நான் முதன்முதலாக இஸ்டான்புல் என்ற இடத்திலுள்ள, மிக அழகான சோரா தேவாலயத்திற்குச் சென்றேன். அந்த தேவாலயத்தின் கூரையில் அமைந்துள்ள சித்திரவேலைகள், கற்களிலுள்ள வேலைப்பாடுகளின் மூலம் சில வேதாகமக் கதைகளைப் புரிந்து கொண்டேன். ஆனால், அநேகக் காரியங்களை என்னால் யூகிக்க முடியவில்லை. இரண்டாவது முறை நான் அங்கு சென்ற போது என்னோடு ஒரு வழிகாட்டியும் இருந்தார். அவர் நான் முந்தின முறை பார்க்கத் தவறியவற்றையெல்லாம் காட்டி விளக்கினார். அப்பொழுதுதான் அவையெல்லாம் எத்தனை அர்த்தமுள்ளவையெனப் புரிந்துகொண்டேன். எடுத்துக்காட்டாக, முதல் நுழையும் பகுதியில் லூக்கா சுவிசேஷத்தில் குறிப்பிட்டுள்ளபடி இயேசுவின் வாழ்வு படங்கள் மூலம் விளக்கிக் காட்டப்பட்டுள்ளன.

சில வேளைகளில் நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது அடிப்படை கதையைமட்டும் புரிந்து கொள்வோம். ஆனால், வேதாகமத்தின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள விளக்கங்களைக் சரியாகப் பிணைத்து முழுமையான ஒரு சரித்திரத்தைத் தருவது யார்? நமக்கு வேதாகம விளக்கவுரைகளும் கற்பிக்கும் கருவிகளும் இருக்கின்றன. ஆனால், ஒரு வழிகாட்டியால் தான் நம்முடைய அகக் கண்களைத் திறந்து தேவனைப் பற்றிய அதிசயங்களை வெளிப்படுத்திக் காட்ட முடியும். நம்முடைய வழிகாட்டி பரிசுத்த ஆவியானவரே, அவரே நமக்கு “எல்லாவற்றையும்” (யோவா. 14:26) கற்றுத் தருவார். “ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கின்றோம்” (1 கொரி. 2:13) என பவுல் எழுதியுள்ளார்.

புத்தகத்தை எழுதியவரே அவற்றை விளக்கிக் காண்பிப்பதென்பது எத்தனை ஆச்சரியமானது. தேவன் நமக்கு அவருடைய வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் தந்துவிட்டு, அத்தோடு விட்டு விடவில்லை. அவற்றைப் புரிந்துகொள்ள, அவர் நமக்குக் கற்றும் தருகிறார். எனவே நாமும் சங்கீதக்காரனோடு சேர்ந்து கோள்வோம். “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும் (சங். 119:18).