1859ஆம் ஆண்டில், ஜோஷ்வா ஆப்ரஹாம் நார்டன் தன்னை அமெரிக்காவின் பேரரசனாக அறிவித்தார். நார்டன், சான் பிரான்சிஸ்கோ ஷிப்பிங்கில் தனது அங்கீகாரத்தை ஏற்படுத்தி தோற்றுபோயிருந்தார். ஆனால் அமெரிக்காவின் பேரரசராக தன்னுடைய புதிய அங்கீகாரத்தை ஸ்தாபிக்க விரும்பினார். சான் பிரான்சிஸ்கோ மாலை செய்தித்தாளில், “பேரரசர்” நார்டனின் அறிவிப்புகள் என்று பிரசுரமாகியிருந்தது. மக்கள் அதைப் பார்த்ததும் சிரித்துவிட்டனர். நார்டன் சமூகத்தின் தீமைகளை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டார். தனது சொந்த நாணயத்தை அச்சிட்டார். மேலும் பிரிட்டிஷ் பேரரசின் ராணி விக்டோரியாவுக்கு கடிதம் எழுதி, அவர் தன்னை திருமணம் செய்துகொண்டு அதின் மூலம் தங்கள் ராஜ்யங்களை ஒன்றிணைக்குமாறு கேட்டுக் கொண்டார். உள்ளுர் தையல்காரர்களால் வடிவமைக்கப்பட்ட அரச இராணுவ சீருடைகளை அவர் அணிந்திருந்தார். “நார்டன் ஒவ்வொரு அங்குலத்திலும் ராஜாவாகவே இருக்கிறார்” என்று ஒரு பார்வையாளர் வர்ணித்தார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படி இருந்ததில்லை. நாம் யாராக இருக்க விரும்புகிறோமோ அவ்வாறு நாம் மாறுவதில்லை. 

நம்மில் பலர் பல ஆண்டுகளாக தங்களை யார் என்றும் தங்களின் மதிப்பு என்னவென்றும் தேடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய அங்கீகாரத்தையோ பெயரையோ வைத்து நம்மால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. தேவன் மாத்திரமே நம்மை யார் என்று அடையாளப்படுத்தமுடியும். ஆச்சரியவிதமாய் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலம் அவர் நம்மை குமாரனாகவும் குமாரத்தியாகவும் அழைப்பு விடுத்து, அவருடைய இரட்சிப்பை அருளினார். “அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான் 1:12) என்று யோவான் சொல்லுகிறார். இந்த அங்கீகாரமானது நமக்குக் கொடுக்கப்பட்ட பரிசு. நாம், “இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (வச. 13). 

தேவன் நமக்கு பெயரையும் கிறிஸ்துவில் அங்கீகாரத்தையும் கொடுக்கிறார். அவர் நம்மை யார் என்று நமக்கு அறிவிப்பதினால் நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை நிறுத்திவிடுவோம்.