என் ஆத்துமாவே, அமர்ந்திரு!
ஒரு குழந்தையை அன்போடு அனைத்துக்கொண்டு, தாய் தன் விரலை அக்குழந்தையின் உதடுகளின் முன் வைத்து - ஷ்ஷ்… என்ற வார்த்தையைச் சொல்வது போன்று கற்பனை செய்துபார். இந்த செயலில், எளிய வார்த்தையின் அர்த்தம் என்னவெனில், ஏமாற்றங்களின் மத்தியில் எதிர்பார்ப்போடுள்ள குழந்தையின் வலி அல்லது அசௌகரியத்தை அமைதிப்படுத்துவதாகும். இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாவிடத்திற்கும், எக்காலத்திற்கும் உரியவை. நாம் அனைவருமே இத்தகைய அன்பின் வெளிப்பாடுகளைப் பெற்றிருக்கவும் முடியும், கொடுத்திருக்கவும் முடியும். நான் சங்கீதம் 131:2 ஐ தியானித்த போது இந்த காட்சிதான் என் கண் முன்னே வந்தது.
இந்த சங்கீதத்தின் வார்த்தைகளும் போக்கும் சங்கீதக்காரன் தாவீதின் தீவிரமான அநுபவத்திலிருந்து வெளிவந்த வார்த்தைகள் எனத் தெரிகின்றது. நீ ஏமாற்றத்தையோ, தோல்வியையோ சந்திக்கும் போது, அது உன்னை ஜெபத்திற்கு நேராக வழிநடத்தினதுண்டா? உன்னுடைய வாழ்வின் சூழ்நிலைகளால் நீ தாழ்த்தப்படும்போது நீ என்ன செய்வாய்? ஒரு தேர்வில் தோற்கும் போது, ஒரு வேலையை இழந்த போது அல்லது ஓர் உறவின் முடிவைச் சந்தித்தபோது என்ன செய்வாய்? தாவீது தன்னுடைய இருதயத்தை கர்த்தரிடத்தில் ஊற்றி, அத்தோடு தன் ஆன்மாவை உண்மையாய் ஆராய்ந்து அறிந்து ஒரு பட்டியலை தயாரித்தான் (சங். 131:1) அவனுடைய சுற்றுச் சுழலோடு சமாதானம் செய்து கொண்டபின், ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பிலிருக்கும் போது அமைதியாயிருப்பது போல, தாவீதும் மன நிறைவைப் பெற்றுக்கொண்டான் (வச. 2).
வாழ்க்கையின் சூழல் மாறலாம். சிலவேளைகளில் நாம் தாழ்த்தப்படலாம். ஆனாலும் நாம் நம்பிக்கையோடும் மன நிறைவோடும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வாக்களித்துள்ள தேவன் நம்மோடிருக்கிறார் என அவரை முற்றிலுமாக நம்புவோமாக.
வேத வார்த்தைகளை நாம் புரிந்துகொள்ளும்படிச் செய்ய தேவனாலேயே முடியும்.
சில வருடங்களுக்கு முன் என்னோடு பயணம் செய்த ஒருவர், நான் தூரத்துப் பொருட்களைப் பார்க்கச் சிரமப்படுவதைக் கவனித்து ஒன்று செய்தார். அவர் செய்தது ஒரு சிறிய காரியமாயினும் அது என் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் தன்னுடைய கண்ணாடியை கழற்றி அதை என்னைப் போட்டுப் பார்க்கும்படி கூறினார். நான் அவற்றை பயன்படுத்திய போது, என்ன ஆச்சரியம்! என்னுடைய மங்கலான பார்வை மறைந்து தெளிவாகப் பார்க்க முடிந்தது. உடனடியாக நான் ஒரு கண் மருத்துவரை அணுகினேன். அவர் என் பார்வையை சரிசெய்யக் கூடிய ஒரு கண்ணாடியை எனக்குப் பரிந்துரைத்தார்.
இன்றைய வேதாகமம் பகுதி லூக்கா 18, முற்றிலும் பார்வையிழந்த ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிடுகிறது. முழுவதும் இருளிலேயே வாழ்ந்து வருகின்ற அவன் தன்னுடைய வாழ்வுக்காக வேண்டும்படி தூண்டப்படுகின்றான். பிரசித்திப் பெற்ற போதகர், அற்புதம் நிகழ்த்துபவர் என்று இயேசுவைக் குறித்த செய்தி அந்த குருட்டுப் பிச்சைக்காரனின் செவிகளை அடைகிறது. அந்த குருடன் அமர்ந்திருக்கின்ற வழியே இயேசு வந்தபோது, அவனுடைய இருதயத்தினுள் நம்பிக்கை எரியத் துவங்குகிறது. “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 37) எனக் கூப்பிடுகின்றான். அவன் வெளியுலகைப் பார்க்கக்கூடாதிருந்தும், அவனுடைய ஆவியின் கண்கள் இயேசுவின் உண்மையான அடையாளத்தை கண்டு கொண்டன. அவனுக்குள்ளிருந்த நம்பிக்கை அவனுடைய தேவையைச் இயேசு சந்திப்பார் என்றது. அவனுடைய நம்பிக்கையின் தூண்டுதலால், இன்னும் சத்தமாக கூப்பிடுகின்றான். “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 38) விளைவு என்ன? அவனுடைய குருட்டுத் தன்மை மாறியது. தன்னுடைய வாழ்விற்காகப் பிச்சையெடுத்தலை விட்டுவிட்டு, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே அவருக்குப் பின் சென்றான் (வச. 43), ஏனெனில், இப்பொழுது அவனால் பார்க்க முடிகிறது.
உன் வாழ்வின் இருண்ட காலங்களில் நீ எங்கே செல்கின்றாய்? எதை நோக்கி அல்லது யாரைக் கூப்பிடுகின்றாய்? கண் கண்ணாடிக்கான பரிந்துரை ஒருவரின் பார்வையை மேம்படுத்திக்கொள்ள உதவலாம். ஆனால், இயேசுவின், தேவனுடைய குமாரனின் கிருபை நிறைந்த தொடுதல் மக்களை ஆவியின் இருளிலிருந்து வெளிச்சத்திற்குள் கொண்டு வருகிறது.
மறுபடியும் இயேசுவை நன்றாகக் கவனியுங்கள்!
நான் பார்த்ததிலேயே உண்மையுள்ள நபர் என்று ஒருவரை சொல்லக்கூடுமானால் அது சகோதரர் ஜஸ்டிஸ் ஆகத்தான் இருக்கமுடியும். தன் குடும்பம், தன் வேலை, தன் சபை பொறுப்பு என்று எல்லாவற்றிலும் அவர் உண்மையும் பொறுப்புள்ளவருமாய் இருந்தார். சமீபத்தில் பிள்ளைப்பருவத்தில் நான் போய்க்கொண்டிருந்த ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே பியானோ கருவியின் பக்கத்தில் தொங்கிகொண்டிருந்த பழைய ஆலயமணியை கவனித்தேன். அந்த நாட்களில், வேதபாடம் முடியப்போகிறது என்பதை உணர்த்த சகோதரர் ஜஸ்டிஸ் அந்த மணியிலிருந்து தான் ஒலியெழுப்புவார். காலத்தை தாண்டி அந்த ஆலயமணி இன்றும் நிலைத்து நிற்கிறது. சகோதரர் ஜஸ்டிஸ் கர்த்தரோடு இருக்கும்படி சென்று பல வருடங்கள் ஆனாலும், அவர் விட்டுசென்ற உண்மைத்துவத்தின் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.
எபிரயேர் 3-ஆம் அதிகாரம் ஒரு உண்மையுள்ள ஊழியன் மற்றும் ஒரு உண்மையுள்ள குமாரனை நம்முடைய கவனத்தின் கீழ் கொண்டுவருகிறது. தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் உண்மைத்துவத்தை நாம் மறுக்கமுடியாவிட்டாலும், விசுவாசிகளின் பார்வை இயேசுவின்மீதே இருக்கவேண்டும் என்று போதிக்கப்படுகிறது. “ஆகையால், பரிசுத்த சகோதரர்களே சகோதரிகளே… கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்” (வச. 1) சோதிக்கப்படுகிறவர்களுக்கு இது ஒரு பெரிய உற்சாகத்தைத் தருகிறது. உண்மையுள்ளவராகிய இயேசுவை பின்பற்றுவதனாலேயே இந்த சுதந்தரம் உண்டாகிறது.
சோதனையின் காற்றுகள் உங்களை சூழும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சோர்ந்து களைத்துபோய், எதுவும் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்? இந்த வேதபகுதியில்-ஒரு விரிவுரை தொகுப்பில்-உள்ளது போல், “இயேசுவை நன்றாக உற்று கவனியுங்கள் (3:1). அவரை மறுபடியும் பாருங்கள் – மறுபடியும் மறுபடியும் பாருங்கள். இயேசுவை நாம் மீண்டும் மீண்டும் நம் பார்க்கும்போது, அவருடைய குடும்பத்திற்குள் வாழ்ந்திட அவர் நம்மை திடப்படுத்துகிறார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு போர்வை
லின்னஸ் என்று சுருக்கமாக அழைக்கப் பெறும் லின்னஸ் வான் பெல்ட் என்பவர் “பீநட்ஸ்” கேலி சித்திரப் பகுதியின் முக்கியத் தூணாகச் செயல்படுபவர். அவரிடம் வேடிக்கையும், புத்திசாலித்தனமும் இருந்தும் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்ற அவர், தன்னோடு எப்பொழுதும் ஒரு பாதுகாப்பு போர்வையை எடுத்துச் செல்வார். இந்த போர்வையின் மூலம் நாம் அவரை அடையாளம் காணலாம். நமக்குள்ளேயும் பயம் உண்டு, பாதுகாப்பற்ற நிலையையும் உணர்கின்றோம்.
இயேசுவின் சீடன் பேதுருவுக்கு பயத்தைக் குறித்து சற்று தெரியும். இயேசுவை கைது செய்தபோது பேதுரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இயேசுவைப் பின் தொடர்ந்து பிரதான ஆசாரியனின் முற்றம் வரையும் சென்றார். அதன் பின்பு அவர் பயத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய அடையாளத்தை மறைக்க பொய்யும் கூறினார் (யோவா. 18:15-26). அவர் அவ சொற்களைப் பேசியதுடன் தன்னுடைய தேவனை மறுதலிக்கவும் செய்தார். ஆனாலும் தேவன் பேதுருவை நேசிப்பதை விடவில்லை. இறுதியில் அவரை முற்றிலுமாக மீட்டுக் கொண்டார் (யோவா. 21:15-19).
1 பேதுரு 4:8ல் பேதுரு அன்பை வலியுறுத்தக் காரணம், அவர் இயேசுவின் ஆழ்ந்த அன்பை அனுபவித்தவர். அதனாலேயே அவர் நம்முடைய உறவுகளில் அன்பினை அதிக முக்கியத்துவப்படுத்தி எல்லாவற்றிற்கும் மேலாக என்று குறிப்பிடுகிறார். அந்த வசனத்தின் தீவிரம் மேலும் தொடர்ந்து ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும் என்கின்றது.
உனக்கு எப்பொழுதாகிலும் இத்தகைய போர்வை தேவைப்பட்டதா? எனக்கு தேவைப்பட்டது. ஏதாவது ஒன்றை சொன்ன பின்னர் அல்லது செய்த பின்னர், நான் அதற்காக மனம் வருந்தி குற்ற உணர்வையும், அவமானத்தையும் உணர்ந்ததுண்டு. சுவிசேஷங்களில் குறிப்பிட்டுள்ளபடி, இயேசுவும் அவமானத்தாலும் ஏமாற்றத்தாலும் நிறைந்த மக்களை அன்பினால் போர்த்தியது போல, நானும் அன்பினால் போர்த்தப்பட வேண்டியவன்.
இயேசுவைப் பின்பற்றுபவர்கள் கருணையுடனும் தைரியத்துடனும் மற்றவர்களைத் தேற்றவும், மீட்கவும், அன்பென்னும் போர்வையைப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய மாபெரும் அன்பினைப் பெற்ற நாம் பிறருக்கு அதனைக் கொடுப்போம்.
என்னுடைய உதவி
பல வருடங்களாக புகழ்பெற்று நிற்கும் “புரூக்ளின் டேபர்னக்கிள்” பாடகர் குழுவின், ஆன்மாவைப் புதுப்பிக்கும் சுவிசேஷப்பாடல்கள் மூலம் ஏராளமானோர் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர். அவைகளில் ஒன்று சங்கீதம் 121லிருந்து உருவாக்கிய ‘என்னுடைய உதவி’ என்று தலைப்பிடப்பட்டு பாடப்பட்ட பாடல்.
சங்கீதம் 121ன் துவக்கம், சகலத்தையும் படைத்த தேவனாகிய கர்த்தர் மீது வைத்துள்ள தனிப்பட்ட நம்பிக்கையை அறிக்கை செய்தலில் ஆரம்பிக்கிறது, அவரே சங்கீதக்காரனின் உதவியின் ஆதாரமாக இருக்கின்றார் (வச. 1-2). அது எதனைக் காட்டுகிறது? ஸ்திரத்தன்மை (வச. 3), 24 மணி நேர பாதுகாப்பு (வச. 3-4), தொடர்ந்து வரும் அவருடைய பிரசன்னமும், பாதுகாப்பும் (வச. 5-6) எல்லாவிதமான தீமையிலிருந்தும் விலக்கி எப்பொழுதும் முடிவுவரை அதாவது நித்தியம் வரை (வச. 7-8) காப்பதையும் காட்டுகிறது.
தேவனுடைய ஜனங்கள் தேவனே தங்கள் உதவிக்கான ஆதாரம் என்பதை ஆண்டாண்டுகளாகக் கண்டுகொண்டனர் என்பதை வேதாகமத்திலுள்ள பாடல்கள் மூலம் தெரிந்துகொள்கிறோம். என்னுடைய ஆராதனை அனுபவத்தில் நான் என்னுடைய குரலை உயர்த்தி, சார்ல்ஸ் வெஸ்லியின் பாடல்களை, உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாடும் குழுவினரோடு இணைந்து பாடுவதாகும். அப்பாடல், “அப்பா நான் என் கரங்களை உம்மிடம் உயர்த்துகிறேன், வேறு உதவியை நான் அறியேன்; நீர் என்னைக் கைவிடுவீராயின் நான் எங்கே போவேன்?” மிகப் பெரிய சீர்த்திருத்தவாதி மார்டின் லுத்தர் இதனையே இவ்வாறு எழுதுகின்றார், “என் தேவன் என் உறுதியான கோட்டை, ஒருக்காலும் விலகாத அரண் வெள்ளம் பொன்ற துன்பம் வரும் போது அவரே என் உதவி.”
நீ ஒருவேளை தனிமையில் கைவிடப்பட்டவனாக, குழம்பிய சூழலில் இருக்கின்றாயா? சங்கீதம் 121ன் வார்த்தைகளை நினைத்துப்பார். இந்த வார்த்தைகள் உன் ஆத்துமாவை நம்பிக்கையாலும் தைரியத்தாலும் நிரம்பும்படி செய். நீ தனிமையாக இல்லை. எனவே உன் வாழ்வை உன் சொந்த வழியில் நடத்த முயற்சிக்காதே. மாறாக பூமியில் உனக்குள்ள முடிவில்லாத பாதுகாப்பை இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதல் விண்ணேற்பு மூலம் வெளிப்படுத்திய தேவனில் களிகூரு. எடுக்க வேண்டிய அடுத்த அடியை அவருடைய உதவியால் எடுத்துவை.
இவர் யாரோ?
நான் மாணவனாயிருந்தபோது “உங்கள் சாய்வு மேஜைகளிலிருந்து எல்லாவற்றையும் அகற்றிவிட்டு ஒரு பேப்பரும் பென்சிலும் எடுத்துக் கொள்ளுங்கள்.” என்ற அச்சுறுத்தும் அறிவிப்பைக் கேட்டவுடனே, “பரீட்சை நேரம்” வந்துவிட்டது என்று அறிந்து கொண்டேன்.
கடற்கரையில் போதனையோடு ஆரம்பித்த இயேசுவின் அன்றைய தினம் (மாற். 4:1) கடலில் ஒரு சோதனையான வேளையோடு முடிந்தது (வச. 35). இயேசுவின் பிரசங்க மேடையாகப் பயன்படுத்தப்பட்ட அந்தப் படகு இயேசுவையும் அவருடைய சில சீடர்களையும் கடலின் அக்கரைக்குக் கொண்டுபோகப் பயன்படுத்தப்பட்டது. களைப்படைந்த இயேசு படகின் பின்னணியத்தில் படுத்துத் தூங்கிவிட்டார். பயணத்தின்போது அவர்கள் ஒரு பலத்த சுழல்காற்றை எதிர்கொண்டனர் (வச. 37). அவைகளினால் முற்றிலும் நனைந்த சீடர்கள், “போதகரே நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள் பின் இக்காரியம் நிகழ்ந்தது (வச. 38). காலையில் ஜனக்கூட்டத்தை பார்த்து “கேளுங்கள்” என்று அறிவுரை கூறியவர், ஒரு எளிய வல்லமையான கட்டளையை இயற்கைக் காற்றைப் பார்த்து காற்றுக்கு “இரையாதே, அமைதலாயிரு” என்றார் (வச. 39).
காற்றும் கீழ்ப்படிந்தது. மிகவும் பயந்த சீடர்கள் ஆச்சரியப்பட்டு “இவர் யாரோ?” என்றார்கள் (வச. 41). சீஷர்கள் இவர் யாரோ என்று கேட்ட கேள்வி நல்ல கேள்விதான் ஆனால், மெய்யாகவே இயேசு தேவனுடைய குமாரன்தான் என்று சரியாகக் கண்டுகொள்ள அவர்களுக்குச் சற்றுக் காலம் வேண்டியதாயிருந்தது.
இன்றைய காலக்கட்டத்திலும் இயேசுவைப்பற்றி திறந்த உள்ளத்தோடு உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ள அனுபவத்துடன் கேள்வி கேட்பவர்கள் இதே முடிவிற்குத்தான் வருவார்கள். அவர் நமக்கு போதனை செய்பவர்மட்டுமல்ல, ஆராதனைக்கும் உரிய தேவனானவர்.