எனது மகனுக்கு ஒரு சிறிய ரோபோ கிடைத்தபொழுது, அவன் விரும்பின சிறிய, சிறிய வேலைகள் செய்யத்தக்கதாக அதை திட்டமிட்டு அமைத்தது அவனுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. அந்த ரோபோவை முன்புறமாக நடக்கவைக்க, நடப்பதை நிறுத்த, பின்நோக்கி நடக்கவைக்க அவனால் முடிந்தது. அது பீப் ஒலி எழுப்பவோ அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலியை திரும்பக்கூறவோ வைத்தான். என் மகன் கூறினபடியே அந்த ரோபோ எல்லாவற்றையும் செய்தது. ஆனால், இயற்கையாக சிரிக்கவோ அல்லது ஏற்கனவே திட்டமிடப்படாத திசையில் திரும்பவோ அதனால் இயலாது. ஏற்கனவே திட்டமிட்டவைகளைத் தவிர வேறு எந்த செயலையும் அதனால் செய்ய இயலாது.

தேவன் மனிதர்களை சிருஷ்டித்த பொழுது, (அவர்களை) ரோபோக்களைப்போல சிருஷ்டிக்கவில்லை. தேவன் அவருடைய சாயலில் நம்மை சிருஷ்டித்தார். அதனால் நாம் சிந்தித்து செயலாற்றலாம். நாமே தீர்மானங்களை எடுக்கலாம். நன்மை எது, தீமை எது என்பதை நாம் அறிந்து தேர்ந்தெடுக்கலாம். தேவனுக்கு கீழ்ப்படியாத தன்மையை நாம் பழக்கப்படுத்தியிருந்தாலும் கூட, நமது வாழ்க்கையை மறுபடியும் திருத்திக்கொள்ள நம்மால் தீர்மானம் எடுத்துக்கொள்ள இயலும்.

தேவனுடைய வழிகளில் நடப்பதைவிட்டு, இஸ்ரவேல் புத்திரர் வழிதவறினபொழுது, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம் தேவன் பேசினார். “நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை… புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்” (எசே. 18:30–31) என்று எசேக்கியேல் கூறினார்.

இப்படிப்பட்ட மாற்றம், நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு காரியத்தின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டு பரிசுத்தாவியின் வல்லமையினால் செயல்படுகிறது (ரோம. 8:13). மிகவும் நெருக்கடியான நேரத்தில் தேவையற்ற தேர்ந்தெடுத்தலை தவிர்க்கவேண்டிய நிலையாகும். வம்பு வார்த்தைகள் கிடையாது, பேராசை கிடையாது, பொறாமை கிடையாது ______________ (கோடிட்ட இந்த இடத்தில் நீங்கள் விடவேண்டும் என்று நினைக்கிற காரியங்களை நிரப்பிக்கொள்ளுங்கள்). நீங்கள் இயேசுவை அறிந்திருந்தீர்களானால் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளல்ல. நீங்கள் மாறுவதற்கான காரியங்களை தேவனுடைய உதவியோடு தேர்ந்தெடுக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றத்தை இன்றே துவங்கலாம்.