கூட்டம் நிறைந்த ஒரு கடையின் நடைப்பாதையில் நின்று கொண்டு, தந்தையர் தினத்திற்கு பொருத்தமான வாழ்த்து அட்டை ஒன்றை கண்டுபிடிக்கப் போராடிக் கொண்டிருந்தேன். பல ஆண்டுகளாக இருந்த உடைக்கப்பட்ட உறவை சரி செய்து, மீண்டும் நாங்கள் மனம் பொருந்தியிருந்தாலும் நான் என் தந்தையோடு மிக நெருக்கமான உறவை உணர்ந்ததில்லை.

என்னருகில் நின்ற ஒரு பெண்மணி முனகிக் கொண்டே தான் வாசித்துக் கெண்டிருந்த அட்டையை மீண்டும் அது இருந்த இடத்திலேயே தள்ளினாள். “தங்கள் தந்தையோடு சரியான உறவிலில்லாமல், ஆனால், அதைச் சரி செய்ய முயற்சிக்கும் மக்களுக்கென்று பொருத்தமான அட்டையை ஏன் இவர்கள் செய்யவில்லை?”

அவளை நான் சமாதானப்படுத்த முயற்சிக்குமுன் வெளியேறிவிட்டாள். எனவே நான் அவளுக்காக ஜெபித்தேன். தேவன் ஒருவரே சம்பூரணத் தந்தையாக இருப்பதற்காக நன்றி கூறிவிட்டு, என்னுடைய தந்தையோடுள்ள உறவை வலுப்படுத்தித் தருமாறு தேவனிடம் கேட்டேன்.

நான் என் பரலோகத் தந்தையோடு ஆழ்ந்த உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். தேவனுடைய மாறாத பிரசன்னத்தையும், அவருடைய வல்லமையையும், பாதுகாப்பையும் தாவீது பெற்றுக் கொண்டது போல நானும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன் (சங். 27:1-6)

தாவீது தேவனை நோக்கி உதவிக்காகக் கூப்பிட்டபோது, அவன் தேவனிடமிருந்து உத்தரவை எதிர்பார்த்தான் (வச. 7-9) உலகப்பிரகாரமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தள்ளிவிடவும், கைவிட்டு விடவும் அல்லது நிராகரித்தும் விடும்போது, தேவன் நம்மை நிபந்தனையற்று சேர்த்துக் கொள்வதை தாவீது வெளிப்படுத்துகின்றார் (வச. 10) தேவன் தன்னை செவ்வையான பாதையில் நடத்துகின்றார். என்ற உறுதியைப் பெற்றுக்கொண்டார் (வச. 10) தேவன் தன்னை செவ்வையான பாதையில் நடத்துகின்றார் என்ற உறுதியைப் பெற்றுக்கொண்டார். (வச. 11-13) நம்மில் அநேகரைப் போன்று தாவீதும் சிலவேளைகளில் போராடினார். ஆனால், பரிசுத்த ஆவியானவர், அவரை அவருடைய நம்பிக்கையிலும் தேவனைச் சார்ந்து வாழ்வதிலும் நிலைத்திருக்கும்படி உதவினார் (வச. 14)

அந்த நடைப்பாதையில் நான் சந்தித்தப் பெண்மணியைப் போன்று, நாமும் நம்முடைய நித்திய வாழ்வுக்கு நேரானப் பாதையில் கடினமான உறவுகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், மக்கள் நம்மை விழத்தள்ளி, கைவிட்டு, காயப்படுத்தினாலும் நம்முடைய சம்பூரணத் தந்தை இன்னமும் நம்மை முழுமையாக நேசிக்கின்றார், பாதுகாக்கின்றார்.