இழப்பிற்காகவோ, சத்தமிட்டு அழவும், கதறவும், உடுத்தியிருக்கும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, துக்கத்தை வெளிப்படுத்தவும், சில கலாச்சாரங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் செயல்களாக உள்ளன. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள் கர்த்தரிடமிருந்து வழிவிலகிப்போனதற்காக, மனம் வருந்தி துக்கப்படும்பொழுது, மேலே கூறப்பட்ட முறைகளில் துக்கத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தி வந்தார்கள்.

மனந்திரும்புதலை அப்படிப்பட்ட முறைகளில் வெளிப்படுத்துவது, உள்ளான உள்ளத்திலிருந்து வருவதாக இருந்தால், அது உண்மையிலேயே நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிற வழிமுறைகளாக இருக்கும். விசுவாசிகள் என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்கள் மத்தியில் கூட, எந்தவித உள்ளான மனமாற்றம் இல்லாமல் வெறுமையாக சரீர அசைவுகள் மட்டும் காணப்படலாம்.

யூதா தேசத்தை வெட்டுக்கிளிகள் அழித்து நாசம் பண்ணினபின்பு, மேலும் அதிகமாக அவர்கள் தேவனால் தண்டிக்கப்படாமல் இருக்க அவர்கள் உண்மையாக மனந்திரும்ப வேண்டுமென்று தேவன், யோவேல் தீர்க்கதரிசியின் மூலமாக யூதா மக்களிடம் கூறினார். “நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (யோவேல் 2:12).

உள்ளான உள்ளத்திலிருந்து செயல்படுமாறு யோவேல் யூதா மக்களிடம் கூறினார். “நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர்கள் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்” (யோவேல் 2:13). உண்மையான மனமாற்றம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகிறது.

நாம் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு, அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரை நாம் நமது முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் அவரை நேசித்து, அவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்று தேவன் மிகவும் ஆவலாக இருக்கிறார்.