நான் நீதிமன்றத்தில் இருந்தபோது, உலகத்தினால் உடைக்கப்பட்ட பல பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன்: தாயிடமிருந்து பிரிந்த மகள்; அன்பைத் தொலைத்துவிட்டு கசப்பை மட்டுமே பகிரும் கணவன் மனைவி; பிள்ளைகளுடன் மீண்டும் இணைய மனைவியுடன் சமரசமாக ஏங்கும் கணவன். தேவனுடைய அன்பு மேம்பட அவர்களுக்கு மாற்றப்பட்ட இருதயங்களும், சுகமாகிய தழும்புகளும் தேவைப்படுகிறது. 

சில நேரங்களில், நம்மைச் சுற்றியுள்ள உலகம் இருளையும், சோர்வையும் பற்றியிருக்கும்போது நாமும் நம்பிக்கையின்மையில் வாழ்கிறோம். இயேசு அந்த முறிவிற்காகவும் வலிக்காகவும் தான் மரித்தார் என்னும் உயரிய சத்தியத்தை அந்த தருணங்களில் பரிசுத்த ஆவியானவர் (யோவான் 14:17) நமக்கு விளங்கப்பண்ணுகிறார். இயேசு மனிதராய் இந்த உலகத்திற்கு வந்தபோது அவர் இருளிலே ஒளியைக் கொண்டுவந்தார் (1:4-5; 8:12). இயேசுவுக்கும் நிக்கொதேமுக்கும் நடைபெற்ற உரையாடலில் இதை நாம் காணமுடியும். நிக்கொதேமு இருளின் மறைவிலே இரகசியமாக வந்து ஒளியை உணர்ந்துகொண்டான் (3:1-2; 19:38-40). 

இயேசு நிக்கொதேமுவுக்கு, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று போதிக்கிறார் (3:16). 

இயேசு ஒளியையும் அன்பையும் இவ்வுலகிற்கு கொண்டுவந்தாலும், பலர் பாவ இருளில் தொலைந்துவிட்டனர் (வச. 19-20). நாம் அவரைப் பின்பற்றினால், இருளை அழிக்கும் ஒளி நம்மிடம் இருக்கம். தேவன் நம்மை அவரின் அன்பின் கலங்கரை விளக்கமாக உருவாக்க நாம் நன்றியுடன் ஜெபிப்போம் (மத்தேயு 5:14-16).