பெயர் சொல்லி அழைக்கப்பட்டிருக்கிறோம்
நான் அவர்கள் பெயர்களை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன். மாணவர் பட்டியலிலிருந்து அவர்கள் பெயர்களையும் புகைப்படங்களையும், பார்ப்பதில் நேரம் செலவிட்டு அவற்றை எனக்குப் பழக்கப்படுத்திக் கொண்டேன். எனவே அவர்கள் வகுப்பறைக்குள் நுழையும்பொழுது, “ஹலோ ஜெஸிகா” அல்லது “ட்ரெவோர் வரவேற்கிறேன்” என்று கூறுவேன். பெயர் சொல்லி ஒருவரை அழைப்பது எவ்வளவு அர்த்தமுள்ளது என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் உண்மையாகவே ஒருவரைப்பற்றி அறிய வேண்டுமானால் அவர் பெயரை மாத்திரம் அறிந்து கொண்டால் போதாது. அதற்கும் அதிகமாக அவர்களைப்பற்றி அறிய வேண்டியது உள்ளது. நல்ல மேய்ப்பனாகிய இயேசு, நம்மீது அன்பும்,…
நெடுநேர தொடர் வாசிப்பு
கி.மு. 444 ஆண்டு ஏழாம் மாதத்தின் முதல் நாளில் சூரியன் உதித்தபோது, எஸ்றா மோசேயின் நியாயப்பிரமாணத்தை வாசிக்க ஆரம்பித்தான். (வேதத்தில் நாம் காணும் முதல் ஐந்து புத்தகங்கள்) எருசலேமில் மக்கள் முன்னால் எஸ்றா ஓர் மேடையில் நின்றுகொண்டு, அடுத்த ஆறுமணி நேரங்களுக்கு தொடர்ந்து வாசித்தான்.
தண்ணீர் வாசல் எனப்படும் நகரத்தின் வாசல் முகப்பில், ஆண்களும், பெண்களும், சிறுவரும் எக்காளப் பண்டிகையைக் கொண்டாட கூடிவந்திருந்தார்கள். அவர்களுக்கு தேவன் நியமித்த பண்டிகைகளில் இதுவும் ஒன்று. அவர்கள் கவனித்துக் கேட்டதன் விளைவாக நான்குவிதமான பின் விளைவுகள் அவர்களில் காணப்பட்டன.…
எனக்கு தேவையானது அதுதான்
அலாஸ்காவிலுள்ள பால்மர் என்ற நகரத்தில், முதியோர் இல்லத்தில் ஓர் அறையின் பின் பகுதியில் நின்று கொண்டு எனது மகளுடைய உயர்நிலைப்பள்ளியின் பாடகர் குழு “என் ஆத்துமாவிற்கு எல்லாம் நன்றாக உள்ளது” என்ற பாடலைப் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பாடல் குழுவின் தலைவியான என் மகள், அந்தப் பாடலை ஏன் தேர்ந்தெடுத்தாள் என்று சிந்தித்தேன். அந்தப்பாடல் அவளது சகோதரி மெலிசாவின் அடக்க ஆராதனையில் பாடப்பட்ட பாடலாகும். அந்தப்பாடலைக் கேட்பது என் உணர்வுகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை என் மகள் லிசா அறிந்திருந்தாள்.
நான், என் சூழ்நிலையை…
அதிசயிக்கத்தக்க அன்பு
பழைய ஏற்பாட்டில் நடந்த இறுதிக்கட்ட வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்ச்சியாகிய இஸ்ரவேல் மக்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி மறுபடியுமாக எருசலேமில் வந்து குடியேறிய நிகழ்ச்சியை எஸ்றா, நெகேமியா புத்தகங்களில் வாசிக்கிறோம். தாவீதின் நகரம் மீண்டும் எபிரேயக் குடும்பங்களால் ஜனத்தொகை பெருகியது, தேவாலயம் கட்டப்பட்டது, சுவர்கள் பழுதுபார்க்கப்பட்டு கட்டப்பட்டது.
பின் மல்கியா தீர்க்கதரிசி மூலம் சில காரியங்களைத் தெரிந்து கொள்கிறோம். நெகேமியாவுடன் ஒரேகாலத்தில் வாழ்ந்த மல்கியா பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்ட பகுதிகளை மக்களுக்கு கொண்டுவருகிறார். அதில் முதலாவதாக இஸ்ரவேல் மக்களுக்குக் கூறியது என்னவென்றால் “நான் உங்களை சிநேகித்தேன்…
தேவனுடைய காட்சிக் கூடம்
சங்கீதம் 100 தன் கலை வண்ணத்தால் நம் அதரிசனமான தேவனை மகிழ்ந்து கொண்டாட உதவுகிறது. ஒரே நோக்கத்தோடு நாம், அவரை ஆராதனை செய்வது என்பது நம் பார்வைக்கு அப்பாற்பட்டு காணப்படும் பொழுது ஜனங்கள் அவரை பிரஸ்தாபிகிறார்கள்.
இந்த சங்கீதத்தின் கருத்து நயமிக்க சொற்களை ஒரு ஓவியர் தன் தூரிகையில் எடுத்து திரையில் ஓவியம் தீட்டுவதாக கற்பனை செய்து பாருங்கள். அந்த ஓவியத்தில் நம் கண்முன் காட்சியளிப்பது ஓர் உலகம் - “முழு பூமியும்” – பூமியின் குடிகள் எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடினார்கள் (சங்…
மேலும் அலட்சியப்படுத்தாதே
எப்படித்தான் இத்தனை பேர் என்னைக் கண்டறிந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஓய்வு கால நன்மைகளைப் பற்றிய விளம்பரத்தாள்கள் அனுதினமும் அதிக அளவில் எனது அஞ்சலகப் பெட்டியில் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதில் அவர்கள் அளிக்கும் ஓய்வு கால நன்மைகளை பெற்றுக் கொள்வது பற்றி அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வந்து பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடப்பட்டது. ஓய்வு பெற்றவர்கள் சார்பாக செயல்படும் ஒரு நிறுவனத்தில் வந்து சேருமாறு எனக்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பே அழைப்பு விடப்பட்டது. அத்தோடு கூட நான் பெற்ற அந்த விளம்பரத்…
மரியாதையுடன்
இஸ்ரவேல் மக்களுக்கு அரசாங்கத்துடன் சில பிரச்சனைகள் இருந்தன. கி.மு. 586ம் ஆண்டில் பாபிலோன் மன்னனால் இடித்து தள்ளப்பட்ட அவர்களது ஆலயத்தை திரும்ப கட்டி எழுப்ப கி.மு. 500வது ஆண்டின் பின் பகுதியில் வாழ்ந்த யூத மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆயினும் அந்த நாட்டின் அதிபதி யூதர்கள் ஆலயத்தை திரும்பக் கட்டக் கூடாது என்று கருதி, தரியு மன்னனுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினான் (எஸ்றா 5:6-17).
அந்தக் கடிதத்தில் அந்த அதிபதி அங்கு வாழும் யூதர்கள் ஆலயத்தை பழுது பார்த்து திரும்பக் கட்டுகிறார்கள் என்று…
மேலும் வளருதல்
என் பேரனும் அவனது நண்பர்களும் டி-பந்து விளையாடுவதைப் பார்ப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியையளிக்கும். இந்த பேஸ்பால் போன்ற விளையாட்டில் அதிகம் பயிற்சி பெறாத இளம் விளையாட்டு வீரர்கள், தவறான பகுதிக்கு ஒடுவார்கள் அல்லது பந்தைப் பிடிக்க நேர்ந்தால் என்ன செய்வதென்று அறியாது திணறுவார்கள். பேஸ்பால் விளையாட்டையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள் விளையாடும் பொழுது இப்படிப்பட்ட தவறுகள் வினோதமாகக் காணப்படாது.
இவற்றில் தேர்ச்சி பெற்று முதிர்ச்சியடைவதே காரியம்.
என்ன செய்வதென்று அறியாமல் அல்லது எல்லாவற்றையும் மிகச் சிறந்த முறையில் செய்யத் தெரியாத நிலையில் - இவ்வாறு…
ஓர் விதவையின் தேர்ந்தெடுப்பு
எனக்கு அருமையான சிநேகிதியின் கணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தன் கணவனை இழந்து விட்டாள். அவளுடைய துக்கத்தில் நாங்கள் பங்கு கொண்டோம். ஒரு ஆலோசகராக அவள் அநேகரை ஆறுதல் படுத்தியிருக்கிறாள். இப்பொழுது, ஒவ்வொருநாள் இறுதியிலும் நாற்பது ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின் வெறுமையான வீட்டிற்குச் செல்வது அவளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகக் காணப்பட்டது.
எங்கள் சிநேகிதி தன் துக்கத்தின் மத்தியிலும் நொறுங்குண்ட நெஞ்சை உடையோருக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒருவர் மீது சாய்ந்த கொண்டாள். “அவளுடைய வேதனையின் ஊடாக தேவன் கடந்து சென்றதினால் தான் பெருமையுடன்…