என்னுடைய மனைவி சமீபத்தில் எனக்கு ஒரு லேபரேடார் வகை நாய்க்குட்டியொன்றைக் கொடுத்தார். நாங்கள் அதற்கு மேக்ஸ் என்று பெயரிட்டோம். ஒரு நாள் நான் என்னுடைய படிக்கும் அறையிலிருந்தபோது மேக்ஸும் என்னோடிருந்தது. நான் என்னுடைய எழுத்தில் கவனமாயிருந்தபோது, சில காகிதங்கள் கிழிக்கப்படும் சத்தம் என் பின்னாலிருந்து கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, குற்றவுணர்வோடிருந்த என்னுடைய நாய்க்குட்டியின் வாயிலிருந்து ஒரு திறந்த புத்தகத்தின் சில பக்கங்கள் நொங்கி கொண்டிருந்தன.

எங்களுடைய கால்நடை மருத்துவர், மேக்ஸ், அதனுடைய அசைபோடும் வருடங்களிலிருக்கிறது எனக் சொல்லியிருந்தார். நாய்க்குட்டிகளின் பால்பற்கள் விழுந்து, நிரந்தரபற்கள் தோன்றும்போது, அவை தங்கள் ஊன்களை உறுதிப்படுத்த எதையாகிலும் மென்று கொண்டேயிருக்கும். மேக்ஸ் தனக்கு ஒவ்வாத எதையாகிலும் விழுங்கிவிடாதபடி நான்தான் கவனமாகப் பார்த்திருக்க வேண்டும். நல்ல சுகாதாரமான எதையாகிலும் கடிப்பதற்கு நான் கொடுத்திருக்க வேண்டும்.

மேக்ஸ் அசைபோடுவதற்குத் தள்ளப்படுகிறது. அதனை கவனித்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு. இவ்வாறு நான் நினைத்துக் கொண்டபோது, நான் என்னுடைய மனதிலும் இருதயத்திலும் எவற்றைக் குறித்து அசைபோடுகிறேன், மீண்டும் மீண்டும் சிந்திக்கின்றேன் என்பதைக் குறித்து யோசனைசெய்தேன். நாம் புத்தகங்களை வாசிக்கும் போதும், வலைதளங்களில் நுழையும் போதும், அல்லது டெலிவிஷன் காட்சிகளைப் பார்க்கும் போதும் நம்முடைய ஆன்மாவிற்கு எவற்றைக் கொடுக்கிறோம் என்பதை நாம் கருத்தாய் கவனிக்கின்றோமா? “இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்… நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேது. 2:1,3) என வேதாகமம் நம்மை ஊக்குவிக்கின்றது. நாம் நம்மை தேவனுடைய வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் நிரப்பிக் கொள்வோம் அப்படிச் செய்யும்போது நாம் அவரில் வளர்ந்து முதிர்ச்சி பெறுவோம்.