அவர் நல்லவரா?
‘தேவன் நல்லவர் என்று நான் எண்ணவில்லை’ என்று என் சிநேகிதி என்னிடம் கூறினாள். சில கடினமான பிரச்சனைகளுக்காக அநேக ஆண்டுகள் அவள் தொடர்ந்து ஜெபம்பண்ணி வந்தும், எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. தேவனுடைய அமைதியைக் குறித்து, அவளது கோபமும் மனக்கசப்பும் அதிகரித்தது. அவளை நான் நன்கு அறிந்திருந்தபடியினால் அவளது உள்ளத்தின் ஆழத்தில் தேவன் நல்லவர் என்பதை அவள் விசுவாசிக்கிறாள் என்பதை உணர்ந்தேன். ஆனால், அவளது உள்ளத்தில் உள்ள நீங்கா வேதனையும், அதைக்குறித்து தேவனுடைய கரிசனையற்ற தன்மையும் அவளுக்குச் சந்தேகத்தை உண்டாக்கின. அவளது வருத்தத்தை தாங்குவதைவிட, தேவன்மேல்…
கிருபையினால் ஆச்சரியப்படுதல்
மிச்சிகனில் உள்ள கிராண்ட் ராப்பிட்ஸில் வாழ்ந்து வந்த ஒரு பெண், அவளது கணவர் உறங்குவதற்காகப் படுக்கை அறைக்குச் சென்றபின். ஓய்வெடுக்கும் இருக்கையிலேயே உறங்கி விட்டாள். அந்த தம்பதியினர், அறையில் இருந்த நழுவும் கதவினைப் பூட்ட மறந்துவிட்டனர். அதன் வழியாக அழையா விருந்தாளியாக ஒரு மனிதர் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து விட்டான். கணவர் உறங்கிக் கொண்டிருந்த படுக்கை அறைக்குச் சென்று அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கினான். உறங்கிக் கொண்டிருந்த அந்த மனிதன் விழித்துக் கொண்டான். அங்கு நின்று கொண்டிருந்த ஓர் உருவத்தைப் பார்த்து, “அன்பே படுக்கைக்கு…
நான்கு விதத்தில் பார்க்க வேண்டும்
ஜோன் ஆராதனைக் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த பொழுது தன் பிள்ளைகளின் சில பிரச்சனைகளைப் பற்றிய காரியங்களைக் குறித்துப் போராடிக் கொண்டிருந்தாள். சோர்வுற்றவளாய் தன் தாய்மைப் பொறுப்பிலிருந்து விலகிவிட விரும்பினாள். விட்டுச் செல்ல வேண்டுமென்று எண்ணுபவர்களுக்கு உற்சாகமும், ஊக்கத்தைக் கொடுக்க கூடிய செய்தியை, அன்று செய்தி கொடுத்தவர் பகிர்ந்து கொண்டார். அன்று காலை ஜோன் கேட்ட செய்தியில் அடங்கிய நான்கு சாராம்சங்கள் அவள் தொடர்ந்து தன் தாயின் ஸ்தானத்தில் தொடர்ந்து செல்ல உதவியது.
மேல் நோக்கி பார்த்து ஜெபி: ஆசாப் இரவு முழுவதும் ஜெபித்து, தேவன் இரக்கஞ்…
திரும்பப் பெற முடியாது
நான் செய்த செயல்களைத் திரும்ப பெற முடியாது. என்னுடைய காருக்கு பெட்ரோல் நிரப்ப செல்லும் வழியில் ஒர் பெண் தன் காரை வழிமறித்து நிறுத்தி இருந்தாள். மறு சுழற்சி செய்வதற்கான சில பொருட்களை போட இறங்கி சென்றுவிட்டாள். நான் காத்திருக்ககூடிய நிலையில் இல்லை. எனவே என் கார் ஒலிப்பானை மிகவும் சத்தமாக அழுத்தி ஒலி எழுப்பினேன். பின் என் காரை பின்னால் எடுத்து, வேறு பாதையில் சுற்றி சென்றேன். அவள் காரை எடுக்கும் வரைக்கும் பொறுமையாய் இருக்க, அதாவது கூடினால் முப்பது வினாடிகள் கூட,…
முக்கிய நிகழ்ச்சி
எனது ஊரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த வானவேடிக்கையை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, என் கவனம் சிதறடிக்கப்பட்டது. மிக முக்கியமான வானவேடிக்கையின் மத்தியில் அதன் வலப் பக்கத்தில், இடப் பக்கத்தில் சிறிய வானவேடிக்கைகளும் வானில் காணப்பட்டன. பார்ப்பதற்கு அவை நன்றாகத்தான் இருந்தன. ஆனால் அவற்றைப் பார்ப்பதினால் என் தலைக்குமேலே கண்கவர் காட்சிகளுடன் நடந்த முக்கியமான வானவேடிக்கைகளில் சிலவற்றைப் பார்க்க முடியாமல் போனது.
சில சமயங்களில் நல்ல காரியங்கள் மிகச் சிறந்த காரியங்களைவிட்டு நமது கவனத்தை சிதறடிக்கும். அதைப் போலவே லூக்கா 10: 38-42ல்…
தெளிவற்ற பார்வை
எனது சிநேகிதி மெக்கான் குதிரைப்பயிற்சியில் திறமை மிக்கவள். அவளிடமிருந்து குதிரைகளைப்பற்றிய சில உண்மைகளை அறிந்து கொண்டிருக்கிறேன். உதாரணமாக பாலூட்டிகளிலேயே மிகப்பெரிய கண்களை உடையதாக குதிரைகள் இருந்தாலும், குதிரைகளுக்கு குறைவான பார்வையே உள்ளது என்றும், மனிதர்களைவிட மிகக்குறைவான நிறங்களையே காண இயலும் என்பதையும் அறிந்து கொண்டேன். இதனால் தரையிலே கிடக்கும் பொருட்களை என்னவென்று அவைகளால் தெரிந்து கொள்ள இயலாது தரையிலே ஒரு கட்டையைக் கண்டால் அது அவைகளால் தாண்டிச் செல்லக் கூடிய ஒரு பொருளா அல்லது அவைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு பாம்பா என்று…
காதல் பூட்டுக்கள்
“காதல் பூட்டுக்கள்” என்பது சமுதாயத்தில் வளர்ந்து வரும் நிகழ்வாகும். காதல் வசப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் காதல் பூட்டுக்களை பிரான்ஸ், சீனா, அஸ்டிரியா, செக் குடியரசு, செர்பியா, ஸ்பெயின், மெக்ஸிகோ, வட அயர்லாந்து போன்ற உலகின் பல பகுதிகளிலுள்ள பாலங்கள், கதவுகள், வேலிகள் ஆகிய இடங்களில் மாட்டி வைத்துள்ளனர். தம்பதிகள் அவர்களது பெயர்களை பூட்டுக்களில் பதித்து பொதுவான இடங்களில் அவர்களின் மாறாத அன்பின் சின்னங்களாக வைக்கின்றனர். அதிகமான அளவில் பூட்டுக்கள் மாட்டப்பட்டால், அவற்றின் அதிக எடையினால் பாலங்கள் போன்ற பொது இடங்கள் பாதிக்கப்படும் என்று…