எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

கிருபையினால் தரப்படுத்துதல்

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய என்னுடைய மகன் ஒரு தாளை என்னிடம் காண்பித்த பொழுது, அவனுடைய நீல நிற கண்கள் உற்சாகத்தால் மின்னியது. அது அவனுடைய கணக்கு தேர்வுத்தாள். அதில் சிவப்பு நட்சத்திரம் ஒன்று குறிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவன் நூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தான். நாங்கள் அந்த விடைத்தாளைப் பார்த்து கொண்டிருந்த நேரத்தில், அத்தேர்வு நேரம் முடிந்தது என்று தன் ஆசிரியர் கூறின பொழுது தான் மூன்று கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்காததைச் சொன்னான். அதைக்கேட்டு குழம்பி, பிறகு முழு மதிப்பெண் எப்படி கிடைக்கக்கூடும் என வினவினேன். அதற்கு…

விழுதலுக்கான ஆபத்து

என்னுடைய சிநேகிதி எலைன் உடலுக்கு ஊறு உண்டாக்கும் வகையில் கீழே விழுந்து, அதிலிருந்து தேறிக்கொண்டு வரும் வேளையில், மருத்துவமனையிலிருந்த ஒரு பணியாள் அவளது மணிக்கட்டில் பளிச் என்ற மஞ்சள் நிறமுடைய பட்டையைக் கட்டினாள். அப்பட்டையில் விழக்கூடிய ஆபத்து என்று எழுதப்பட்டிருந்தது. இந்த நபரை கவனமாக கண்காணியுங்கள். அவளால் சரியாக நடக்க இயலாது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல அவளுக்கு உதவிசெய்யுங்கள் என்பதுதான் அதில் எழுதப்பட்டிருந்த வார்த்தையின் அர்த்தமாகும்.

“கீழே விழுவதற்கான ஆபத்து” உள்ளது என்று 1 கொரிந்தியர் 10ம் அதிகாரம் விசுவாசிகளை எச்சரிக்கிறது.…

பூரணரல்ல

டேவிட் நாசர் தீயின் வழியாக குதித்தல் (Jumping Through Fires) என்ற அவரது புத்தகத்தில், அவரது ஆன்மீக பயணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இயேசுவோடு கூட அவரது உறவைத் துவங்கும் முன்பாக ஒரு கிறிஸ்தவ பதின் வயதுடைய குழுவினர் அவரோடு சிநேகிதர் ஆனார்கள். பொதுவாக அந்த சிநேகிதர்கள் தாராள மனதுடனும், நல் நடத்தையுடனும் எதைக்குறித்தும் தீர்ப்புச் சொல்லாமல் இருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவன் அவனது பெண் தோழியிடம் பொய் கூறினதை டேவிட் பார்த்தான். பொய் கூறின அவனது தோழன் பின்பு மனதில் குத்தப்பட்டவனாக அந்தப் பெண்ணிடம்…

அவர் அறிந்திருக்கிறார்

இரவில் அயர்ந்த நித்திரை செய்வதற்கு சில சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஒருநாள் மாலை நான் அவள் படுக்கை அறையை விட்டு வெளிவந்த பொழுது, என் மகள் அப்படிப்பட்ட காரணம் ஒன்றை என்னிடம் “நான் இருட்டைப் பார்த்து பயப்படுகிறேன்” என்று கூறினாள். அவளுடைய பயத்தைப் போக்க முயற்சி செய்துவிட்டு, விடிவிளக்கை எரியவிட்டு, அந்த வெளிச்சத்தில் பயங்கர ஜந்துக்கள் ஒன்றும் இல்லை என்பதை அவள் அறிந்து கொள்ள விட்டு வந்தேன்.

சில வாரங்கள் கழித்து வியாபார விஷயமாக என் கணவன்…

நமக்குத் தேவையானவையும் அதற்கு மேலாகவும்

இங்கிலாந்து கிராமப்புற வயல்வெளியில் ஜி.கே. செஸ்டர்டன், தான் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று கடகடவென்று மிக சத்தமாய் சிரித்தார். இவ்வாறு திடீரென அவர் மிக சத்தமாய் சிரித்த சத்தத்தைக் கேட்ட பசுக்கள் கூட, கண் இமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன.

சில நிமிடங்களுக்கு முன்னர் கிறிஸ்தவ எழுத்தாளரும், பரிந்துரையாளருமான செஸ்டர்டன் மிகவும் மன உளைச்சலில் இருந்தார். அன்று மதியம் அவர் மலைகளில் அலைந்து திரிந்து, பழுப்பு நிற காகிதத்தில் வண்ண, வண்ண சாக்பீஸ்களால் இயற்கைக் காட்சிகளைப் படங்களாக வரைந்தார். ஆனால், அவரிடம் வெள்ளை…

கடந்த காலத்தை பின்னால் விட்டுவிடல்

கிறிஸ் பேக்கர் பச்சை குத்தும் கலைஞர். அவர் பச்சை குத்தப்பட்டிருந்த வேதனையின் சின்னங்களையும், அடிமைத்தன சின்னங்களையும் கலைநயமிக்க சித்திரங்களாக மாற்ற வல்லவர். அவனிடம் வரும் வாடிக்கையாளர்களில் அநேகர் தீயவழியில் சென்ற கூட்டத்தினர், மனிதரைக் கடத்திச் செல்வதில் அடிமைப்பட்டவர்கள், இவர்களுக்கென அவர்களை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெயர்களையும், சின்னங்களையும், குறியீடுகளையும் அவர்கள் கொண்டவர்கள். கிறிஸ் இப்படிப்பட்ட சின்னங்களை தன் கலைத் திறனால் மிகவும் அழகான உருவங்களாக்கி அவர்கள் தோல்மீது பச்சை குத்தினான்.

கிறிஸ்து பிறர் தோலின்மீது ஏற்படுத்திய மாற்றங்களைப்போல இயேசு நம் ஆத்துமாக்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.…

தூரமான இடம்

டிஸ்டான் டா குன்ஹா என்ற தீவு தனிமைக்கு சிறந்து விளங்கும் ஓர் எடுத்துக்காட்டு உலகிலேயே மக்கள் வசிக்கும் மிக தூரமான தீவாகும். 288 மக்கள் அதைத் தங்கள் குடியிருப்பாகக் கொண்டிருப்பதற்கு நன்றி. இத்தீவு தென் அட்லாண்டின் சமுத்திரத்தில், தென் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு 1750 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. யாரையேனும் சந்திக்க வேண்டுமென்றால், விமானப்போக்குவரத்து வசதியில்லாததால் ஏழு நாட்கள் படகில் பிரயாணம் செய்ய வேண்டும்.

இயேசுவும், அவருடைய சீஷர்களும் ஆயிரத்திற்கும் அதிகமாக, பசியில் வாடிய மக்களை அற்புதமாய் போஷித்தது அப்படிப்பட்ட ஓர் தூரமான இடத்தில்தான். இயேசு…

அதிக நன்மையாயிருக்கும்

ஓர் சிறுவனின் வீட்டிற்கு வெளியே அபாயச் சங்கு ஒலித்தது. பழக்கமில்லாத அந்த சத்தத்தைக் கேட்ட அவன் அது என்ன சத்தம் என்று தன் தாயிடம் கேட்டான். ஆபத்தான ஓர் புயல் வருவதை மக்களுக்கு அறிவித்து மக்களை எச்சரிக்கையாய் இருப்பதற்காக ஊதப்படுகிறது என்று அவனுக்கு அவன் தாய் விவரித்தாள். மக்கள் ஓடி ஒளிந்துகொள்ளாவிட்டால் அந்தப் புயலின் தாக்கத்தால் மடிந்து போவார்கள் என்றாள். “அம்மா அது என்ன மிக மோசமான காரியமா? நாம் மரித்துப்போனால் இயேசுவை சந்திப்போமல்லவா?” என்று கேட்டான்.

சிறு பிள்ளைகள் மரித்துப்போவது என்றால் என்ன…

சுத்த இருதயங்களிலிருந்து வரும் துதி

எனது சிநேகிதி மிர்னா வேறு ஒரு நாட்டிற்கு சென்றபொழுது, அங்கிருந்த ஓர் ஆலயத்தில் நடந்த ஆராதனையில் பங்கெடுத்தாள். மக்கள் ஆலயத்திற்கு நுழைந்தவுடன், ஆலயத்தின் முகப்பு பகுதிக்கு எதிர்த்திசையில் முழங்கால்படியிட்டு ஜெபித்தார்கள். அந்த சபை மக்கள், ஆராதனை வேளை ஆரம்பிக்கும் முன்பு அவர்கள் பாவங்களைத் தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டார்கள் என்பதை என் சிநேகிதி அறிந்தாள்.

அந்தத் திருச்சபை மக்களின் இந்தத் தாழ்மையான செயல் சங். 51ல் தாவீது கூறின “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை, நீர் புறக்கணியீர்” (சங். 51:17) என்ற வசனம் என்…