எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கெரன் பிம்போகட்டுரைகள்

உயிர்ப்பிக்கும் கடிந்துகொள்ளுதல்

“எதிர்பாராதவிதமாக, நாங்கள் சமீபத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்” என்று ஷ்ரேயா கூறினாள். “அதை நாங்கள் இருவருமே விரும்பவில்லை; ஆனாலும், அவளைச் சுற்றியிருப்பவர்கள் அவளுடைய மனோபாவங்களினாளும், செய்கைகளினாலும் காயப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அப்படிச் சொன்னேன். அந்தப் பெண், ஷ்ரேயா ஆலோசனை கொடுத்துக் கொண்டிருந்த ஒரு வாலிபப் பெண் தான். ஆரம்பத்தில் அவர்களுடைய உரையாடல், சற்று விகற்பமாய் தோன்றினாலும், அது நன்மையாகவும் அவர்களின் உறவை பலப்படுத்தும் விதத்திலும் அமைந்தது. சில வாரங்கள் கழித்து, அவர்கள் இருவரும் சேர்ந்து, மனத்தாழ்மை என்ற கருத்தின் அடிப்படையில் திருச்சபைகளுக்கிடையேயான ஒரு ஜெப நேரத்தை நடத்தினார்கள். 

ஆலோசனை ஊழியங்களல்லாமல், கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்குள் கடினமான உரையாடலில் ஈடுபடுகிறோம். காலத்திற்க்கப்பாற்பட்ட ஞானத்தைப் போதிக்கும் நீதிமொழிகள் புத்தகம், கடிந்துகொள்ளுதலை கொடுப்பதற்கும் பெற்றுக்கொள்ளுவதற்கும் அவசியமான தாழ்மையைக் குறித்து அடிக்கடி எடுத்துரைக்கிறது. ஆரோக்கியமான கடிந்துகொள்ளுதலை, “ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதல்” என்றும், அது மெய்யான ஞானத்திற்கு வழிநடத்துகிறது என்றும் அறிவிக்கிறது (நீதிமொழிகள் 15:31). நீதிமொழிகள் 15:5, மூடன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான், கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி என்கிறது. கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான் (வச. 10) என்று வெளிப்படையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாவின் வாழ்க்கையில் நடந்ததுபோல, அன்பினிமித்தம் நிகழ்ந்த கடிந்துகொள்ளுதல் ஒரு புதிய உறவை துவக்கியது.

உங்களுடைய வாழ்க்கையில், உங்களுடைய அன்பான வார்த்தைகள் மற்றும் திருத்தம் தேவைப்படும் நபர் யாரேனும் இருக்கிறார்களா? அல்லது சமீபத்தில் உங்களிடத்தில் அன்பாய் கடிந்துகொண்டவர்களிடம் நீங்கள் கோபமாகவோ அல்லது வித்தியாசமாகவோ நடந்துகொண்டீர்களா? புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான் (வச. 32). மற்றவர்களை அன்பாய்க் கடிந்துகொள்ளவும், அதே அன்போடு நம்மைக் கடிந்துகொள்கிறவர்களை ஏற்றுக்கொள்ளவும் தேவனிடத்தில் உதவி கேட்போம்.

ஒரு ஜீவனுள்ள பத்திரம்

தன்னுடைய தாத்தாவின் படைப்பை நினைவுகூறும் வகையில் பீட்டர் கிராஃட் - “வேதாகமம், எந்தப் பதிப்பில் இருந்தாலும், அதை எடுப்பவர்கள், அதை புரிந்துக்கொள்வது மட்டுமல்லாமல், வேதத்தை ஜீவனுள்ள பத்திரமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல இப்போதும் பொருத்தமானதாகவும், ஆபத்தானதாகவும், உற்சாகமூட்டுகிறதாயும் இருக்கிறதை அனுபவிக்க வேண்டுமென்றும்” எழுதுகிறார். இளைஞர்கள் மத்தியில் ஊழியம் செய்த, பீட்டருடைய தாத்தா ஜெ.பி. ஃபிலிப்ஸ், இரண்டாம் உலகப்போரின்போது, தன்னுடைய ஆலயத்தில் இருக்கும் மாணவர்களுக்கு உயிரூட்டும் வகையில் ஆங்கில வேதாகமத்தின் புதிய பொழிப்புரையை மேற்கொண்டார். 

ஃபிலிப்புடைய மாணவர்களைப் போல – மொழிபெயர்ப்பின் காரணமாக மட்டுமல்ல - வேதத்தை வாசிக்கவும், அதை அனுபவிக்கவும் தடைகளை எதிர்கொள்கிறோம். நேரம், ஒழுக்கம் அல்லது புரிந்துகொள்ள சரியான கருவிகள் இல்லாதிருக்கலாம். ஆனால் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று சங்கீதம் 1:1-2 கூறுகிறது. வேதத்தை அனுதினமும் தியானிக்கும்போது, நாம் எல்லா சூழ்நிலைகளிலும், எப்பேற்ப்பட்ட கடினமானதாக இருந்தாலும், நாம் தழைக்க முடியும். 

நீங்கள் வேதத்தை எவ்வாறு காண்கிறீர்கள்? இன்றும் வாழ்வதற்கான நுண்ணறிவுடன் இயேசுவை விசுவாசித்து அவரை பின்பற்றுவதற்கான அழைப்பு ஆபத்தானதாகவும், தேவனையும், மனுகுலத்தையும் மிக நெருக்கமாக அறிந்துக்கொள்ள உற்சாகமூட்டுகிறதற்கு பொருத்தமாகவும் இருக்கிறது. நமக்கு தினமும் வாழ்வதற்கு தேவைப்படும் நீர்க்கால்களை (வச. 3) போல இருக்கிறது. இன்றைக்கு அவரைச் சார்ந்துக்கொண்டு, நேரத்தைக் கொடுத்து, சரியான கருவிகளைப் பெற்றுக்கொண்டு, வேதத்தை ஜீவனுள்ள பத்திரமாக அனுபவிக்க தேவன் உதவிசெய்ய கேட்போம்.

இயேசுவோடு நடத்தல்

சாப்பாட்டுப் பொட்டலங்கள், நீர்புகா காலணிகள், வரைபடம் போன்றவைகள் மலை ஏற்றம் மேற்கொள்ளுகிறவர்கள் எடுத்துச் செல்லும் சில முக்கியப் பொருட்கள். இந்த மலைப்பாதையானது ஓடைகள், ஏரிகள், மரங்கள், குன்றுகள் என்று ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் கொண்ட பாதையாயிருக்கும். ஏறும் சிகரங்களின் உயரங்களைப் பொறுத்து, நிர்ணயித்த உயரத்தை சென்றடைய சில வாரங்கள் பிடிக்கும் என்பதினால், அதிகமான உணவுப்பொருட்களை எடுத்துச் செல்வது சாத்தியமல்ல. அநேக காரியங்களை தூக்கி சுமக்கமுடியாது; ஆனால் கொஞ்சம் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெகுதூரம் செல்லவும் முடியாது. 

கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாமும் நம்முடைய ஓட்டத்தை நேர்த்தியாய் முடிப்பதற்கு நம்மோடு எதைக் கொண்டு செல்லுகிறோம் என்பது மிகவும் முக்கியம். எபிரெயர் 12இல் பவுல் அப்போஸ்தலர் “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு” ஓடுவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகிறார். அவர் நம்முடைய வாழ்க்கையை நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டமாகவும், அதில் “இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு” ஓடவும் ஊக்குவிக்கிறார் (வச. 1,3). பாவத்தை சுமந்துசெல்வதும் தேவ திட்டத்திற்கு ஒவ்வாத காரியங்களை சுமந்துகொண்டு செல்வதும் தேவையற்ற பலுவாகிவிடும். 

மலையேற்றத்திற்கு தேவைப்படும் பொருட்களின் பட்டியல் போலவே இயேசுவை பின்பற்றுவதற்கு தேவையான பட்டியலையும் தேவன் வேதாகமத்தில் கொடுத்துள்ளார். நம்முடைய சுபாவங்கள், கனவுகள், ஆசைகள் ஆகியவற்றில் எது தேவையானது என்பதை வேதத்தின் அடிப்படையில் அறிவது நல்லது. சுமையில்லாமல் வெறுமையாய் நடந்தால் நம் ஓட்டத்தை நேர்த்தியாய் நிறைவு செய்யமுடியும்.