எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவ் பிரானன்கட்டுரைகள்

மெய்யான மனிதர்கள், மெய்யான தேவன்

பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவத்தை பற்றி எழுதியிருந்தேன். அதைக் குறித்து “அனுதின மன்னா” வாசகர் ஒருவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘அந்த துயர சம்பவத்தை நீங்கள் கூறின போது தான், இதன் ஆசிரியர்கள் அனைவரும் நிஜ பிரச்சனைகளையுடைய நிஜ மனிதர்கள் என்பது உணர்ந்தேன்’, என எழுதியிருந்தார். இது எவ்வளவு உண்மையான கூற்று! இந்த கட்டுரைகளை எழுதும் ஆண், பெண் அனைவரையும் கண்டால், புற்றுநோய், அடங்காப் பிள்ளைகள், நிறைவேறாத கனவுகள் மற்றும் பல வகையான இழப்புகளைக் காணலாம். நம்முடைய…

அவர் கேட்கின்றாரா?

“சில சமயம், தேவன் என் கூப்பிடுதலை கேட்கவில்லை என்றே தோன்றுகிறது.” தேவனோடு நடப்பதில் நிலைத்து நிற்க பிரயாசப்படும், குடிகார கணவனை உடைய ஒரு பெண்மணியின் வார்த்தைகள் இவை. இவ்வார்த்தைகள் அநேக விசுவாசிகளின் இதயக்குமுறல்களைப் பிரதிபலிக்கிறது. அவள் தன் கணவன் திருந்தும்படி பல ஆண்டுகளாக தேவனிடம் மன்றாடினாள். ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை அவன் திருந்தவேயில்லை.

நன்மையான ஒன்றை, தேவனை மகிமைப் படுத்தக்கூடிய ஒன்றை, இடைவிடாமல் தேவனிடம் மன்றாடியும், கேட்டும், பதில் வரவில்லை என்றால் நாம் என்ன நினைப்பது? தேவன் கேட்கின்றாரா? இல்லையா?

நாம், நமது…

வைரத்துகள்கள்

மிச்சிகனில் நாங்கள் வாழ்ந்து வந்த பகுதியில் மிகவும் கடுமையான பனிக்காலமாக இருந்தது. காலநிலையைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பனி பெய்த அந்தக் குளிர்காலம் மார்ச்சு மாதம் வரை நீடித்த பொழுது, பனியைக் குறித்த ஆசையை அநேகர் இழந்து விட்டுத் தொடர்ந்து குறைந்த வெப்ப நிலையே நீடிக்கும் என்ற வானிலை அறிக்கையைக் குறித்து வருத்தமடைந்தார்கள்.

ஆயினும் மிகவும் கவர்ச்சிகரமான பனித்துகளின் அழகு தொடர்ந்து எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்து வந்தது. என்னுடைய வாகனத்தின் ஓடு தளத்திலிருந்து பனி வாரியின் மூலம் அதிகமான பனியை அள்ளி எனக்குப்…

கவலையின்றி இருத்தல்

அன்றாட நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளைக் குறித்து நாம் அறிந்திருக்க விரும்புவது, பாதகமான விளைவுகளை உண்டு பண்ணுகிறது. ஏனெனில் நல்ல செய்திகளை விட கெட்ட செய்திகளே அதிகமாகப் பாதிக்கிறது. நம்மால் கட்டுப்படுத்த இயலாத தனி மனிதர்கள், கூட்டங்கள் அல்லது அரசாங்கம் இவைகளின் தீய செயல்பாடுகள் பற்றி மிக எளிதாக அதிகமாக கவலைப்படுகிறோம்.

சங்கீதம் 37 அனுதின செய்திகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது. அச்சங்கீதத்தை ஆரம்பிக்கும் பொழுது தாவீது “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே” (வச.1) என்று ஆரம்பிக்கிறான். பின்பு நாம் மிகவும் அதிகமாக கவலை கொள்ளாமல்…

எழுதின படியே

எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், மரச்சாமான்கள் போன்றவற்றின் பல்வேறு பாகங்களை ஒன்றாக இணைப்பதில் எனக்கும் என் மகனுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. எனது மகன் ஸ்டீவ் எந்திர நுணுக்கங்கள் மீது அதிக நாட்டம் உடையவனாக இருந்ததால், கொடுக்கப்பட்ட செயல் விளக்க முறைகளை தள்ளிவிட்டு அவனாகவே செயல்படுவான். “பொருட்களை இணைக்க ஆரம்பிக்கும் முன்பு இதை வாசியுங்கள்”. என்ற ஆலோசனைக் குறிப்பை வாசிப்பதற்கு அதிக நேரம் செலவழித்து என் கவனம் முழுவதையும் அதில் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது, ஸ்டீவ் அவ்வேலையை பாதிக்கு மேலாக செய்து முடித்திருப்பான்.

சில சமயங்களில் ஸ்டீவைப்…

தண்ணீரும், வாழ்க்கையும்

டேவ் மியூல்லர் கீழே இறங்கி குழாயின் கைப்பிடியை திறந்தவுடன், குழாயிலிருந்து சுத்தமான நீர், கீழே வைக்கப்பட்டிருந்த நீல நிற வாளியில் கொட்டியது. சுற்றியிருந்த மக்கள் நீரைக் கண்டவுடன் கைதட்டி ஆரவாரித்து மகிழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்து வந்த சமுதாயத்தின் முதல் முறையாக சுத்தமான குடிநீரைக் கண்டதால் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். கென்யாவில் வசித்த அந்த பகுதி மக்களுக்கு கிடைத்த சுத்தமான குடிநீர், அம்மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கிறது.

சுத்தமான நீரை அந்த மக்களுக்கு வழங்குவதின் மூலம் அவர்களது தேவைகளை சந்திக்க டேவ்வும், அவரது மனைவி…

பழுது பார்த்தலா அல்லது மாற்றுவதா

எங்களது வீட்டில் ஜன்னல்களின் ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த அழகுபடுத்தும் சாதனங்களை பழுது பார்க்க வேண்டிய சமயம் வந்தது. ஆகவே பழமையாய்ப் போன அந்தப் பலகைகளைத் தேய்த்து, சுத்தப்படுத்தி, பெயர்ந்து போன இடங்களை எல்லாம் நிரப்பி வண்ணம் பூச ஆயத்தப் படுத்தினேன். முதலாவது அடிக்க வேண்டிய பிரைமரை அடித்து அதற்கு மேல் விலைமதிப்புள்ள வண்ணமும் அடித்தேன். இந்த எனது முயற்சிகளால் அந்தப் பொருள் அழகாகவும், நன்றாகவும் இருந்தது ஆனாலும் அது புதியதாகத் தோன்றவில்லை. அது புதியதாகக் காணப்பட வேண்டுமென்றால், அந்த பழைய மரத்தை மாற்றியாக வேண்டும்.
காலப்…

தரித்திரரை நினைத்துக் கொள்ளுங்கள்

1780ஆம் வருடத்தில் இராபர்ட் ரேய்கஸ் லண்டன் மாநகரைச் சுற்றியிருந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த படிப்பறிவற்ற ஏழை பிள்ளைகளைக் குறித்து மனபாரமடைந்தார். அந்தப் பிள்ளைகளுக்கு எந்த விதத்திலும் யாரும் உதவி செய்யவில்லை என்பதைக் கவனித்து அவர்களது வாழ்க்கையை மாற்றி அமைக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று முயற்சி செய்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பிள்ளைகளுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்தும்படி சில பெண்களை ஏற்படுத்தினார். வேதாகமத்தைப் பாடப்புத்தகமாக பயன்படுத்தி அந்த ஆசிரியர்கள் அந்த ஏழைக்குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுக் கொடுத்து வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஞானத்தை அவர்களுக்குப் போதித்தார்கள். விரைவில் 100 குழந்தைகள்…

சொல்லும் செயலும்

எனது கல்லூரியில் எழுதும் பயிற்சி வகுப்பிலிருந்த ஒரு மாணவனிடமிருந்து வந்த மின்னஞ்சல் அவசரத் தன்மையை வெளிப்படுத்தினது. கல்லூரியின் இறுதிப்பருவத்திலிருந்த அவனுக்கு, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள சற்று உயர்ந்த மதிப்பெண்கள் தேவை என்பதை உணர்ந்தான். அதற்கு அவன் என்ன செய்ய இயலும், செய்ய வேண்டிய பாடசம்பந்தமான சில வேலைகளை அவன் செய்யத் தவறி இருந்தான். ஆகவே அவனுடைய மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்து விடுபட்ட வேலையை முடிக்கக் கூறினேன். “நன்றி அதனை உடனே செய்கிறேன்” என்று மாறுத்தரம் கூறினான்.

இரண்டு நாட்கள்…