எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டாரா பேட்டன்கட்டுரைகள்

தேவனின் நகர்வுகள்

நான் வார்த்தை புதிர் விளையாட்டை அதிகம் விரும்புவேன். ஒரு குறிப்பிட்ட விளையாட்டிற்கு பிறகு என்னுடைய அந்த திரும்புமுனையான நகர்வுக்கு என்னுடைய நண்பர்கள் “கடாரா” என்ற என்னுடைய பெயரை வைத்து அழைக்க ஆரம்பித்தனர். அந்த விளையாட்டில் அனைவரும் விளையாடி முடித்தவுடன், மீதமிருந்த எழுத்துக்களை நான் ஒன்று சேர்த்து, ஆட்டம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் கொள்ளும் ஏழு எழுத்து வார்த்தையை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினேன். அதினிமித்தம் நான் ஐம்பது போனஸ் புள்ளிகளைப் பெற்றேன். மற்ற போட்டியாளர்களிடம் மீதமிருந்த அனைத்துப் புள்ளிகளையும் பெற்றேன். ஆட்டத்தின் கடைசி இடத்திலிருந்த நான் முதல் இடத்திற்கு நகர்ந்தேன். இப்போது நாங்கள் விளையாடும் போதெல்லாம் ஆட்டத்தில் யாராவது பின்தங்கியிருந்தால், மீண்டும் ஒரு “கடாரா” நிகழக்கூடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உதித்திருக்கிறது.

கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைவுகூருவது நம் ஆவியை புத்துணர்வு அடையச் செய்து நம் நம்பிக்கையை கட்டுகிறது. இஸ்ரவேலர்கள் பஸ்காவைக் கொண்டாடியபோது அதைத்தான் செய்தார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்தில் பார்வோனால் ஒடுக்கப்பட்டபோது தேவன் அவர்களுக்கு என்ன செய்தார் என்பதை பஸ்கா நினைவுபடுத்துகிறது (யாத்திராகமம் 1:6-14). அவர்கள் தேவனிடம் கூக்குரலிட்டபோது, தேவன் தன்னுடைய ஜனத்தை மகத்துவமான வழியில் விடுவித்தார். அவர்கள் வீடுகளின் நிலைக்கால்களில் இரத்தத்தை தெளிக்குமாறும், அதினிமித்தம் சங்கார தூதன் அவ்வழியாய் கடந்துபோகும்போது, அவர்களின் தலைச்சன் பிள்ளைகள் உயிரோடே காக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு அறிவித்திருந்தார் (12:12-13). அதின்படி அவர்கள் உயிரோடே காக்கப்பட்டனர்.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்டெடுத்த சிலுவை தியாகத்தின் நினைவுகூருதலாய் கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கிறோம் (1 கொரிந்தியர் 11:23-26). தேவன் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூருவதென்பது, நமக்கு இன்றும் நம்பிக்கையளிக்கக்கூடியதாயிருக்கிறது.

இயேசு இங்கே இருக்கிறார்

வயது சென்ற என்னுடைய அத்தை, முகத்தில் புன்னகையுடன் நோய்வாய்ப்பட்ட படுக்கையில் கிடந்தார். அவரது நரைத்த தலைமுடி அவர் முகத்திலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு, சுருக்கங்கள் அவருடைய கன்னங்களை மூடியிருந்தன. அவர் அதிகம் பேசவில்லை, ஆனால் என் பெற்றோருடன் நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் சொன்ன சில வார்த்தைகள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. “நான் தனிமை அடைவதில்லை, இயேசு என்னுடன் இருக்கிறார்" என்று அவர் முனுமுனுத்தார்.

அன்று ஒரு தனி பெண்மணியாய் நின்ற என் அத்தையின் வார்த்தைகளைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் அவரது குழந்தைகள் தொலைதூரத்தில் வசித்து வந்தனர். அவரது தொண்ணூறாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில், அவர் படுத்தபடுக்கையானார். ஆனாலும் அவர் தனிமையில் இல்லை என்று அவரால் சொல்லமுடிந்தது.

“நிச்சயமாக நான் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை என் அத்தை நம்பியதுபோல நாமும் நம்பவேண்டும். உலகத்தில் போய் தன்னுடைய சுவிசேஷத்தை மக்களுக்கு பறைசாற்றுபடியாகவும், தான் அவர்களோடே இருப்பதாகவும் தன்னுடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்ட (வச. 19) இயேசுவின் ஆவி தன்னுடன் இருப்பதாக என்னுடைய அத்தை நம்பினார். பரிசுத்த ஆவியானவர் சீஷர்களுடனும் நம்முடனும் இருப்பார் என்று இயேசு வாக்குப்பண்ணுகிறார் (யோவான் 14:16-17).

அந்த வாக்குறுதியின் பலனை என் அத்தை அனுபவித்தார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் படுக்கையில் படுத்திருந்தபோது, பரிசுத்த ஆவி அவருக்குள் இருந்தது. ஆவியானவர் தம்முடைய சத்தியத்தை, என் அத்தையின் மூலம் ஒரு இளம் மகளாய் இருக்கக்கூடிய எனக்கு பகிர்ந்துகொள்ள உதவிசெய்தார்.

சிறப்பாய் முடியுங்கள்

என் நாற்பது நிமிட உடற்பயிற்சியின் கடைசி நிமிடங்களை நெருங்கும்போது, என் உடற்பயிற்சி ஆலோசகர், “சிறப்பாய் முடியுங்கள்” என்று கத்துவார். நான் அறிந்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் அநேகர், பயிற்சி நிறைவுறும் முன் அப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன். பயிற்சியை துவங்குவதுப் போலவே, அதை நிறைவுச்செய்வதும் முக்கியம் என்பதை அவர்கள் அறிவார்கள். மனித உடல் தொடர்ச்சியாக இயங்குகையில், அது தளரும் அல்லது தோயும் என்றும் அறிவார்கள்.
இது, நம் கிறிஸ்தவ ஓட்டத்திற்கும் பொருந்தும். கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக, தான் அதிக உபத்திரவத்தை சந்திக்கப்போகிகிறதை அறிந்து, எருசலேமுக்கு போகையில் பவுல், எபேசுவிலிருந்த மூப்பர்களுக்கு தன் ஓட்டத்தை சிறப்பாய் முடிக்கவேண்டும் என்ற தன் எதிர்பார்பை அறிவிக்கிறார் (அப்போஸ்தலர் 20:17-24). எனினும். பவுல் தடுமாறவில்லை. தேவன் அவரை எதற்காய் அழைத்தாரோ, அதை நேர்த்தியாய் செய்வதே பவுலின் நோக்கம். “தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை” (வச. 24) பிரசங்கிப்பதே அவருடைய பணி. அதை நேர்த்தியாய் செய்து முடிக்க விரும்பினார். தன்னுடைய பாதையில் பாடுகள் வந்தாலும் (வச. 23), தன்னுடைய ஓட்டத்தில் நிலையாய் நின்று, முடிவுக் கோட்டை நோக்கி விரைந்தார்.
நாம் நம்முடைய உடற்பயிற்சியை செய்தாலும், அல்லது தேவன் நமக்குக் கொடுத்த திறமைகள், வார்த்தைகள் மற்றும் கிரியைகளை செயல்படுத்தினாலும், அதை நேர்த்தியாய் நிறைவு செய்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறோம். “சோர்ந்துபோகாமல் இருப்போமாக” (கலாத்தியர் 6:9). பின்வாங்காதீர்கள். உங்கள் ஓட்டத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்வதற்கு தேவையானதை தேவன் அருளுவார்.

ஞானமான ஆலோசனை

நான் வேதாகம கல்லூரியில் பயிலும்போது, முழுநேர வேலையிலும் ஈடுபட்டிருந்தேன். அதேவேளையில் பகுதி நேர போதகராக, சுற்றுமுறையில் ஒரு சபையிலும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் பரபரப்பாக இருந்தேன். என் தந்தை என்னை சந்தித்தபோது, “நீ முடங்கிடுவாய்” என்றார். அவர் அந்த காலத்தை சேர்ந்தவர் என்றும், இலக்கை நிர்ணயிப்பதைக் குறித்து அறியாதவர் என்றுமெண்ணி, அவர் எச்சரிப்பை உதறித் தள்ளினேன்.

நான் முடங்கவில்லை. ஆனால் கடும் வறட்சியான, கடினமான காலகட்டத்தில் மன அழுத்ததில் வீழ்ந்தேன். அன்றிலிருந்து, எச்சரிப்புகளுக்கு செவிசாய்க்கக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக என்னை நேசிக்கிறவர்களிடமிருந்து அது வரும்போது அவற்றை கவனமாகக் கேட்பேன்.

அது எனக்கு மோசேயின் சம்பவத்தை நினைப்பூட்டுகிறது. அவர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக, விடாமுயற்சியுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார் (யாத்திராகமம் 18:13). எனினும், தன் மாமனாரின் எச்சரிப்புக்கு செவிகொடுத்தார் (வச. 17–18). எத்திரோ, செய்வதற்கு அநேக வேலைகள் அவருக்கில்லை. ஆனால், அவர் மோசேயையும் அவனுடைய குடும்பத்தையும் நேசித்ததால், வரப்போகும் பிரச்சனையை முன்னறிந்தார். ஒருவேளை மோசே எத்திரோக்கு செவிசாய்த்து, அவர் ஆலோசனையைக் கேட்க இதுவும் காரணமாயிருக்கலாம். மோசே, சிறிய பிரச்சனைகளைத் தீர்க்க “ஜனங்களுக்குள் விசேஷித்தவர்களை” தெரிந்துகொண்டு, பெரிய பிரச்சனைகளை தானே கையாளுகிறார் (வச. 21–22). அவர் எத்திரோவின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, தன் பாரத்தை தானே சுமக்காமல், மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுத்ததினால் அவருக்கு எதிர்படவிருந்த பிரச்சனைகளைத் தவிர்க்க முடிந்தது.
தேவனுக்கு செய்யும் ஊழியமோ, அல்லது குடும்ப காரியங்களோ அல்லது மற்ற காரியங்களைச் செய்வதற்கு இன்று நம்மில் அநேகர் ஆர்வம் காண்பிக்கிறோம். ஆனால் நம்மை நேசிக்கும் நம்பிக்கைக்குரிய நபர்களின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, நாம் செய்யும் அனைத்திலும் தேவனின் ஞானத்தையும், வல்லமையையும் சார்ந்துகொள்ள வேண்டும்.

நம் நேரத்தை மீட்டுக்கொள்ளல்

1960களில், என்னுடைய தகப்பனாரை திருமணம் செய்யும் பொருட்டு என்னுடைய தாயார் தன்னுடைய கல்லூரி படிப்பை தவிர்க்க வேண்டியிருந்தது என்ற தகவலை என்னிடத்தில் பகிர்ந்துகொண்டார். வீட்டுபொருளியல் துறையில் ஆசிரியராய் பணியாற்ற வேண்டும் என்ற அவருடைய கனவையும் என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார். மூன்று பிள்ளைகளைப் பெற்ற பின்பு, அவர் கல்லூரிப் பட்டம் பெறவில்லை என்றாலும், அரசு நடத்தும் நிறுவனம் ஒன்றிற்கு ஊட்டச்சத்து உதவியாளராக பணியாற்றினார். ஒரு வீட்டுபொருளியல் ஆசிரியரைப் போன்று, ஆரோக்கியமான உணவுகளை செய்து நிருபித்துக் காண்பித்தார். அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து, தேவன் தன்னுடைய ஜெபத்தைக் கேட்டு தன் இருதயத்தின் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார் என்று அவர் என்னிடத்தில் பெருமிதத்துடன் கூறினார்.

வாழ்க்கை நமக்கும் அப்படியிருக்கலாம். நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்றாய் இருக்கலாம். ஆனால், தேவனுடனான நம்முடைய உறவும், நேரமும். அவருடைய தேறுதல், அன்பு, மீட்பு போன்ற அழகான குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. வெட்டுக்கிளிகளினால் ஏற்பட்ட சேதத்தினால் (வச. 25) நேரிட்ட இழப்புகளுக்கு தேவன் சரிகட்டுவதாய் யூத ஜனங்களுக்கு (யோவேல் 2:21) வாக்களிக்கிறார். நாம் சந்திக்கிற சவால்கள் மற்றும் நம்முடைய நிறைவேறாத கனவுகள் ஆகியவற்றில் தொடர்ந்து நமக்கு உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார். நாம் அவருக்காய் செய்கிற தியாகங்களுக்காய் நம்மை கனப்படுத்துகிற மீட்பின் தேவனை நாம் ஆராதிக்கிறோம் (மத்தேயு 19:29).

நாம் ஒரு அழிவுக்கேதுவான சவாலை சந்தித்தாலும் சரி அல்லது நனவாக்கப்படாத கனவுகளின் தருணத்தை சந்தித்தாலும் சரி, நம்மை மீட்கிற தேவனை நோக்கிக் கூப்பிட்டு அவருக்கு துதிகளைச் செலுத்துவோம்.

தலைவனை பின்பற்று

வார்த்தைகளே இல்லை. வெறும் இசையும், அசைவும் தான். கோவிட் -19 பெருந்தொற்றின் மத்தியிலே 24 மணி நேர  ஜும்பா தொடர் பயிற்சியில் உலகமெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்தனர். அவர்கள் இந்தியா, சீனா, மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் பகுதிகள், மற்றும் பல இடங்களில் இருந்து அவர்களை, நடத்தின பயிற்சியாளர்களை ஊடக வாயிலில் பின்பற்றினார்கள். இந்த வேறுபட்ட தனிநபர்கள் மொழிகளின் தடைகள் இல்லாமல் ஒன்றாக இசைந்து அசைய முடிந்தது ஏன்? காரணம், 1990களின் மத்தியில் கொலம்பியாவின் உடற்பயிற்சியாளரால் உருவாக்கப்பட்ட இந்த ஜும்பா என்கிற உடற்பயிற்சி  முறையின் பயிற்சியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வாய்மொழி குறிப்புகளை பயன்படுத்துவது கிடையாது. வகுப்பில் பயிற்சியாளர்கள் அசைய, மாணவர்கள் அவர்கள் அசைவை பின்பற்றுவார்கள். ஒரு வார்த்தையும் இன்றி, கூச்சலும் இன்றி அவர்கள் அதைப் பின்பற்றுவார்கள்.

வார்த்தைகள் சிலசமயம் நம்மை இடையமறித்து தடை உண்டு பண்ணக்கூடும். கொரிந்தியர்கள் அனுபவித்தாற்போல சில குழப்பங்களையும் ஏற்படுத்த கூடும், அவர்களுக்கான முதல் நிருபத்தில் பவுல் இதை குறிப்பிடுகிறார். குறி[பிட்ட உணவுகளை உட்கொள்வதை குறித்து உண்டான தர்க்கங்களை விவாதிக்கையில் எழும்பின குழப்பமே அது (1 கொரிந்தியர் 10:27-30). ஆனால் நமது செயல்கள், தடைகளையும், குழப்பங்களையும் கூட கடந்து நிற்கும். இன்றைய வேத வாசிப்பு பகுதியில் பவுல் குறிப்பிடுவது போல, இயேசுவை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று ஜனங்களுக்கு நாம் நமது செயல்கள் மூலம் காண்பிக்க வேண்டும், “அநேகருடைய நன்மையை” விரும்பி தேட வேண்டும் (10:32-33) நாம் இயேசுவின் மாதிரியை பின்பற்றுகையில் (11 :1), அவரை விசுவாசிக்கும்படி நாம் உலகத்தாரை அழைக்கிறோம்.

யாரோ ஒருவர் சொன்னது போல,"சுவிசேஷத்தை எப்போதும் பிரசங்கியுங்கள், தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை உபயோகியுங்கள்". நாம் இயேசுவின் தலைமையை பின்பற்றும்போது, அவர் நமது செயல்களையே நமது விசுவாசத்தின் உண்மையான அடையாளங்களாக வழிநடத்தி மற்றவர்களுக்கு தருவாராக. மேலும் நமது வார்த்தைகளும், செயல்களும் "தேவனுடைய மகிமைக்கென்றே" (10:31) இருப்பதாக.

குயவனின் சக்கரம்

1952ல் மக்களின் கவனமின்மையால் கடையில் இருக்கும் பொருட்களை உடையாமல் தவிர்க்க கடைகாரர் ஒரு அடையாளத்தை வெளியிட்டார்: “நீங்கள் உடைத்த பொருள் உங்களுடையது.” பொருளை வாங்குபவர்களுக்கு அது எச்சரிக்கையின் வார்த்தைகளாக தென்பட்டது. இதுபோன்ற வித்தியாசமான அடையாள வாக்கியங்களை இதுபோன்ற கடைகளில் அநேகம் காணலாம். 

ஆனால் பரம குயவனுடைய கடையில் முரண்பாடான ஒரு வாக்கியத்தை நாம் பார்க்கமுடியும். எரேமியா 18ல் பதிவாகியுள்ள, “நீங்கள் உடைத்தால், நாங்கள் அதைவிட சிறந்ததாய் உருவாக்குவோம்” என்னும் வாக்கியமே அது. எரேமியா ஒரு குயவனின் வீட்டிற்குச் சென்று, குயவன் எவ்வாறு “கெட்டுப்போன” மண்பாண்டத்தை கையில் எடுத்து அதை நேர்த்தியாய் “வேறே பாண்டமாக வனைந்தான்” (வச. 4) என்பதை பார்க்கிறார். தேவன் மிகத்திறமையான குயவன் என்பதையும் நாம் களிமண் என்பதையும் தீர்க்கதரிசி நமக்கு நினைவூட்டுகிறார். தேவன் சர்வவல்லவர் என்பதினால், அவர் உருவாக்கிய பாத்திரத்தைக் கொண்டு தீமையை அழிக்கவும், நம்மில் அழகை உருவாக்கவும் அவரால் முடியும். 

நாம் கெட்டுப்போயிருந்தாலோ அல்லது உடைக்கப்பட்டாலோ தேவனால் நம்மை மீண்டும் உருவாக்க முடியும். அவர் திறன்வாய்ந்த குயவன்; நம்முடைய உடைக்கப்பட்ட வாழ்க்கைத் துண்டுகளைக்கொண்டு புதிய விலையேறப்பெற்ற பாத்திரத்தை அவரால் உருவாக்க முடியும்.  தேவன் நம்முடைய உடைந்த வாழ்க்கைகளையோ தவறுகளையோ, கடந்தகால பாவங்களையோ பயன்படாத விஷயங்களாய் பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக, நமது உடைந்த துண்டுகளை எடுத்து, அவருடைய பார்வைக்கு நலமாய் பட்டபடி மறுவுருவம் கொடுக்கிறார். 

நாம் உடைக்கப்பட்டபோதிலும் அவர் நம்மை பொருட்படுத்துகிறார். உடைந்த துண்டுகளும் அவரின் கைகளில் உபயோகப்படும் அழகான பாத்திரங்களாய் வனையப்படுகிறது (வச. 4). 

வெண்மையாக்கும் மன்னிப்பு

அந்த சிறிய சிவப்பு மாயாஜால செவ்வகப் பெட்டி அற்புதமான ஒன்று. என் சிறுவயதில் அதை வைத்துக்கொண்டு மணிக்கணக்காய் விளையாடுவேன். ஒரு குமிழைத் திருகினால், அதின் திரையில் நேர்க்கோடு தோன்றும். அடுத்த குமிழைத்திருகினால் செங்குத்தான கோட்டை வரைய முடியும். இரு குமிழ்களையும் சேர்த்துத் திருகினால் வரிகள், வட்டங்கள், அழகான மற்ற வடிவங்களை உருவாக்கமுடியும். ஆனால் அந்த மாயாஜால சிவப்புப் பெட்டியை தலைகீழாய் திருப்பி, மேலும் கீழுமாய் அசைக்கும்போதே நிஜமான மாயாஜாலம் தோன்றியது. ஒரு வெற்றுத்திரை தோன்றி, ஒரு புதிய படைப்பை உருவாக்க எனக்கு சந்தர்ப்பம் அளித்தது.

தேவனின் மன்னிப்பு இந்த பெட்டி போன்றது தான். தேவன் நம் பாவங்களை நீக்கி வெண்மையாக மாற்றுகிறார். நாம் செய்த தவறுகளை நாம் நினைவுகூர்ந்தாலும், தேவன் அவற்றை நினைவுகூர்வதில்லை. அவர் நம் பாவங்களை முற்றிலுமாய் கழுவி, அப்புறப்படுத்துகிறார். அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமல் (சங்கீதம் 103:10), கிருபையாக நம்மை மன்னிக்கிறார். நாம் முற்றிலும் தூய்மையாக்கப்பட்ட ஒரு வெற்றுப்பலகை. அவரிடம் மன்னிப்பைத் தேடும்போது, நமக்காய் ஒரு புது வாழ்வு காத்திருக்கிறது. 

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (வச. 12) என்று சங்கீதக்காரன் நமக்கு நினைவுபடுத்துகிறார். தேவனுடைய கண்களில் நம் பாவங்கள் கருஞ்சிவப்பான எழுத்தாகவோ அல்லது ஒரு மோசமான ஓவியமாகவோ தென்படுவதில்லை. அவற்றை நமக்கு எட்டாத தூரத்திற்கு அனுப்பிவிடுகிறார். அதுதான் நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணம். அவருடைய அற்புதமான கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.