பாய்ந்தோடும் சமாதானம்
எனது உடற்பயிற்சி வகுப்பில் எனக்கு அறிமுகமான ஒரு பெண் “நீ ஒடுக்கக்கூட்டங்கள் நடத்துவதுபற்றி நான் ஆச்சரியப்படவில்லை. நீ மிகச்சிறந்த குணமுடையவளாய் இருக்கிறாய்” என்று கூறினாள். அவள் கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தாலும், அவளது விமர்சனத்தைக் குறித்து சந்தோஷம் அடைந்தேன். ஏனெனில், அவள் என்னிடத்தில் கண்ட சிறந்த நற்குணம் என்பது என்னிடமிருந்த கிறிஸ்துவின் சமாதானம் என்பதை அறிந்தேன். நாம் இயேசுவைப் பின்பற்றும்பொழுது எல்லாப்புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை அவர் நமக்குத் தருகிறார் (பிலி. 4:7). அந்த தேவசமாதானம் நம்மை அறியாமலேயே நம்மிலிருந்து பரவுகிறது.
இயேசு அவருடைய…
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆவியானவர்
எலிசா தீர்க்கத்தரிசி மன உறுதியும், முரட்டுத் துணிச்சலும் இணைந்த தன்மையை உடையவர். எலியா தீர்க்கத்தரிசியுடன் அவர் சிலகாலம் சேர்ந்து பணிபுரிந்து வந்தபொழுது, எலியாவின் மூலமாக கர்த்தர் அநேக அற்புதங்களைச் செய்ததையும், பொய் பேசுதலே மேலோங்கி இருந்த அந்தக் காலத்தில், அவர் தைரியமாக உண்மை பேசுவதையும் எலிசா கண்ணாரக் கண்டார். 2 இராஜாக்கள் 2:1ல் எலியா “பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்” நேரம் வந்தது. ஆனால் எலியா அவனைவிட்டு எடுக்கப்பட்டுப் போவதை எலிசா விரும்பவில்லை.
எலிசா பயந்தபடி, எலியா அவனை விட்டுப் பிரியும் நேரம் வந்தது. எலியா…
தேவனுடைய பார்வையில் நேர்மையானதைச் செய்தல்
அநேக ஆங்கிலேய வீட்டுச் சொந்தக்காரர்கள் போலியான தரங்குறைந்த பொருட்களைக் கொண்டு வீடுகட்டுபவர்களை, “கவ்பாய் பில்டர்ஸ்” என்ற பதத்தால் அழைப்பார்கள். வீட்டுச் சொந்தக்காரர்கள் தாங்கள் அடைந்த மோசமான அனுபவங்களால் ஏற்பட்ட பயம், வருத்தம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அப்பெயரை அவர்களுக்கு வழங்கினர்.
ஏமாற்றும் தச்சர்கள், கொத்தனார்கள், கல்தச்சர்கள் போன்றோர் வேதாகம காலத்திலும் சந்தேகமின்றி வாழ்ந்திருப்பார்கள். யோவாஸ் அரசன், ஆலயத்தைப் பழுதுபார்த்து கட்டிய வரலாற்றில், அப்படிப்பட்டவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. பழுதுபார்க்கும் பணியைச் செய்தவர்களும், அவர்களைக் கண்காணித்தவர்களும் முற்றிலும் நேர்மையுடனும், உண்மையாகவும் செயல்பட்டார்கள் (2 இரா 12:15).
எனினும்…
அவருடைய கண் மணி
என் சிநேகிதியின் குழந்தையை வலிப்பு நோய் தாக்கியதால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் சென்றார்கள் தன் மகளுக்காக ஜெபித்துக் கொண்டே இருந்த சமயம் அவள் இதயம் வேகமாக பட, பட வென்று துடித்தது, பொங்கிவரும் பாசத்துடன் அந்தப் பிஞ்சுக் கரங்களைப் பற்றி பிடித்திருந்த பொழுது; நாம் தேவனுடைய கண்ணின் மணியைப் போல் அருமையாக இருப்பதால் அவர் எவ்வளவுக்கதிமாய் நம்மை நேசிக்கிறார் என்று சிந்திக்கலானாள்.
பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து தேவ ஜனங்கள் விடுதலை பெற்று எருசலேமுக்கு திரும்பி வந்த பொழுது அவர்களை சகரியா தீர்க்கதரிசி தேவனுடைய…
பழக்கமில்லாதவர்களும் வெளிநாட்டினரும்
கேம்பிரிட்ஜின் வரைபடத்தை எனது விரல்களால் தடவிப்பார்த்து, நிச்சயப்படுத்திக் கொண்டு என் மிதிவண்டியை நிறுத்தினேன். திசைகள் பற்றி தெளிவில்லாத நிலையில் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பல கட்டிடங்களைக் கொண்ட அந்த சாலைகளின் வலைபோன்ற அமைப்பில் நான் எளிதாக தொலைந்து போகக் கூடிய நிலையில் இருந்தேன்.
சமீபத்தில் ஒரு ஆங்கிலேயரை திருமணம் செய்ததினால் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து விட்டேன். எனது வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதி நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் அப்புதிய இடத்தில் யாரோடும் பிணைக்கப்படாதது போல உணர்ந்தேன். நான் வாய்பேசாமல் இருந்தால் அந்த புதிய…
வாழ்க்கைக்கான பயிற்சி
சமீபத்தில் தன் சரீரத்தையும், மனதையும் கூடுமானவரை பயன்படுத்தின ஓர் பெண்மனியைச் சந்தித்தேன். மலை ஏற்றத்தில் ஈடுபட்டாள், மரணத்தை சந்தித்தாள். கின்னஸ் உலக சாதனையையும் கூட முறியடித்தாள். இப்பொழுது அவள் வேறுவிதமான ஒரு சவாலை ஏற்றுக்கொண்டு, அதில் ஈடுபட்டிருக்கிறாள். அதாவது மாற்றுத் திறனாளியான தன் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பு அவளுக்கு வந்தது. மலை ஏற்றத்தின் பொழுது அவள் பயன்படுத்திய தைரியம், நம்பிக்கையை இப்பொழுது தன் தாய்மைக்குரிய செயல்களுக்காக அர்ப்பணித்தாள்.
1 கொரிந்தியர் நிருபத்தில் பவுல் அப்போஸ்தலன் பந்தய சாலையில் ஓடும் ஓர் ஓட்ட வீரனைப் பற்றி…