எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெரிடன் வாய்ஸிகட்டுரைகள்

ஒரு பாரஊர்தி (truck) ஓட்டுநரின் கரங்கள்

என்னுடைய தகப்பனாருக்கு கணைய புற்றுநோய் வந்துவிட்டது என்ற செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சி தந்தது. ஏற்கனவே அவர் புராஸ்டேட் புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர். என்னுடைய அம்மா நீண்ட சுகவீனத்தால் படுக்கையிலிருந்ததால் அவர்களை கவனித்துக் கொண்டிருந்ததும்  என்னுடைய அப்பாதான்.  இப்பொழுது இருவரையுமே பார்த்துக் கொள்ளவேண்டும் என்றால் கடினமான காரியம்தான்.

நான் அவர்களைப் பார்க்க ஊருக்கு சென்றபோது அவர்கள் ஆலயத்திற்கு ஒரு ஞாயிறு சென்றேன். அப்போது ஒரு மனிதன் என்னை அணுகி “நான் உதவட்டுமா” என்று கேட்டார். இரு நாட்களுக்குப் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு ஒரு பட்டியலோடே வந்தார். கீமோ தெரபி துவங்கும்போது  உங்களுக்கு உணவு வேண்டியதாயிருக்கும் என்றார். “நான் அதை அட்டவணை போட்டு ஏற்பாடு செய்கிறேன், உங்கள் தோட்டத்தில் புல் வெட்ட வேண்டும் அல்லவா? அதையும்  நான் செய்யக்கூடும், உங்கள் வீட்டு குப்பையை அகற்றும் நாள் வாரத்தில் எது?” இவ்வாறாக கேட்டுக்கொண்டே போனார். அவர் ஒரு ஓய்வெடுத்த டிரக் ஓட்டுனர். எங்களுக்கோ தேவதூதர் மாதிரி மாறினார். பலருக்கு  இவ்விதமாக உதவி செய்திருக்கிறார் என்று நாங்கள் பிறகு கேள்விப் பட்டோம்.

இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தவர்கள் எல்லாருமே மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகிறார்கள் (லூக்கா 19:25-37) என்றாலும் சிலருக்கு இவ்வாறு செய்ய சிறப்பான திறமை உண்டு. அப்போஸ்தலர் பவுல் இந்த வரத்தை “இரக்கஞ்செய்கிற வரம்” என்கிறார்..

இந்த வரம் உள்ள மக்கள் தேவையை உடனடியாக கண்டுகொண்டு சோர்வடையாமல் நடைமுறை உதவி செய்வார்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக உந்தப்பட்டு அவர்கள் கிறிஸ்துவினுடைய கரங்களை போல செயல்பட்டு நம்முடைய காயங்களை தொடுவார்கள் (வச. 4-5)..

சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய அப்பா கீமோதெரபிக்கு போக வேண்டியிருந்தது. எங்களுடைய “தேவதூதனே” அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த இரவு வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் உணவு அதிகமாக அடிக்கிவைக்கப்பட்டிருந்தது. தேவனின் இரக்கத்தை  ஒரு டிரக் ஓட்டுனர் கரங்களின் மூலமாக நாங்கள் கண்டுகொண்டோம்.

பார்ப்பதற்கு கண்கள்

‘போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற’ என்ற அர்தத்தைக் கொண்ட அனமார்ஃபிக் கலையின் அற்புதத்தை கண்டுபிடித்தேன். முதலில் சீரற்ற பகுதிகளின் வகைப்படுத்தலாக தோன்றும் அனமார்ஃபிக் சிற்பம், ஒரு சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒரு பக்கத்தில் தொடர்ச்சியான செங்குத்தான வரிசையை ஒன்றுசேர்ந்து ஒரு புகழ்பெற்ற தலைவரின் முகத்தை வெளிப்படுத்துகிறது. மற்றொரு பக்கத்தில் கயிற்றின் தொகுப்பு ஒரு யானையின் வெளிப்புற உருவமாக மாறுகிறது. முற்றொரு கலைப்படைப்பான கம்பியில் தொங்கவிடப்பட்ட நூற்றுக்கணக்கான கருப்பு புள்ளிகள், சரியாக பார்க்கும்போது ஒரு பெண்ணின் கண்ணைப் போல் காட்சியளிக்கின்றன. அனமார்ஃபிக் கலையில், அதன் பொருள் வெளிப்படும் வரை அதை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்த்தால் தான் விளங்கும்.

வரலாறு, கவிதை மற்றும் பல ஆயிரக்கணக்கான வசனங்களைக் கொண்ட வேதாகமம் சில நேரங்களில் புரிந்துக் கொள்வது சற்று கடினமாகவே இருக்கிறது.  ஆனால் அதன் அர்த்தத்தை அறிந்துக் கொள்ள வேதவசனமே கற்றுத்தருகிறது. அதை ஒரு அனமார்ஃபிக் சிற்பமாக நடத்தி: வெவ்வேறு கோணங்களிலிருந்து கவனித்துப் பார்த்து ஆழமாக தியானிக்கவும்.

கிறிஸ்துவின் உவமைகள் இந்த வகையில் தான் செயல்படுகின்றன.  அவைகளைக் குறித்து அதிகமாக சிந்திக்க அக்கரை உள்ளவர்கள்  அதன் அர்த்தத்தை “பார்ப்பதற்க்கு கண்களைப்” பெற்றுக்கொள்ளுகிறார்கள். (மத். 13:10-16).  கர்த்தர் புத்தியை தந்தருளும்படியாய் தான் சொல்லுகிற காரியங்களை சிந்தித்துக்கொள்ள பவுல் தீமோத்தேயுவுக்கு கூறினார். (2 தீமோ. 2:7). சங்கீதம் 119ம் அதிகாரத்தை மீண்டும் மீண்டும் படிப்பது –  வேதத்தை தியானிப்பது ஞானத்தையும் புத்தியையும் தரும். அதன் அர்த்தத்தை அறிந்துக்கொள்ள நம் கண்களைத் திறக்கும். (119:18, 97-99).

ஒரு உவமையை ஒரு வாரத்திற்கு தியானிப்பதும் ஒரு சுவிசேஷ புத்தகத்தை ஒரு அமர்விலேயே வாசிப்பதும் எப்படி இருக்கும் ? ஒரு வசனத்தை எல்லா கோணங்களிலிருந்தும் வாசிக்க நேரத்தை செலவிடுங்கள். ஆழமாய் தியானிக்கவும். வேதத்தை வாசிப்பதன் மூலமாக அல்ல, வேதத்தை தியானிப்பதின் மூலமாகவே நமக்கு வேத அறிவு கிடைக்கும்.

தேவனே, நாங்கள் பார்க்கும்படி எங்களுக்கு கண்களைத் தாரும்.

மின்தூக்கியை சரிசெய்தல்

சாராவுக்கு அவளுடைய மூட்டுக்கள் இடம்பெயறும் ஒரு அரிய நிலை உள்ளது. இதனால் அவள் நகர்வதற்கு மின்சார சக்கர நாற்காலியை சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

சமீபத்தில் ஒரு கூட்டத்திறுகு செல்லும் வழியில், சாரா தன்னுடைய சக்கர நாற்காலியினால் ரயில் நிலையத்திறுகுச் சென்றாள். ஆனால் அங்கு லிஃப்ட் (மின்தூக்கி) உடைந்திருப்பதைக் கண்டாள். மீண்டும், நடைமேடைக்குச் செல்ல வழியில்லாததால், நாற்பது நிமிடங்கள் பிரயாண தூரத்தில் இருக்கும் மற்றொரு ரயில் நிலையத்திற்கு டாக்ஸியில் செல்ல அவளுக்கு கூறப்பட்டது. டாக்ஸி அழைக்கப்பட்டது ஆனால் வரவில்லை. சாரா பிரயாணப்படுவதை விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றாள்.

துரதிர்ஷ்டவசமாக, சாராவுக்கு இது வழக்கமாக நிகழக்கூடியதொன்றாக இருந்தது. உடைந்த லிஃப்டுகள் அவள் ரயில் ஏற தடையாயிருந்தது, மறக்கப்பட்ட வளைவுகளால் அவள் ரயிலிலிருந்து கீழே இறங்க முடியாமல் போய் விடுகிறது. சில நேரங்களில், சாராவுக்கு உதவி தேவைப்படுவதால் ரயில்வே ஊழியர்களுக்கு அவள் ஒரு தொல்லையாகிவிடுகிறாள். அனேக நேரங்களில் அவளுக்கு அழுகையே வந்துவிடும்போல் இருந்தது.

மனித உறவுகளை ஆளும் அனேக வேதாகம சட்டங்கங்களில் “உன்னில் நீ அன்புகூறுவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக” என்பதே பிரதானமானது. (லேவி. 19:18, ரோம. 13:8-10). இப்படிப்பட்ட அன்பு நம்மை பொய், திருட்டு மற்றும் வஞ்சனை செய்வதிலிருந்து தடுக்கிறதுமல்லாமல் (லேவி. 19:11,14), நாம் செயல்படுவதையே மாற்றிவிடுகிறது.  ஊழியர்களை நியாயமான முறையில் நடத்த வேண்டும் (வச. 13). ஏழைகளுக்கு தாராளமாகக் கொடுக்க வேண்டும்(வ 9-10).  சாராவின் விஷயத்தில், லிஃப்டை சரிசெய்து, வளைவுகளை வெளியே இழுத்து விடுபவர்கள், பொறுத்தமற்ற வேலையை செய்யவில்லை மாறாக மற்றவர்களுக்கு முக்கியமான சேவை செய்கிறார்கள்.

வேலையை ஊதியத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ செய்வதாகக் கருதினால், மற்றவர்கள் எரிச்சலூட்டுவதாகவே நினைப்போம். நம்முடைய வேலைகளை அன்பு செலுத்துவதற்கான வாய்ப்பாக கருதினால், நம்முடைய அன்றாட பணிகள் புனித நிறுவனமாக மாறிவிடும்.

நேசிக்கப்படுகின்றாய், அழகானவன், திறமைசாலி

டீன் ஏஜ் மோகன் தன்னம்பிக்கை உள்ளவனாகக் காணப்பட்டான். ஆனால் இந்த தன்னம்பிக்கை, வெறும் முகமூடியாகத்தான் காணப்பட்டது. உண்மையில், குழப்பமான ஒரு வீடு, அவனை பயமுள்ளவனாகவும், தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கத்தையும், அவனுடைய  குடும்பத்தின்  பிரச்சனைகளுக்கு அவன்தான் காரணம் என்ற தவறான உணர்வையும் அவனுக்குள் ஏற்படுத்தி இருந்தது. அவனுக்கு  நினைவு தெரிந்த மட்டும்,   “ஒவ்வொரு நாள் காலையும் நான் குளியல் அறைக்குள் சென்று, கண்ணாடியைப் பார்த்தவனாக, ‘நீ ஒரு முட்டாள், நீ பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கின்றாய், அதற்கெல்லாம் காரணம் நீ தான்’ என்பேன்”.

இவ்வாறு, மோகன் தன்னைத்தானே வெறுக்கும் காரியம், அவனுடைய இருபத்திஒன்றாம் வயது வரை நடைபெற்றது. அப்பொழுது அவனுக்கு இயேசு கிறிஸ்துவோடுள்ள உறவைக்குறித்து ஒரு தெய்வீக வெளிப்பாடு கிடைத்தது. “தேவன் என்னை நிபந்தனையற்ற அன்போடு நேசிக்கின்றார், இதனை எந்த வகையிலும் மாற்றமுடியாது என்பதை உணர்ந்தேன்”, மேலும் “நான் தேவனை ஒரு போதும் துக்கப்படுத்தக் கூடாது, அவர் என்னை ஒரு போதும் தள்ள மாட்டார்” என்றும் நினைவுகூர்ந்தான். இப்பொழுது மோகன் கண்ணாடியில் பார்த்து, தனக்குள்ளாக வேறு வகையாகப் பேசுகின்றான், “நீ நேசிக்கப் படுகின்றாய், நீ விசேஷமானவன், நீ திறமைசாலி” என்றான், “இது உன்னுடைய தவறல்ல” என்றும் கூறிக்கொள்வான்.

இயேசுவை விசுவாசிப்பவர்களிடம் தேவனுடைய ஆவியானவர்  என்ன செய்கின்றார் என்பதை மோகனின் மாற்றம் விளக்குகிறது. அநுபவித்தான். அவர் நம்மை மிகவும் நேசித்து, பயத்திலிருந்து விடுவிக்கின்றார் (ரோம.8:15,38-39), நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை உறுதிபடுத்துகின்றார், இந்த உரிமையினால் வரும் அனைத்து நன்மைகளையும் கொடுக்கின்றார் (8:16-17, 12:6-8). அதன் பயனாக நம் எண்ணம் புதிதாவதால், நம்மைக் குறித்து சரியாக பார்க்க முடிகிறது, நம்முடைய சிந்தனையும் புதியதாகின்றது (12:2-3).

பல ஆண்டுகளுக்குப் பின்பு, மோகன் இன்னமும் ஒவ்வொரு நாளும், தேவன் அவனைக் குறித்து என்ன கூறுகின்றாரோ அந்த வார்த்தைகளை கூறிக்கொண்டேயிருக்கிறான். பரமத் தந்தையின் கண்களில், அவன் நேசிக்கப்படுகின்றான், அவன் அழகானவன், திறமைசாலி. நாமும் கூட அப்படியே!

புதுப்பிக்கப்பட்ட பெலன்

பிறருக்குப் பணிசெய்பவர்கள் தங்களின் ஆற்றலை இழந்து போவதில், ஒரே மாதிரியாக இருப்பதை, ஒரு மன நல மருத்துவர் கண்டார். அதற்கான முதல் அடையாளம் சோர்வு. அடுத்து வருவது, பிறர் மீது வெறுப்பு, எந்த ஒரு முன்னேற்றமும் காட்டாத மக்கள் மீது வெறுப்பு, அதன் பின் கசப்பு, விரக்தி, மனஅழுத்தம்- கடைசியாக வலுவிழந்து போவர்.

உடைந்து போன கனவுகளிலிருந்து மீளல் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர், மக்களோடு, கூட்டங்களில் பேசுகின்ற வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்குப் பின்னர், நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும்படி உதவுவது நன்கு பலனளிப்பதாக இருந்தது, ஆனால் அதன் விளைவையும் சந்தித்தேன். ஒரு நாள், நான் மேடையில் ஏற முயற்சித்த போது மயங்கி விழ இருந்தேன். அன்று இரவு நான் சரியாகத் தூங்கவில்லை. விடுமுறை நாட்கள் என்னுடைய சோர்வை நீக்கவில்லை. மற்றவர்களின் பிரச்சனைகளைக் கேட்பது என்ற எண்ணம் என்னை வெறுப்படையச் செய்தது. அந்த மன நல மருத்துவர் குறிப்பிட்டிருந்த, நிலைக்குள் தள்ளப்பட்டேன்.

சோர்வுகளை விரட்டியடிக்க இரு வழிமுறைகளை வேதாகமம்  குறிப்பிடுகின்றது. ஏசாயா 40 ஆம் அதிகாரத்தில், தேவன் மீதுள்ள நம்பிக்கை சோர்ந்து போகின்ற ஆத்துமாவிற்கு பெலன் கொடுக்கின்றது என்று கூறுகின்றது (வ.29-31). என்னுடைய நிலையற்ற பெலத்தோடு நான் ஓட முயற்சிப்பதைக் காட்டிலும்  தேவன் பேரிலுள்ள நம்பிக்கையோடு அவரில் சார்ந்து இருப்பதே மேலானது. தேவன் நன்மையால் நம்முடைய வாயை திருப்தியாக்குகிறார் என சங்கீதம் 103:5 கூறுகின்றது. இதில் அவர் தருகின்ற மன்னிப்பும், விடுதலையும் அடங்கும் (வ.3-4). மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருபவை யாவும்   அவரிடமிருந்தே வருகின்றது. நான் என்னுடைய கால அட்டவணையை சற்று மாற்றி அமைத்து, ஜெப நேரத்தை அதிகரித்து, ஓய்வுக்கும் படமெடுத்தல் போன்ற சில பொழுது போக்கு நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போது, மீண்டும் சுகத்தை உணர ஆரம்பித்தேன்.

சோர்விலிருந்து தான் பெலவீனம் ஆரம்பிக்கின்றது. அது மேலும் அதிகரிக்காமல், இத்தோடு நிறுத்திவிடுவோம். நம்முடைய வாழ்வில் தேவனை ஆராதிப்பதோடு ஓய்வும் சேரும் போது, நாம் பிறருக்குச் சிறப்பாக பணிசெய்ய முடியும்..

மீண்டும் துடி

2012 ஆம் ஆண்டு, அமெரிக்கன் இசைக் குழுவினர் “Tell Your Heart to Beat Again”( உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்) என்ற ஒரு புதிய பாடலை வெளியிட்டனர். இந்தப் பாடல் ஓர் இருதய மருத்துவரின் உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஒரு நோயாளியின் இருதயத்தைச் சரிசெய்யும்படி, அதனை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கின மருத்துவர், அதைச் சரிசெய்தபின்னர், அதனை, அதனுடைய இடத்தில் நெஞ்சில் பொருத்தினார், மெதுவாக அதனை அமுக்கி செயல்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த இருதயம் செயல்படவில்லை. கடுமையான முயற்சிகளை எடுத்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை. கடைசியாக, அவர் அந்த மயக்க  நிலையிலிருந்த நோயாளியின் அருகில் முழங்காலிட்டார், அவளிடம் பேசினார், “ மிஸ்.ஜாண்சன், நான் உன்னுடைய மருத்துவர் பேசுகின்றேன், இந்த அறுவை சிகிச்சை நன்றாக  முடிந்து விட்டது, உன்னுடைய இருதயம் சரிசெய்யப் பட்டது, இப்பொழுது உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்” என்றார். அவளுடைய இருதயம் துடிக்க ஆரம்பித்தது.

நம்முடைய இருதயத்திற்கு கட்டளை கொடுக்க முடியும் என்ற எண்ணம் சற்று வினோதமாக காணப்படலாம்,  ஆனால் அது ஆவியோடு இணைக்கப்பட்டுள்ளது. “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?......தேவனை நோக்கிக் காத்திரு” (சங். 42:5) என்று சங்கீதக் காரன் தனக்குள்ளாக கேட்கின்றான். மற்றொரு இடத்தில், “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பறுதலுக்குத் திரும்பு” (116:7) என்கின்றார். யுத்தத்தில் இஸ்ரவேலரின் எதிரிகளை தோற்கடித்தபின்னர், நியாயாதிபதியான தெபோராள், யுத்த வேளையில், அவளும் தன்னுடைய இருதயத்தோடு பேசியதாக வெளிப்படுத்துகின்றாள். “என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய்” (நியா.5:21) என்று தன்னுடைய இருதயத்தை திடப்படுத்தினாள், ஏனெனில் தேவன் அவளுக்கு வெற்றியைக் கட்டளையிட்டார் (4:6-7).

நம்முடைய வல்லமையான மருத்துவராகிய தேவன், நம்முடைய இருதயத்தையும் திருப்புகின்றார் (சங்.103:3). பயம், மன அழுத்தம் அல்லது குற்ற உணர்வு நம்முடைய இருதயத்தினுள் வரும் போது, நாமும் நம் ஆத்துமாவை நோக்கி, தைரியமாக இரு, வலிமை    இழந்த இருதயமே, மீண்டும் துடி என்று சொல்வோமாக.

என்ன வேண்டுமானாலும் செய்

சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கிலப் படத்தில், தன்னை மேதை என்று கூறிக்கொள்ளும் ஒருவர், கேமராவிற்கு முன்பாக நின்று கொண்டு, “ திகில், ஊழல், அறியாமை, வறுமை” ஆகியவை வாழ்க்கையை தேவனற்றதாகவும், அபத்தமாகவும் மாற்றுகிறது என்று மார்த்தட்டி பேசுகின்றார். நவீன திரைப்பட வசனங்களில் இது ஒன்றும் புதியதல்லவெனினும், இதில் ஆர்வத்தைத் தருவது என்னவென்றால், இது எங்கே கொண்டு செல்கிறது என்பதே. இறுதியில் முன்னணி நடிகர் பார்வையாளர்களை நோக்கி, எது உங்களுக்கு சிறிதேனும் மகிழ்ச்சியைத் தருகின்றதோ அதைச் செய்யுமாறு வருந்திக் கேட்கின்றார். அவனைப் பொருத்தமட்டில், பாரம்பரிய அறநெறியையும் விட்டு விடும்படி கேட்கின்றான்.

ஆனால், “என்ன வேண்டுமானாலும் செய்” என்பது சரிப்படுமா? பழைய ஏற்பாட்டிலுள்ள பிரசங்கியை எழுதியவர், வாழ்க்கையில் திகிலின் மத்தியில் விரக்தியைச் சந்தித்த அவர், இவ்வகை காரியத்தை அநேக ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்திருக்கின்றார், உலக இன்பங்களின் வாயிலாக சந்தோஷத்தை தேடியிருக்கின்றார் (பிர.2:1,10). மிகச் சிறந்த கட்டுமான வேலைகள் (வ.4-6), செல்வம் (வ7-9), தத்துவங்களை ஆராய்தல் (வ12-16) என பல காரியங்களின் வாயிலாக தேடினார். அவருடைய தீர்வு என்ன? “எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது” (வ.17) என்கின்றார். இவை ஒன்றுமே மரணத்தையும், அழிவையும், அநியாயத்தையும் மேற்கொள்ளக் கூடியவையல்ல (5:13-17).

ஒரேயொரு காரியம் மட்டும் தான் பிரசங்கியை எழுதியோனை விரக்தியிலிருந்து மீட்டது. நம்முடைய வாழ்விலும், வேலையிலும் தேவன் பங்களிக்கும் போதுதான், நம்வாழ்வின் சோதனைகளின் மத்தியிலும் நிறைவைக் காணமுடியும். “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதும்………..தேவனுடைய கரத்திலிரு    ந்து வருகிறது” (2:24). வாழ்க்கை சில வேளைகளில் அர்த்தமற்றதாகத் தோன்றலாம், ஆனால், “உன் சிருஷ்டிகரை நினை” (12:1). வாழ்க்கையைக் கண்டுபிடிக்கும் படி உன் வாழ்நாளை வீணாக்காதே, “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக் கொள்” (வ.13).

தேவனை நம் வாழ்வின் மையமாக வைக்க வில்லையெனின், வாழ்வின் இன்பங்களும், துயரங்களும் ஏமாற்றத்தில் கொண்டு போய் விடும்.

கத்தி தேவதை

ஐக்கிய இராஜியம்(Uk) எங்கும் கத்தி குற்றங்கள் பெருகின போது, பிரிட்டிஷ் இரும்பு வேலை மையம் ஒரு திட்டத்தை வெளியிட்டது. இ       ந்த மையம், உள்ளூர் காவல் துறையோடு இணைந்து, இருநூறு வைப்புப் பெட்டிகளை உருவாக்கி, தேசமெங்கும் வைத்து, பொது மன்னிப்பு பிரச்சாரத்தை வெளியிட்டது. பெயர் குறிப்பிடாமல் ஒரு லட்சம் கத்திகளை ஒப்படைத்தனர், அவற்றுள் சிலவற்றில் இன்னமும் இரத்தக் கறை இருந்தது. பின்னர் அவை கலைஞரான ஆல்ஃபி பிராட்லியிடம் கொடுக்கப் பட்டன. அவர் அவற்றின் முனைகளை மழுங்கச் செய்து, சிலவற்றில் கத்திக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளம் நபர்களின் பெயர்களைப் பதித்தார், சிலவற்றில், முன்னாள் குற்றவாளிகள் கொடுத்த, வருத்தத்தை தெரிவிக்கும் செய்திகளைப் பதித்தார். பின்னர், அனைத்து 100,000 ஆயுதங்களும் பற்ற வைக்கப் பட்டு, கத்தி தேவதை உருவாக்கப் பட்டது, இருபத்தியேழு அடி உயரம் கொண்ட இந்த தேவதை உருவம், மின்னக் கூடிய இறக்கைகளையும் கொண்டிருந்தது.

நான் இந்த தேவதை சிலைக்கு முன்பாக நிற்கும் போது, இதன் மூலம் எத்தனை ஆயிரம் காயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என வியப்படைந்தேன். ஏசாயாவின் புதிய வானம், புதிய பூமியின் தரிசனத்தை நினைத்துப் பார்த்தேன் (ஏசா. 65:17). அங்கு இளம் வயதில் பாலகர்கள் மரிப்பதில்லை (வச. 20), குற்றங்களை  உருவாக்கும்  ஏழ்மையில் அவர்கள் வளர்க்கப்படுவதில்லை (வச, 22-23), கத்தி குற்றங்கள் நடைபெறும் இடமாக அது இருப்பதில்லை, ஏனெனில் எல்லா பட்டயங்களும் ஆக்கப் பூர்வமான வேலைக்குப் பயன்படும் ஆயுதங்களாக மாற்றப்பட்டன (2:4).

அந்த புதிய உலகம் இங்கே இல்லை, அது வரும் வரையிலும் நாம் ஜெபிக்கவும், பணி செய்யவும் கடவோம் (மத்.6:10). தேவன் வாக்களித்துள்ள எதிர்காலத்தின் ஒரு காட்சியை அந்த கத்தி தேவதையும் ஒரு வகையில் வெளிப்படுத்துகின்றாள். பட்டயங்கள் மண் வெட்டிகளாயின, ஆயுதங்கள் கலைப் பொருட்களாயின. வேரென்ன மீட்பின் திட்டங்கள் மூலம் எதிர் காலத்தைப் பற்றிய காட்சியை இன்னும் கொஞ்சம் தர முடியும்?

உனக்கு மிக அருகிலேயே

ஒவ்வொரு நாளும், எருசலேமிலுள்ள ஒரு தபால் நிலையத்தில், விநியோகிக்க முடியாத, குவியலான கடிதங்களைப் பிரிப்பதில் வேலையாட்கள் ஈடுபட்டுள்ளனர். எப்படியாகிலும் அவற்றை அதனதன் பெறுநரிடம் கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகின்றனர். அநேகக் கடிதங்கள், “தேவனுக்கு கடிதங்கள்” என்ற பெட்டியை அடைகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான, இத்தகைய கடிதங்கள் வருகின்றன, அவற்றில் விலாசம் தேவனுக்கு அல்லது இயேசுவுக்கு என்றிருக்கும். இவற்றை என்ன செய்வது என்று அறியாது, திகைத்தனர், வேலையாட்கள் அவற்றை எடுத்துச் சென்று, எருசலேமின் மேற்குப் பக்க சுவரிலுள்ள கற்களுக்கு இடையேயுள்ள மற்ற கடிதங்களோடு வைத்தனர். அதிலுள்ள அநேகக் கடிதங்களில் வேலைக்காகவும், தனக்கு கணவன் அல்லது மனைவி கிடைக்க வேண்டும் எனவும் அல்லது நல்ல சுகத்திற்காகவும் வேண்டி, எழுதப் பட்டிருக்கும். சிலர் பாவமன்னிப்பை கேட்கின்றனர், வேறு சிலர் நன்றியைத் தெரிவிக்கின்றனர். ஒரு மனிதன், மரித்துப் போன தன்னுடைய மனைவி கனவில் வர வேண்டும், ஏனெனில் தான் அவளைப் பார்க்க ஏங்கிக் கொண்டிருப்பதாகக் கேட்கிறார். ஒவ்வொரு அனுப்புனரும், தங்களின் கடிதம் தேவனைச் சேர்ந்து விட்டால், தேவன் கவனிப்பார் என்று நம்புகின்றனர்.

இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தின் வழியே பயணம் செய்கையில் அநேகச் செய்திகளை கற்றுக் கொண்டனர். அவற்றில் ஒன்று, அவர்களின் தேவன் மற்ற தேவர்களைப் போல தூரத்தில் இருப்பவர் அல்ல, செவிடானவரும் அல்ல, ஒரே இடத்தில் தான் இருப்பார், நீண்டபயணம் செய்வதாலோ, அல்லது பன்னாட்டு மெயில் மூலமாகவோதான் அவரை அடையக் கூடும் என்பதாகவும் அல்ல, “நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிற போதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாய் இருக்கிறார்” (உபா. 4:7). இது ஒரு புரட்சிகரமான செய்தியல்லவா! மற்றவர்கள் இவ்வாறு கூற முடியுமா?

தேவன் எருசலேமில் மட்டும் வாழவில்லை, நாம் எங்கிருந்தாலும், அவர் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார், சிலர் இந்த உண்மையை இன்னமும் கண்டுபிடிக்காமல் இருக்கின்றனர், அந்த கடிதங்கள் ஒவ்வொன்றிற்கும், “தேவன் உன்னருகில் தான் இருக்கிறார், அவரிடம் பேசு” என்று பதில் அனுப்பினால், அவர்களும் உண்மையைக் கண்டுபிடிக்கக் கூடுமே.