Archives: மே 2020

உங்கள் கண்ணீரை தேவனிடம் எடுத்துச் செல்

கடந்த கோடை காலத்தில், டேல்குவா என்று அழைக்கப் பட்ட திமிங்கலம் குட்டி போட்டது. ஆயினும் அது ஆபத்து நிறைந்த விலங்குகளின் மத்தியிலிருந்தது. அந்த புதிய ஜீவன் எதிர்கால நம்பிக்கையோடிருந்தது. ஆனால் அந்த குட்டி சில நிமிடங்கள் தான் உயிர் வாழ்ந்தது. அந்த திமிங்கலத்தின் கவலை நிறைந்த காட்சிகளை உலகெங்கும் உள்ள மக்கள் பார்த்தனர். டேல்குவா மரித்துப் போன தனது குட்டியின் உடலை, பசிபிக் கடலின் குளிர்ந்த நீரில் பதினேழு நாட்கள் தள்ளிக் கொண்டே சென்று, கடைசியில் கைவிட்டது.

சில வேலைகளில், இயேசுவின் விசுவாசிகளும் தங்கள் கவலைகளோடு என்ன செய்வதென்று தெரியாமல் திணரலாம். நம்முடைய துயரம் நம்பிக்கையற்றதாக காட்சியளித்து, நம்மை பயப்படுத்தலாம். துயரத்தோடு தேவனிடத்தில் கதறும் அநேகரைப் பற்றி வேதாகமத்தில் காண்கின்றோம். உண்மையான பதிலைப் பெற்றுக் கொள்வதில் புலம்பலும், நம்பிக்கையும் ஆகிய இரண்டுமே முக்கிய பங்காற்றுகின்றன.

புலம்பல் என்ற புத்தகத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன, அவை, தங்களின் தேசத்தை இழந்த மக்களின் துயரத்தை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் பகைவர்களால் வேட்டையாடப் பட்டு, சாவின் விளிம்பில் இருக்கின்றனர் (3:52-54). அவர்கள் தேவனை நோக்கி அழுது கூப்பிட்டு, தங்களுக்கு நியாயம் செய்யும் படி கேட்கின்றனர் (வ.64). அவர்கள் நம்பிக்கையிழந்ததால் தேவனை நோக்கிக் கதறவில்லை, தேவன் அவர்களின் கூப்பிடுதலைக் கேட்கின்றார் என்ற நம்பிக்கையில் கதறுகின்றனர், அவர்கள் கூப்பிடும் போது தேவன் அவர்களின் அருகில் வருகின்றார் (வ.57).

இந்த உலகத்தில் அல்லது உன்னுடைய வாழ்வில் உடைந்து போன காரியங்களுக்காகப் புலம்புவதில் எந்த தவறும் இல்லை.தேவன் எப்பொழுதும் கவனிக்கின்றார், பரலோகத்திலிருந்து தேவன் உங்களைப் பார்க்கிறார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

கத்தி தேவதை

ஐக்கிய இராஜியம்(Uk) எங்கும் கத்தி குற்றங்கள் பெருகின போது, பிரிட்டிஷ் இரும்பு வேலை மையம் ஒரு திட்டத்தை வெளியிட்டது. இ       ந்த மையம், உள்ளூர் காவல் துறையோடு இணைந்து, இருநூறு வைப்புப் பெட்டிகளை உருவாக்கி, தேசமெங்கும் வைத்து, பொது மன்னிப்பு பிரச்சாரத்தை வெளியிட்டது. பெயர் குறிப்பிடாமல் ஒரு லட்சம் கத்திகளை ஒப்படைத்தனர், அவற்றுள் சிலவற்றில் இன்னமும் இரத்தக் கறை இருந்தது. பின்னர் அவை கலைஞரான ஆல்ஃபி பிராட்லியிடம் கொடுக்கப் பட்டன. அவர் அவற்றின் முனைகளை மழுங்கச் செய்து, சிலவற்றில் கத்திக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளம் நபர்களின் பெயர்களைப் பதித்தார், சிலவற்றில், முன்னாள் குற்றவாளிகள் கொடுத்த, வருத்தத்தை தெரிவிக்கும் செய்திகளைப் பதித்தார். பின்னர், அனைத்து 100,000 ஆயுதங்களும் பற்ற வைக்கப் பட்டு, கத்தி தேவதை உருவாக்கப் பட்டது, இருபத்தியேழு அடி உயரம் கொண்ட இந்த தேவதை உருவம், மின்னக் கூடிய இறக்கைகளையும் கொண்டிருந்தது.

நான் இந்த தேவதை சிலைக்கு முன்பாக நிற்கும் போது, இதன் மூலம் எத்தனை ஆயிரம் காயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என வியப்படைந்தேன். ஏசாயாவின் புதிய வானம், புதிய பூமியின் தரிசனத்தை நினைத்துப் பார்த்தேன் (ஏசா. 65:17). அங்கு இளம் வயதில் பாலகர்கள் மரிப்பதில்லை (வச. 20), குற்றங்களை  உருவாக்கும்  ஏழ்மையில் அவர்கள் வளர்க்கப்படுவதில்லை (வச, 22-23), கத்தி குற்றங்கள் நடைபெறும் இடமாக அது இருப்பதில்லை, ஏனெனில் எல்லா பட்டயங்களும் ஆக்கப் பூர்வமான வேலைக்குப் பயன்படும் ஆயுதங்களாக மாற்றப்பட்டன (2:4).

அந்த புதிய உலகம் இங்கே இல்லை, அது வரும் வரையிலும் நாம் ஜெபிக்கவும், பணி செய்யவும் கடவோம் (மத்.6:10). தேவன் வாக்களித்துள்ள எதிர்காலத்தின் ஒரு காட்சியை அந்த கத்தி தேவதையும் ஒரு வகையில் வெளிப்படுத்துகின்றாள். பட்டயங்கள் மண் வெட்டிகளாயின, ஆயுதங்கள் கலைப் பொருட்களாயின. வேரென்ன மீட்பின் திட்டங்கள் மூலம் எதிர் காலத்தைப் பற்றிய காட்சியை இன்னும் கொஞ்சம் தர முடியும்?

ஆனந்த தைலம்

ஒரு திரைப்படத்தில் இயேசுவாக நடிக்க வேண்டுமானால், அதனை எப்படிச் செய்ய முற்படுவாய்? இது தான் புரூஸ் மார்சியானோ எதிர் நோக்கிய சவால். 1993 ஆம் ஆண்டு, “மத்தேயு” என்ற வேதாகம திரைப் படத்திற்கு, அவன் இயேசுவாக நடித்தான். அவனுடைய நடிப்பின் மூலம் பல மில்லியன் பார்வையாளர்கள் இயேசுவைக் குறித்து தீர்மானிப்பார்கள் என்பதை உணர்ந்த அவனுக்குள் கிறிஸ்துவைப் பற்றி “மிகத்துல்லியமாக” தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவன் முழங்காலில் நின்று ஜெபித்தான், இயேசுவை நன்கு எனக்கு காட்டும் என வேண்டினான்.

புரூஸ், எபிரெயர் முதலாம் அதிகாரத்திலிருந்து ஒரு தெளிவைப் பெற்றுக் கொண்டான். நம்முடைய பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனை, மற்றவர்களைப் பார்க்கிலும் “ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்” என்பதாக எபிரெயரை ஆக்கியோன் எழுதுகின்றார் (1:9). நாம் கொண்டாடக் கூடிய இந்த மகிழ்ச்சி, நாம் முழு மனதுடன் பிதாவோடு இணைக்கப்பட்டுள்ளதால் வரும் சந்தோஷத்தால் கிடைக்கும். இத்தகைய மகிழ்ச்சியினால் இயேசுவின் இருதயம் நிரப்பப்பட்டதாக  அவருடைய வாழ் நாள் முழுவதும் இருந்தது. எபிரெயர் 12:2ல் கூறப்பட்டுள்ளபடி, “அவர் தமக்கு முன் வைத்திருந்த ச    ந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்”.

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் காரியத்தைஎடுத்துக் கொண்ட புரூஸ், வித்தியாசமான மகிழ்ச்சி நிரம்பிய இரட்சகரின் காட்சிகளைக் கொடுத்தார். அதன் விளைவாக அவன் “புன்னகை ததும்பும் இயேசு” என்று அழைக்கப் பட்டான். நாமும் முழங்காலில் நின்று, “இயேசுவே என்னை உம்மைப் போல் மாற்றும்” என்று கேட்போமாக. அவர் நம்மை அவருடைய குணங்களினால் நிரப்புவார், நம்மைக் காணும் மக்கள் இயேசுவின் அன்பை நம்மில் காண்பர்.

நம்முடைய விருப்பத்தின் படி செல்லும் போது

அலைபேசி சேவையும் இல்லை, நடைபாதையின் வரைபடமும் இல்லை, எங்கள் நினைவில் பதிந்திருந்த வரைபடம்தான் எங்களை வழி நடத்தியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது, கடைசியாக அந்தக் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி, வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அடைந்தோம். ஒரு திருப்பத்தை தவற விட்டதால், மேலும் அரை மைல் தூரம் நடந்தோம்,  நாங்கள் நீண்ட பாதை வழியே நடக்க வேண்டியதாகி விட்டது.

நம்முடைய வாழ்வும் சில வேளைகளில் இதேப் போன்றே உள்ளது. நாம் செய்யும் காரியங்கள் சரியா அல்லது தவறா என்று மட்டும் கேட்பதோடல்லாமல், இது எங்கே என்னைக் கொண்டு போய் சேர்க்கும் என்பதையும் கேட்க வேண்டும். சங்கீதம் 1, இரண்டு வகையான வழிகளை ஒப்பிடுகின்றது. ஒன்று நீதிமானின் வழி (தேவனை நேசிப்பவர்கள்), மற்றது துன்மார்க்கனின் வழி (தேவனை நேசிப்பவர்களை பகைப்பவர்கள்). நீதிமான் மரத்தைப் போல செழிப்பான், துன்மார்க்கனோ காற்றுப் பறக்கடிக்கும் பதரைப் போல் இருக்கிறான் (வ.3-4). செழிப்பு என்பது எவ்வாறு இருக்கும் என்பதையும் இந்த சங்கீதம் காட்டுகின்றது. அவன் எல்லாவற்றிற்கும் தேவனையே சார்ந்து வாழ்ந்து காட்டுவான்.

நாமும் இத்தகைய மனிதனாக எப்படி மாறலாம்? சங்கீதம் 1, நம்மை துன்மார்க்கருடைய நட்பிலிருந்தும், விரும்பத்தகாத பழக்கங்களில் இருந்தும் விலகுமாறு கற்பிக்கின்றது. தேவனுடைய வார்த்தையில் பிரியமாய் இருக்கும் படி (வ.2) நமக்கு கற்பிக்கின்றது. தேவன் நம் மீது கண்ணோக்கமாய் இருக்கும் போது தான், நம்முடைய வாழ்வு செழிக்கும். “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்” (வச. 6).

உன்னுடைய வழிகளை தேவனிடத்தில் ஒப்படைத்து விடு. போகிற இடத்தை அறியாமல் சென்று கொண்டிருக்கின்ற உன்னுடைய பழைய வழியை, அவர் மாற்றி, புதிய வழியில் நடத்துவார், வேத வார்த்தையாகிய நதியை உனக்குள்ளே பாய்ந்து செல்லும்படி செய், அப்பொழுது உன்னுடைய இருதயமாகிய வேர்த் தொகுதி செழித்து வளரும்.