நானும், என்னுடைய குழந்தைகளும் ஒரு புதிய அனுதின பயிற்சியை ஆரம்பித்தோம். ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்லும்முன் நாங்கள் பல பென்சில்களை சேகரித்து வைத்து அதில் ஒரு மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைப்போம். தேவனிடம் எங்களுடைய பாதைக்கு வெளிச்சம் தாரும் என்று கேட்டு விட்டு எங்களுடைய நாளிதழில் வரும் படங்களை வரையவும், இரண்டு கேள்விகளுக்கு விடையெழுதவும் ஆரம்பிப்போம். எங்கு நான் என்னுடைய அன்பைக் காட்டினேன்? எங்கு நான் அன்பைக் காட்டவில்லை?

ஆரம்பத்திலிருந்தே, நம்முடைய அயலகத்தாரை நேசிக்க வேண்டுமென்பது கிறிஸ்தவ வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது (2 யோவா. 1:5). யோவான் தன்னுடைய சபையினருக்கு எழுதின இரண்டாம் கடிதத்தில் கேட்டுக்கொள்வதும் தேவனுக்குக் கீழ்படிந்து ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்பதே (2 யோவா. 1:5-6) யோவானுடைய அனைத்துக் கடிதங்களிலும் பிரதானமாகக் காணப்படுவது அன்பு. நாம் உண்மையான அன்பைச் செயல்படுத்தும் போது சத்தியத்திற்குரியவர்களாகின்றோம், அவருடைய பிரசன்னத்தில் வாழ்கின்றவர்களாவோம்
(1 யோவா. 3:18-19) நானும் என் குழந்தைகளும் எங்களைக் குறித்துச் சிந்திக்கும் போது எங்களுடைய வாழ்வில் அன்பு சிறு செயல்களின் வழியே செயல்பட ஆரம்பித்தது. ஒரு குடையை பகிர்ந்துகொள்வது, கவலையோடிருக்கும் ஒருவரைத் தேற்றுவது, அனைவருக்கும் விருப்பமான ஓர் உணவைச் சமைத்தல் போன்ற செயல்களின் வழியே அன்பு செயல்பட்டது. பிறரைப் பற்றி குறைபேசுதல், பகிர்ந்துகொள்ள மறுத்தல், பிறருடைய தேவைகளைப் பற்றி சிந்திக்காமல் எங்களுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றுதல் ஆகியவை நாங்கள் அன்பைச் செலுத்தத் தவறிய கணங்கள்.

ஓவ்வொரு இரவும் நாங்கள் இவ்வாறு செய்யும் போது, ஒவ்வொரு பகலிலும் நாங்கள் கவனமாகச் செயல்பட உதவியாக இருந்தது. எங்களுடைய வாழ்வில் ஆவியானவர் காட்டும் வழியில் நாங்கள் நடக்க எங்களுக்கு உதவியாயிருந்தது. பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு நாங்கள் அன்போடு நடக்கக் கற்றுக் கொள்கின்றோம் (2 யோவ. 1:6).