எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பாட்ரிசியா ரேபோன்கட்டுரைகள்

உறுதியும் நன்மையுமான

அந்த இளம் கேம்பஸ் அலுவலர் என்னுடைய கேள்வியைக் கண்டு கலக்கமடைந்தார். “தேவனுடைய நடத்துதலுக்கும் உதவிக்காகவும் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” என்று நான் கேட்டதற்கு அவர் முகநாடி வேறுபட்டது. “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று பவுல் வலியுறுத்துகிறார். என் கேள்விக்கு பதிலாக, அந்த இளைஞன், “எனக்கு ஜெபத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை” என்று கூறினான். “தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்றும் எனக்கு தோன்றவில்லை” என்று தன் முகத்தை சுருக்கினான். அந்த இளம் அலுவலர் தன்னுடைய சுயபெலத்தில் ஒரு துறைசார்ந்த சாதனையை நிகழ்த்த முற்பட்டு தோற்றுப் போனார். ஏன்? அவர் தேவனை மறுதலித்ததால். 

சபையின் மூலைக்கல்லாகிய கிறிஸ்து தன் சொந்த ஜனத்தினாலேயே எப்போதும் புறக்கணிக்கப்படுகிறவராய் இருக்கிறார் (யோவான் 1:11). பலர் இன்றும் அவரை நிராகரிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை, வேலைகளை, உறுதியாய் ஸ்தாபிக்கப்படாத தேவாலயங்களின் மூலமாகவும், தங்கள் சொந்த திட்டங்கள், கனவுகள் மற்றும் பிற நம்பகத்தன்மையற்ற தளங்களில் தங்களுடைய ஜீவியத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறார்கள். ஆனாலும், நம்முடைய நல்ல இரட்சகர் ஒருவரே நம்முடைய “பெலனும், என் கீதமுமானவர்” (சங்கீதம் 118:14). நிஜத்தில், “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று” (வச. 22). 

நம்முடைய வாழ்க்கையின் மூலையில், அவரை விசுவாசிப்பவர்கள் எவ்விதம் வனையப்படவேண்டும் என்ற திசையை தேவன் தீர்மானிக்கிறார். எனவே அவரை நோக்கி “கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்” (வச. 25) என்று நாம் ஜெபிக்கிறோம். அதின் விளைவு? “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (வச. 26). அவர் உறுதியான மற்றும் நல்ல தேவனாய் இருப்பதால் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம். 

மாற்றத்தின் விளையாட்டு

1963 ஆம் ஆண்டு மார்ச் இரவில், இரண்டு கல்லூரி கூடைப்பந்து வீரர்கள் கருப்பு வெள்ளை பிரிவினைவாதத்தின் வெறுப்பை மீறிக் கைகுலுக்கி, மிசிசிப்பி மாநில வரலாற்றில் முதல் முறையாக முழு வெள்ளை ஆண்கள், ஒருங்கிணைந்த அணிக்கு எதிராக விளையாடியது. லயோலா பல்கலைக்கழகம் சிகாகோவிற்கு எதிராக  "மாற்றத்தின் விளையாட்டு" என்றழைக்கப்பட்ட அந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அவர்களின் மாநிலத்தை விட்டு வெளியேற வீரர்களைத் தடுக்க மிசிசிப்பி மாகாண குழு முயன்றது. அதேபோல லயோலாவின் கறுப்பின வீரர்கள் இதற்கிடையில், அனைத்து போட்டிகளிலும் இன அவதூறுகளை அனுபவித்தனர். நொறுக்குத்தீனிகளையும், பனிக்கட்டிகளையும் அவர்கள் மீது மற்றவர்கள் வீசினார்கள், மேலும் பயணத்தின் போது பல எதிர்ப்புகளையும் எதிர்கொண்டனர்.

ஆனாலும் இளைஞர்கள் விளையாடினார்கள். லயோலா அணியினர், மிசிசிப்பி அணியினரை 61-51 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தனர், மேலும் லயோலா இறுதியில் தேசிய பட்டத்தையும் வென்றது. ஆனால் அந்த இரவில் உண்மையில் வென்றது எது? வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி நகர்தலே வென்றது. இயேசு போதித்தது போல், "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" (லூக்கா 6:27) என்ற தேவனுடைய அறிவுரை வாழ்க்கையை மாற்றும் கருத்தாக இருந்தது.

கிறிஸ்து கற்பித்தபடி நம் எதிரிகளை நேசிக்க, மாற்றத்திற்கான அவரது புரட்சிகரமான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பவுல், "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்றது போல, நம்மில் உள்ள பழையதை அவருடைய புதிய வழி எப்படித் தோற்கடிக்கிறது? அன்பினால்தான்.  ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதின் மூலம் இறுதியாக அவரைக் காணலாம்.

அவருடைய ஒளியை பிரதிபலித்தல்

நிலப்பரப்புகள் அடங்கிய அவரது எண்ணெய்த்தாள் ஓவியங்களில், பிரதிபலிப்பு ஒளியின் அழகைப் படம்பிடிக்க, அந்த கலைஞர் ஒரு முக்கிய கலை சூட்சுமத்தைப் பின்பற்றுகிறார்: "பிரதிபலிக்கப்பட்ட ஒளி அதன் மூல ஒளியைப் போல ஒருபோதும் வலுவாக இருக்காது." ஆனால் அனுபவமற்ற  ஓவியர்கள் பிரதிபலிக்கப்பட்ட ஒளியை மிகைப்படுத்துவதாகக் கூறுகிறார். அவர் "பிரதிபலிக்கப்பட்ட ஒளி நிழலுக்குச் சொந்தமானது, எனவே ஓவியத்தின் ஒளிரும் பகுதிகளுடன் போட்டியிடாமல் அதற்கு இசைவாய் இருக்கவேண்டும்." என்கிறார்.

"மனுஷருக்கு ஒளியாயிருந்தது" (யோவான் 1:4) என்று வேதம் இயேசுவைக் குறிப்பிடுவதில் இதேபோன்ற ஒர் உட்கருத்தை நாம் காண்கிறோம். யோவான் ஸ்நானன் "தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்" (வ. 7). சுவிசேஷ ஆக்கியோன் "அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்." (வ. 8) என்கிறார்.

யோவானை போலவே, விசுவாசமற்ற உலகத்தின் இருளில் வாழ்பவர்களுக்கு கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிக்க நாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டோம். ஒருவர் சொல்வதுபோல "ஒருவேளை அவிசுவாசிகள் அவருடைய ஒளியின் முழு மகிமையையும் நேரடியாகத் தாங்க கூடாமற்போகலாம்" என்பதால் இது நமது பொறுப்பு.

அந்த ஓவிய ஆசிரியர் தமது மாணவர்களுக்கு "ஒர் ஓவியத்தில் நேரடி ஒளி எதன்மீது விழுந்தாலும், அது ஒளியின் ஆதாரமாக மாறும்" என்று கற்பிக்கிறார். அதேபோல, இயேசுவே “எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.” (வச. 9), நாம் சாட்சிகளாகப் பிரகாசிக்க முடியும். நாம் அவரைப் பிரதிபலிக்கும்போது, ​​அவருடைய மகிமை நம் மூலம் பிரகாசிப்பதைக் கண்டு உலகம் வியக்கட்டும்.

ஒருபோதும் தாமதிக்காதே

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஊருக்கு பார்வையாளராய் சென்ற என்னுடைய அமெரிக்க போதகர், காலை 10 மணி ஞாயிறு ஆராதனைக்கு வந்துசேருவதாக உறுதியளித்திருந்தார். ஆலயம் வெறுமையாயிருந்தது. அவர் காத்திருந்தார். ஒரு மணி நேரம் கடந்தது. இரண்டு மணி நேரம் கடந்தது. கடைசியாக, 12:30 மணிக்கு திருச்சபையின் போதகர் உள்ளே வர, அவரைத் தொடர்ந்து பாடல் குழுவினரும், திருச்சபை அங்கத்தினர்களும் உள்ளே பொறுமையாக வந்தனர். ஆராதனை துவங்கியது. “காலம் நிறைவேறினபோது ஆவியானவர் நம்மை அழைத்தார், தேவன் தாமதிக்கவில்லை” என்று என்னுடைய போதகர் பின்பாக எங்களிடம் அந்த சம்பவத்தைக் குறித்து சொன்னார். அந்த இடத்தின் கலாச்சாரம் வித்தியாசமானது என்பதை என்னுடைய போதகர் புரிந்துகொண்டார். 

காலம் என்பது கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வித்தியாசப்படலாம், ஆனால் தேவனுடைய குறித்த நேரம் என்பது வேதத்தில் பரவலாய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லாசரு வியாதிப்பட்டு மரித்தபின்பு, இயேசு நான்கு நாட்கள் கழித்து வருகிறார். லாசருவின் சகோதரியைப் பார்த்து ஏன் என்று விசாரிக்கிறார். மார்த்தாள் இயேசுவிடம் “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” (யோவான் 11:21) என்று கூறுகிறாள். ஏன் தேவன் நம்முடைய அவசரத்திற்கு செயல்பட்டு காரியங்களை சரிசெய்வதில்லை என்று நாமும் அப்படி யோசிக்கலாம். அவருடைய பதிலுக்காகவும் வல்லமையான கிரியைக்காகவும் காத்திருப்பதே நல்லது. 

இறையியல் நிபுணரான ஹொவர்ட் துர்மேன், “பிதாவே, நாங்கள் காத்திருக்கிறோம், உம்முடைய பெலன் எங்களுடைய பெலனாகும் வரை, உம்முடைய இருதயம் எங்களுடைய இருதயமாகும் வரை, உம்முடைய மன்னிப்பு எங்களுடைய மன்னிப்பாகும் வரை, நாங்கள் காத்திருக்கிறோம் தேவனே, நாங்கள் காத்திருக்கிறோம்” என்று எழுதுகிறார். கடைசியில் லாசருவுக்கு தேவன் அற்புதத்தினால் பதிலளித்ததுபோல, நாமும் பதிலைப்பெறும்போது, தாமதத்தின் அர்த்தத்தை சரியாய் விளங்கிக்கொள்ளக் கூடும். 

நான் நானாகவே

அந்த வாலிப பெண்ணால் தூங்கமுடியவில்லை. மாற்றுத்திறனாளியான அவள், மறுநாள் தன் சபையின் மூலமாக தன் உயர்கல்விக்கான உதவித்தொகையைப் பெறவிருந்தாள். 'ஆனால், இதற்கு நான் தகுதியற்றவள்' என்று சார்லோட் எளியோட் எண்ணினாள். தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வின் அம்சங்களைக் குறித்துச் சந்தேகப்பட்டவள், தன்னுடைய தகுதியில் திருப்தியடையாமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள். மறுநாளும் மன அமைதியின்றி, இறுதியாகத் தனது மேஜைக்கு நகர்ந்து பேனாவையெடுத்து, காகிதத்தில் "நான் பாவிதான்" என்ற அரும்பெரும் பாடலின் வரிகளை எழுதினாள்.

"நான் பாவிதான், ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்; வா என்று என்னை அழைத்தீர். என் மீட்பரே, வந்தேன்"

1835 இல் எழுதப்பட்ட இந்த பாடலின் வரிகள், இயேசு எவ்வாறு தன்னுடைய சீஷர்களை தெரிந்துகொண்டு தமக்கு ஊழியம் செய்ய வைத்தார் என்பதை விவரிக்கின்றன. அவர்கள் ஆயத்தமாய் இருந்ததாலல்ல. அவர்கள் அப்படி இருக்கவுமில்லை. அவர்கள் இருந்தவண்ணமாகவே அவர்களுக்கு அவர் அதிகாரம் அளித்ததால்தான். தகுதியற்றவர்களாலான கூட்டம், பன்னிரெண்டு பேரிருந்த குழுவில்; வரி வசூலிப்பவன், அதிகப்பிரசங்கி, கட்டுக்கடங்காத இரு சகோதரர்கள் (பார்க்கவும். மாற்கு 10:35–37), மேலும் அவரை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து (மத்தேயு 10:4) உள்ளிட்டோர் இருந்தனர். ஆயினும், அவர் அவர்களுக்கு "வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்க, குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ண, மரித்தோரை எழுப்ப, பிசாசுகளைத் துரத்த;" (வ. 8) அதிகாரம் கொடுத்தார். மேலும் இவற்றைச்  செய்கையில் பணம் பெற வேண்டாமென்றும்;  பயணசுமைகள், மாற்று வஸ்திரங்கள் மற்றும் பாதரட்சைகள், வழித்தடிகள் ஆகியவற்றை தவிர்க்கவும் சொன்னார் (வ. 9–10).

"நான் உங்களை அனுப்புகிறேன்" (வ.16) என்றவரே போதுமானவராயிருந்தார். இன்றைக்கும் அவருக்குச் செவிகொடுப்போருக்கு, அவர் போதுமானவர்.

தொலைநோக்குக் கனவுகள்

கிறிஸ்துமஸிற்கு முந்தின ஒரு பரபரப்பான நாளில், மூதாட்டி ஒருவர் என் வீட்டினருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்தார். அவருடைய மெதுவான அசைவைப் பொறுமையாகக் கவனித்த தபால் நிலையத்தின் எழுத்தர், "வருக இளம் பெண்ணே" என்றார். அவர் வார்த்தைகளிலிருந்த கனிவைக் கவனித்த அனைவருக்கும் "இளம் பெண்ணே" என்று அவர் அழைத்தது பிடித்திருந்தது.

வயது முதிர்ந்தவர்கள் நமது நம்பிக்கையை ஊக்குவிப்பதை வேதத்தில் காணலாம். பிள்ளையாகிய இயேசுவைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க மரியாளும் யோசேப்பும் ஆலயத்திற்கு வந்தனர் (லூக்கா 2:23; யாத்திராகமம் 13:2, 12), அங்கே திடீரென இரண்டு முதியவர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள்.

முதலாவது சிமியோன், இவர் மேசியாவை காணப் பல ஆண்டுகள் காத்திருந்தார். இவர் இயேசுவைக் கையில் ஏந்தி, " ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" (லூக்கா 2:29–32). என்றார்.

பிறகு சிமியோன், மரியாளிடமும் யோசேப்பிடமும் பேசிக்கொண்டிருக்கையில் அன்னாள் என்னும் மிகவும் வயதான தீர்க்கதரிசி (வ.36) அங்கே வருகிறாள். திருமணமாகி ஏழே ஆண்டுகளில் விதவையான இவள், தனது எண்பத்து நான்காம் வயதுவரை தேவாலயத்தில் வாழ்ந்தவள். தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தவள். இவள் இயேசுவைக் கண்டவுடன், தேவனைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அந்தப் பிள்ளையைக் குறித்துப் பேசினாள். (வ.37–38).

நமக்கு எவ்வளவு வயதானாலும், பெரும் எதிர்பார்ப்புகளோடு தேவனுக்காகக் காத்திருப்பதை நிறுத்த வேண்டாமென்று நம்பிக்கையான இவ்விரு ஊழியக்காரர்களும் நமக்கு நினைப்பூட்டுகின்றனர்.

குழப்பத்திற்கு அல்ல, கிறிஸ்துவுக்கு செவி கொடுத்தல்

ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்த அந்த முதியவர் அதிக வேதனைப்பட்டார். உலகம் அழிந்துகொண்டிருப்பது மட்டுமின்றி, அது தன்னையும் அதற்கு நேராய் இழுத்துக்கொண்டுபோகிறது என்று வேதனைப்பட்டார். “தயவுசெய்து அதை நிறுத்துங்கள்,” என்று அவரது மூத்த மகள் அவரிடம் கெஞ்சினாள். “அதைக் கேட்பதை நிறுத்துங்கள்.” ஆனால் அவரோ தொடர்ந்து சமூக ஊடகங்கள் மற்றும் பிற செய்திகளை கேட்பதில் அதிக நேரத்தை செலவிட்டார்.

நமக்கு முக்கியமாய் தோன்றுகிற காரியங்களில் நாம் ஈடுபாடு செலுத்துகிறோம். இயேசு பொந்தியு பிலாத்துவை சந்திக்கும் சந்திப்பில் இதைக் காண்கிறோம். மார்க்கத் தலைவர்கள் இயேசுவின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையில் பிலாத்து அவரை அழைத்து, “நீ யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான் (யோவான் 18:33). அதற்கு இயேசு, “நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ?” (வச. 34) என்று அதிர்ச்சியூட்டும் கேள்வியை பதிலாக்குகிறார்.

அதே கேள்வி இன்றும் நம்மிடமும் எழுப்பப்படுகிறது. பரபரப்பான இந்த உலகத்தில் நாம் குழப்பத்திற்கு செவிகொடுக்கிறோமா அல்லது கிறிஸ்துவுக்கு செவிகொடுக்கிறோமா? “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது” என்றும் “நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:27) என்றும் இயேசு சொல்லுகிறார். அவரை சந்தேகிக்கும் மார்க்கத் தலைவர்களுக்கு தன்னை வெளிப்படுத்தும் விதமாய் இயேசு அந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறார் (வச. 6). ஒரு நல்ல மேய்ப்பனாக இயேசு, “அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம்” (வச. 4-5) என்றார்.

நம்முடைய நல்ல மேய்ப்பராக, எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய சத்தத்தைக் கேட்டும்படிக்கு இயேசு நமக்கு கட்டளையிடுகிறார். அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்து இளைப்பாறுதலை சுதந்தரிப்போம்.

தேவனின் முன்னறிவை நம்புதல்

ஒரு அறிமுகமில்லாத இடத்திற்கு என்னை அழைத்துச் சென்ற என்னுடைய கணவர், (தடங்காட்டி) ஜீ.பி.எஸ் தவறாய் வழிகாட்டிவிட்டது என்றார். நான்குவழிச் சாலையை அடைந்த நாங்கள், அதனோடு இணைந்து வரும் ஒரு வழிப்பாதையை தேர்ந்தெடுக்கும்படி வழிநடத்தப்பட்டோம். தாமதம் செய்யாமல், “இது சரியாயிருக்கும்” என்று டேன் கூறினார். பத்து மைல்கள் தூரம் கடந்த பின்பு, எங்களுக்கு அருகாமை பாதையில் கடந்து சென்ற வாகனங்கள் வாகன நெரிசலுக்கு உட்பட்டுத் தேங்கி நின்றது. ஏதாகினும் பிரச்சனையா? பெரிய கட்டுமானப்பணி நடைபெறுகிறது என்று தடங்காட்டி சொன்னது. அங்கிருந்த துணை பாதை வழியாய் சென்றால் எளிதாய் போய்விடலாம் என்று தடங்காட்டி எங்களுக்கு வழிகாட்டியது. “தொலைவில் என்ன இருக்கிறது என்பதை என்னால் பார்க்கமுடியாது; ஆனால் தடங்காட்டி அதைப் பார்க்கமுடியும்” என்று டேன் சொன்னார். தேவனை நம்புவதும் அப்படித்தான் என்பதை நாங்கள் ஒத்துக்கொண்டோம்.
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிற (மத்தேயு 2:2) இயேசுவைப் பணிந்துகொள்ளும்படி கிழக்கிலிருந்து வந்த ஞானிகளின் முன்பாக இருந்ததை முன்னறிந்து அவர்களின் கனவிலே தேவன் அவர்கள் பாதையை மாற்றினார். தனக்குப் போட்டியாகப் பிறந்த ராஜாவின் பிறப்பால் கலங்கிய ஏரோது ஞானிகளிடம், "நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்" (வ.8). பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.(வ.12)
தேவன் நம்மையும் வழிநடத்துகிறவர். வாழ்க்கையின் நெடுஞ்சாலைகளில் நாம் கடந்துசெல்லும்போது, எதிர்கொண்டு வருகிற அனைத்தையும் அவர் பார்க்கிறார் என்ற உறுதியுடன் “அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார்” என்று நம்பி அவருடைய வழிகளுக்குப் பூரணமாய் ஒப்புக்கொடுப்போம்.

ஆகாயத்துப் பறவைகள்

கோடை வெயில் உதயமாகிக்கொண்டிருந்தது. என் பக்கத்து வீட்டு நபர் புன்சிரிப்போடு எதையோ காண்பித்து, என்னைப் பார்க்க வருமாறு கிசுகிசுத்தார். “என்ன?” நான் ஆர்வத்துடன் கேட்டேன். அவள் முன் வராந்தாவில் ஒரு காற்றாடி ஒலிப்பதைக் காட்டினாள், அங்கிருந்த உலோகப்படியின் மேல் சிறிதளவு வைக்கோல் இருந்தது. “பாடும் குருவிக் கூடு,” என்று அவள் கூறினாள். “குஞ்சுகளை பார்த்தாயா?” அதின் கூர்மையான அலகுகள் மேல்நோக்கி இருந்தது. “அவைகள் அதின் அம்மாவுக்காக காத்திருக்கிறது.” நாங்கள் அவைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். அதைப் படம்பிடிப்பதற்காக அலைப்பேசியை உயர்த்தினேன். “ரொம்ப பக்கத்துல போகாதீங்க” என்று என்னை எச்சரித்தாள். “அதின் அம்மாவைப் பயமுறுத்த விரும்பவில்லை.” பாடும் பறவைகளின் குடும்பத்தை தூரத்திலிருந்தே நாங்கள் பராமரித்தோம்.
ஆனால் சில நாட்களிலேயே, அவைகள் எப்படி வந்ததோ. அதேபோல அந்த தாய் பறவையும் மற்ற குஞ்சுகளும் அந்த இடத்தை விட்டுப் பறந்துபோனது. யார் அவைகளைக் குறித்து யோசிக்கப்போகிறார்கள்?
வேதாகமம் மகிமையான ஆனால் நமக்கு பரீட்சயமான பதிலை கொடுக்கிறது. அது வாக்குபண்ணியவற்றை நாம் மறக்கிற அளவிற்கு நமக்கு பரீட்சயமான பதில்: “உங்கள் ஜீவனுக்காக... கவலைப்படாதிருங்கள்” (மத்தேயு 6:25). எளிமையான, அழகான ஆலோசனை. அவர், “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்”(வச.26) என்று சொல்லுகிறார்.
சிறிய பறவையை அவர் எந்த அளவிற்குப் பொறுப்பேற்கிறாரோ, அதை விட நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவற்றைப் போஷித்துப் பராமரிக்கிறார். இது மகிமையான வாக்குறுதி. எந்த கவலையும் இல்லாமல், அனுதினமும் நாம் அவரை நோக்கிப் பார்த்து, சிறகடித்து எழும்புவோம்.