேவனின் வேதனையான வாக்குத்தத்ததை தீர்க்கதரிசி புரிந்துகொண்டார் (எரேமியா 25:11-12). அந்த ஆண்டுகள் தங்களுடைய நிறைவை நெருங்குவதை உணர்ந்த தானியேல் ஜெப சிந்தைக்குள் சென்றான். அவன் தேவனுடைய கட்டளைகளை குறிப்பிட்டான் (தானியேல் 9:4-6). தன்னை தாழ்த்தினான் (வ 8). அவன் தேவனுடைய தன்மையை கனம்பண்ணினான் (வ 9). பாவத்தை அறிக்கையிட்டான் (வ 15). அவன் தன் ஜனங்களுக்காக ஜெபித்தபோது அவருடைய இரக்கத்தை சார்ந்துக்கொண்டான் (வ 18) தேவனிடமிருந்து உடனடியாக பதிலைப் பெற்று கொண்டான் (வ 21).

எல்லா ஜெபங்களும் அத்தகைய வியத்தகு பதிலுடன் முடிவடையாது. ஆனால் நம்பிக்கை மற்றும் பற்றோடு மற்றவர்களின் சார்பாக தேவனிடம் செல்லலாம் என்று நம்புங்கள்.

நிலைத்திருங்கள்

ஹாரியட் டப்மேன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க போராட்ட வீரர்களில் ஒருவர். குறிப்பிடத்தக்க தைரியத்தை காட்டி, அமெரிக்காவின் வடக்கில் விடுதலையான நிலப்பரப்புக்குள் கடந்து வந்து அடிமைத்தனத்தில் இருந்து தப்பித்த பின், 300க்கும் மேற்பட்ட அடிமைகளின் விடுதலைக்கு வழிநடத்தினார். தனது சொந்த சுதந்திரத்தை வெறுமனே அனுபவிப்பதில் திருப்தியாக இருந்துவிடவில்லை. நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் அந்நியர்களை சுதந்திரத்திற்கு இட்டுச் செல்ல 19 முறை அடிமை மாநிலங்களுக்குள் நுழைந்தார். சிலசமயங்களில் கனடாவுக்கு நடந்து செல்லும் பாதையில் மக்களை வழிநடத்தினார்.
இத்தகைய துணிச்சலான நடவடிக்கைக்கு டப்மேனைத் தூண்டியது எது? ஆழ்ந்த விசுவாசம் உள்ள அந்த பெண்மணி ஒரு காலத்தில் இதைச் சொன்னார். நான் எப்போதும் தேவனிடம் சொல்வேன், நான் உம்மில் நிலைநிற்க போகிறேன். நீர்தான் என்னை பார்க்க வேண்டும். மக்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றும் போது தேவனின் வழிகாட்டுதலை அவள் சார்ந்து இருப்பது அவளுடைய வெற்றியின் ஒரு தனிச்சிறப்பாகும்.
தேவனிடம் "நிலை நிற்பது" என்றால் என்ன? ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் ஒரு வசனம் உண்மையில் அவருடைய கையை நாம் பற்றிக் கொள்ளும் போது நம்மை பிடிப்பவர் அவர் என்பதை காண நமக்கு உதவக்கூடும். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையை பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்" (41:13). ஏசாயா இப்படியாக சொன்ன ஒரு கடவுளை மேற்கோள் காட்டுகிறார்.
ஹாரியட் தேவனை இறுக்கமாக பற்றிக் கொண்டார். தேவன் அவளைப் பார்த்துக்கொண்டார். நீங்கள் என்ன சவால்களை எதிர் கொள்கிறீர்கள்? உங்கள் கையையும் உங்கள் வாழ்க்கையையும் அவர் “பிடித்துக் கொள்வதால்" கடவுளிடம் உறுதியாக இருங்கள். “பயப்படாதிருங்கள்" அவர் உங்களுக்கு உதவுவார்.

அணைத்து வழிகளுமா?

நான் வேலையிலிருந்து எனது பேத்தியின் தடகள போட்டியை பார்க்கும்படி செல்லும்போது “நெடுஞ்சாலையை எடுக்க வேண்டாம்” இன்று எனது மகளிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்க்கும் போது தான் எனக்கு தெரியவந்தது அங்கு அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்கிறது என்று. நான் வேறு வழியில்லாமல் வந்த பாதை எடுத்து திரும்ப சென்றேன்.

திரும்ப வீடு செல்லும்படி நான் எடுத்த எல்லா வழிகளும் அடைக்கப்பட்டிருந்தன என்பதை கண்டறிந்தது எல்லா சாலைகளும் தேவனுடனான நித்திய உறவுக்கு வழிவகுக்கும் என்று கூறும் மக்களைப் பற்றி சிந்திக்க வைத்தது. சிலர் கருணை மற்றும் நன்னடத்தையின் பாதை நம்மை அங்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறார்கள். மற்றவர்கள் மதம் சம்மந்தப்பட்ட காரியங்களை செய்வதற்கான பாதையைத் தேர்வு செய்கிறார்கள்.

அந்த வழிகளை நம்பி செல்வது நம்மை மூடப்பட்ட சாலைகளுக்கு தான் எடுத்து செல்லும். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு இதை தெளிவுபடுத்துகிறார் (யோவா. 14:6). பிதாவின் வாசஸ்தலத்துக்கு உள்ளாக நாம் செல்லும்படியாக நமக்காய் அவர் மரிக்க போகிறார் என்பதை இந்த வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்.

தேவ பிரசன்னத்திற்குள்ளாக நம்மை அழைத்து செல்லாத எந்த வழியையும் நாம் எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இரட்சகராகிய இயேசுவை நம்புவோம் (யோவா.3:36). அவரை நம்பி கொண்டு இருப்பவர்கள், அவர் அளித்திருக்கும் வழிகளில் ஓய்வெடுக்கலாம்.

குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்

மரியாள் சுமந்துக்கொண்டிருக்கும் குழந்தையின் வரவை எதிர்நோக்கியிருக்கும்போது யோசேப்பிடம் இது ஒரு தேவைப்படாத உரையாடலாயிருந்தது: 'யோசேப்பு, நாம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?" பிரசவத்திற்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்களைப் போல அல்லாமல், இந்தக் குழந்தையை அவர்கள் என்னவென்று அழைப்பார்கள் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.

மரியாளையும் யோசேப்பையும் சந்தித்த தேவதூதர்கள் குழந்தையின் பெயர் இயேசு என்பதை அவ்விருவருக்கும் அறிவித்தனர் (மத். 1:20-21, லூக். 1:30-31). யோசேப்புக்குத் தோன்றின தூதன் இயேசு என்ற பெயருக்கு 'அவர் தம்முடைய ஜனங்களை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அர்த்தம்" எனக் கூறினார்.

அவர் இம்மானுவேல் என்றும் அழைக்கப்படுவார் (ஏசா. 7:14), அதற்கு 'தேவன் நம்மோடிருக்கிறார்" என்று அர்த்தம். ஏனென்றால் மனித உருவில் தேவன் - துணிகளில் சுற்றப்பட்டிருக்கும் தெய்வம். 'ஆலோசனைக் கர்த்தா",; 'வல்லமையுள்ள தேவன்", 'நித்தியப் பிதா" (9:6) என்னும் அனேக பெயர்களையும் ஏசாயா தீர்க்கதரிசி சூட்டியுள்ளார். ஏனென்றால் அவர் அவை அனைத்திற்கும் உரியவர்.

புதிய குழந்தைக்கு பெயரிடுவது எப்போதுமே உற்சாகமாக இருக்கும். ஆனால் 'மேசியா என்று அழைக்கப்படும் இயேசு" (மத். 1:16) போன்ற வல்லமையுள்ள, ஆச்சரியமான, உலகத்தையே மாற்றக் கூடிய பெயர் வேறு எந்த குழந்தைக்கும் இருந்ததில்லை. 'நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக்" கூப்பிடுவது நமக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. அவராலேயன்றி வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை (அப். 4:12).

இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் அவரைத் துதித்து, அவர் நமக்கு எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

நம் பங்கை செய்வது

என்னுடைய பேத்திகள் இருவரும் தங்கள் பள்ளியில் "ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்" என்கிற நாடகத்தில் நடிப்பதின் நிமித்தம் மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்டார்கள். இருவரின் நோக்கமெல்லாம் அதின் கதாநாயகியான ஆலிஸாக நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் நாடகத்தில் ஓரமாக பூக்களாக நிற்கும்படியாக அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இருப்பினும் இருவரும் தங்கள் தோழிக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர்களுடைய நண்பர்களுக்காக சந்தோஷப்படுவதிலும் அதில் மற்றவர்களிடம் பகிருவதிலும் மிகவும் ஆனந்தமடைந்தார்கள்.

சபையான சரீரத்தில் நாம் மற்றவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. ஒவ்வொரு சபையிலும் முக்கிய அங்கத்தினராக நியமிக்கப்பட்ட சிலர் உண்டு. ஆனால் அந்த சபைக்கும் பூக்களாய் சிறிய மற்றும் முக்கியமான பங்கை செய்பவர்கள் மிகவும் அவசியமாக தேவை. நமக்கு பிடித்த பங்கு மற்றவர்களுக்கு கிடைத்தால் அவர்களை ஊக்குவித்து, நமக்கு தேவன் தந்த பங்கை ஆர்வத்துடன் நிறைவேற்றுவோம்.

மற்றவர்களை ஊக்குவித்து உதவிசெய்வதும் தேவன் மேல் அன்பு செலுத்தும்  ஒரு வழி. எபிரெயர் 6:10ல் சொல்வது போல் "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே". தேவன் தந்த எந்த பரிசும் மிகவும் முக்கியமானது: "அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்" (1 பேது. 4:10).

சபையாக மற்றவர்களை ஊக்குவிப்பதிலும், தேவன் அருளிய வரத்தின்படி அவரவர் தன் வேலையை விடாமுயற்சியுடன் செய்யும் ஒரு சபையை சற்று நினைத்துப் பாருங்கள். அதுவே மிகவும் சந்தோஷம் நிறைந்ததாகவும், உற்சாகமூட்டும் சபையாக இருக்கும்.

உபதேசிப்பதா அல்லது உழுவதா?

குடும்ப புராணத்தின் படி, இரண்டு சகோதரர்கள் - ஒருவன் பெயர் பில்லி அடுத்தவன் மெல்வின் - சிறுவர்களாக இருந்தபோது ஒரு சமயம் தங்கள் குடும்பத்தை சார்ந்த பால்பண்ணையில் நின்று கொண்டிருந்தபோது  ஆகாயத்தில் ஒரு விமானம்‌ சில எழுத்துக்களை வரைவதை பார்த்தார்கள்;  GP  என்று அந்த   எழுத்துக்களை  படித்தனர்.

அந்த எழுத்துக்கள் தங்களுக்கு சொந்த கருத்து ஒன்றை தெரிவிக்கிறது என்று சகோதரர்கள் தீர்மானம் செய்துகொண்டார்கள். ஒருவன் தனக்கு தென்பட்டது GO PREACH – அதாவது “போய் உபதேசம் செய்” என்று புரிந்துக்கொண்டான்.  மற்றொருவன் அந்த எழுத்துக்கள் GO PLOW அதாவது “போய் உழவுத் தொழில் செய்” என்று புரிந்துக்கொண்டான்.  பில்லி கிரஹாம் தன்‌ வாழ்க்கையை உபதேசத்திற்காக அர்ப்பணித்து மிகப்பெரிய சுவிசேஷகராக மாறினார். அவருடைய சகோதரன் மெல்வின், தன்னுடைய குடும்ப பண்ணையை வெகு  ஆண்டுகளாக உண்மையாக நடத்தினார்.

ஆகாயத்தில் எழுதின எழுத்துக்கள் இருக்கட்டும், பில்லியை ஆண்டவர் உபதேசத்திற்கும் மெல்வினை விவசாயத்திற்கும்  அழைத்திருந்தால், அவர்கள் இருவருமே தேவனை தங்கள் தொழில்களின் மூலமாக கனப்படுத்தினார்கள். பில்லி நெடுநாள் பிரசத்தி பெற்ற பிரசங்கியாக இருந்தாலும், அதனால் அவருடைய  சகோதரன் உழுவதற்கு பெற்ற அழைப்பை கீழ்படிந்தது அதைவிட முக்கியத்துவம் குறைந்ததல்ல.

தேவன் சிலரை நாம்கூறுவதுபோல  முழு நேர ஊழியத்திற்கு அழைப்பதினால்(எபே. 4:11-12) மற்ற வேலைகளிலும் பாத்திரங்களிலும் ஈடுபட்டிருக்கிறவர்கள்குறைந்த  முக்கியத்துவம் குறைந்தவேலை செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. இரண்டில் எப்படி இருந்தாலும் “ஒவ்வொரு அவயவமும் தன்தன் கிரியையை செய்யவேண்டும்” என்று  பவுல் கூறுகிறார் (எபேசியர் 4:16). அப்படி என்றால் நாம் ஒவ்வொருவரும் நமக்கு கொடுக்கப்பட்ட ஈவுகளால் இயேசுவை மேன்மைப்படுத்த வேண்டும்.  அப்படி செய்கிறவர்களாயிருந்தால்  நாம் உபதேசிக்கிறோமோ  அல்லது உழுகிறோமோ, எப்படி இருந்தாலும் இயேசுவுக்காக ஒருவித்தியாசத்தைஉண்டாக்கலாம்.

இப்போது, பிறகு அடுத்தது

நான் சமீபத்தில் ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டேன். அப்போது பேச்சாளர் அங்கு பட்டம்பெற காத்திருக்கும் இளைஞர்களுக்கு தேவையான சவாலை வழங்கினார். அவர்களுடைய வாழ்க்கையில் “அடுத்து என்ன ?” அடுத்து என்ன தொழில் தொடர போகிறார்கள்? எங்கு பள்ளிக்கூடத்திற்கு அல்லது அடுத்த வேலைக்கு செல்லப்போகிறார்கள் ? என்று எல்லோராலும் கேட்கப்படும் ஒரு காலம் என்பதை குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், இப்போது நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் ? என்ற கேள்வியே மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறினார்.

அவர்களுடைய விசுவாச பயணத்தின் சூழலில், ஒவ்வொரு நாளும் தனக்காக அல்ல, இயேசுவுக்காக வாழ என்ன முடிவுகளை எடுப்பார்கள்?. 

இவருடைய வார்த்தைகள், இப்போது எப்படி வாழவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிற நீதிமொழிகள் புத்தகத்தை நினைப்பூட்டியது. ஊதாரணமாக, இப்பொழுது நேர்மையாக நடக்க வேண்டும் (11:1), இப்பொழுது சரியான நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் (12:26), இப்பொழுது நேர்மையுடன் வாழவேண்டும் (13:6) இப்பொழுது நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டும் (13:15), இப்பொழுது ஞானமாய் பேச வேண்டும் (14:3).

பரிசுத்த ஆவியின் ஏவுதலால், இப்பொழுது, தேவனுக்காய் வாழ்வது, அடுத்தது சுலபமானது எது என்பது பற்றிய முடிவுகளை எடுக்க உதவுகிறது. “ தேவன் ஞானத்தைத் தருகிறார்: …. அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார், …. அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதைகளை காப்பாற்றுகிறார்” (2:6-8). இப்பொழுது, அவருடைய பிரமாணங்களின்படி வாழ நமக்கு தேவையானதை தேவன் தருவார் மற்றும் அவருடைய கனத்திற்காக அடுத்து நாம் செய்யவேண்டியது என்ன என்பதையும் தேவன் வழிகாட்டுவார்.

தற்பரிசோதனை

சமீபத்தில், இரண்டாம் உலகப் போரின் போது, என்னுடைய   தந்தை என்னுடைய தாயாருக்கு அனுப்பி வைத்த கடிதங்களைப்  படித்தேன். அவர் வட ஆப்ரிக்காவில் இருந்தார், என் தாயார் அமெரிக்காவில் இருந்தார். என்னுடைய தந்தை, அமெரிக்க இராணுவத்தில் இளம் நிலை அதிகாரியாக இருந்தார், இராணுவ வீரர்களின் கடிதங்களை தணிக்கை செய்யும் பொறுப்பைப்    பெற்றிருந்தார். மிக முக்கியமான செய்திகள் எதிரிகளைச் சேராதபடி காப்பதற்காக இதனைச் செய்தார். அக்கடிதங்களைப் பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாகவே இருந்தது.  தன் மனைவிக்கு எழுதிய அக்கடிதத்தின் வெளிப்பக்கத்தில், “இரண்டாம் நிலை அதிகாரி ஜாண் பிரானன் (என்னுடைய தந்தையின் பெயர்) அவர்களால் தணிக்கை செய்யப்பட்டது” என்று முத்திரையிடப்பட்டிருந்தது. தன்னுடைய  சொந்த கடிதத்திலேயே சில வரிகளை அடித்திருந்தார்!

சுய தணிக்கை என்பது, நம் அனைவருக்குமே நன்மையானது. வேதாகமத்தில் அநேக இடங்களில் அதை எழுதியவர்கள், நம்மிடத்தில் சரியில்லாதவை எவை, தேவனுக்கு மகிமையைத் தராதவை எவை என நம்மை நாமே சோதிப்பதின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றனர். சங்கீதக்காரன், “தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும் ……..வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்” (சங்.139:23-24) என்கின்றான். எரேமியா அதனை இவ்வாறு கூறுகின்றார். “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து, ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவோம்” (புல.3:40) என்கின்றார். திரு விருந்தில் பங்கேற்கும் முன்பு, “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்” (1 கொரி.11:28) என்று பவுல் நம்முடைய இருதயத்தைக் குறித்துக் கூறுகின்றார்.

தேவனுக்குப் பிரியமில்லாத எந்தச் செயலையும், எந்த மனப்பான்மையையும் விட்டு திரும்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் உதவிசெய்வார். எனவே நாம் இந்த உலகத்தினுள் நுழைவதற்கு முன்பாக, நாம் நின்று ஆவியானவரின் உதவியோடு சுய சோதனை செய்வோம், அதன் மூலம் நாம் அவரோடு ஐக்கியமாகும்படி, “தேவனிடம் திரும்புவோம்”.