எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

இயேசுவைப் போல

2014 ஆம் ஆண்டில், உயிரியலாளர்கள் பிலிப்பைன்ஸில் ஒரு ஜோடி ஆரஞ்சு பிக்மி கடல் குதிரைகளை கைப்பற்றினர். அவர்கள் கடல்வாழ் உயிரினங்களையும், ஆரஞ்சு பவள கடல் விசிறி என்னும் ஒரு உயிரினத்தையும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸ{க்கு அழைத்துச் சென்றனர். பிக்மி கடல் குதிரைகள் தங்கள் பெற்றோரின் நிறத்துடனோ அல்லது அவற்றின் சுற்றுச்சூழலுடனும் ஒன்றிணைகிறதா என்று கண்டறிய விரும்பினர். பிக்மி கடல் குதிரைகள் மந்தமான பழுப்பு நிறக் குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, விஞ்ஞானிகள் ஒரு ஊதா நிற பவளக் கடல் விசிறி உயிரினத்தை தொட்டியில் விட்டனர். ஆரஞ்சு நிற பெற்றோரின் குழந்தைகள், ஊதா நிற கடல் விசிறிக்கு ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக்கொண்டது. அவைகளுக்கு இயல்பாகவே இருக்கும் பெலவீனமான சுபாவத்தை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிறமாற்றிக்கொள்ளும் தேவன் கொடுத்த திறனைக்கொண்டு மாற்றியமைத்துக்கொண்டது.

சூழ்நிலையோடு ஒத்துப்போவது என்பது அவசியப்படக்கூடிய ஒரு சுபாவம். இருப்பினும், இரட்சிப்பைப் பெறவும், நாம் எப்படி வாழ்கிறோம் என்பதன் மூலம் உலகில் தனித்து நிற்கவும் தேவன் நம் அனைவருக்கம் அழைப்புக் கொடுக்கிறார். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தேவனை கனப்படுத்தும்படிக்கு கிறிஸ்தவ விசுவாசிகளை அப்போஸ்தலர் பவுல் வலியுறுத்துகிறார். நம்முடைய சரீரத்தை “ஜீவபலியாக” (ரோமர் 12:1) செலுத்துவதின் மூலம் அவருக்கு நாம் ஆராதனை செய்யமுடியும். பாவத்தால் நம்முடைய சரீரம் பெலவீனமடைந்ததால், நம்முடைய சிந்தையை புதுப்பித்து, “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” தேவனை மறுதலித்து பாவத்தை மகிமைப்படுத்தாமல் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆவியானவர் எடுத்துக்கொள்கிறார் (வச. 2).

இவ்வுலகத்திற்கு ஒத்த வாழ்க்கை வாழுவது என்பது வேதத்திற்கு புறம்பாய் வாழும் வாழ்க்கையாகும். ஆகிலும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நாம் இயேசுவைப்போல பார்க்கவும் ஜீவிக்கவும் முடியும்.

கிறிஸ்துவின் வல்லமை

2013 ஆம் ஆண்டில், சுமார் அறுநூறு ஆன்-சைட் பார்வையாளர்கள் கிராண்ட் கேன்யன் அருகே 1500 அடி அகலமுள்ள பள்ளத்தாக்கில் ஒரு இறுக்கமான கயிற்றின் மீது நிக் வாலெண்டா நடப்பதைக் கண்டனர். வாலெண்டா 2 அங்குல தடிமன் கொண்ட இரும்பு கயிற்றில் நடக்கையில், அவருடைய தலையில் பொருத்தப்பட்ட கேமராவில் அவருக்கு முன் இருந்த பள்ளத்தாக்கு தெரிகிற வேளையில் அவர் இயேசுவுக்கு நன்றி செலுத்தினார். அவர் அந்த பயங்கரமான பள்ளத்தாக்கில் ஒரு சாதாரண நடைபாதையில் நடப்பதுபோல் நடந்துசென்று, இயேசுவுக்கு நன்றி சொன்னார். தீடீரென்று காற்று வீச, அவர் நிலைகுலைந்து பின்பு சமநிலைப்பட்டார். காற்றில் அசைந்த அந்த கயிற்றை தேவன் சமநிலைப்படுத்தியதற்காய் தேவனுக்கு நன்றி சொன்னார். அந்த இறுக்கமான கயிற்றின் ஒவ்வொரு அடியிலும், அவர் கிறிஸ்துவின் வல்லமையை சார்ந்திருப்பதை அன்றும் இன்றும் கேட்கும் அனைவருக்கும் பிரதிபலித்தார். வீடியோ உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

கலிலேயா கடலில் சீஷர்களின் படகை பெருங்காற்று சூழ்ந்தபோது, அவர்கள் உதவிக்காய் கதறும் அளவிற்கு பயம் அவர்களை சூழ்ந்துகொண்டது (மாற்கு 4:35-38). இயேசு சலசலப்பை அடக்கிய பிறகு, அவர் காற்றையும் மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தினார் என்பதை சீஷர்கள் அறிந்தனர் (வச. 39-41). மெல்ல மெல்ல அவர் மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டார்கள். அவர்களின் இந்த தனிப்பட்ட அனுபவங்கள் மற்றவர்கள் இயேசுவோடு நெருங்குவதற்கும் அவருடைய அசாதாரண வல்லமையை விளங்கிக்கொள்வதற்கும் வழிவகுக்கிறது.

வாழ்க்கையின் புயல்களை நாம் சந்திக்கும்போதோ அல்லது துன்பத்தின் ஆழமான பள்ளத்தாக்குகளில் நீட்டிக்கப்பட்ட நம்பிக்கையின் இறுக்கமான கயிற்றில் நடக்கும்போதோ கிறிஸ்துவின் வல்லமையின் மீதான நம்பிக்கையை நாம் வெளிப்படுத்த முடியும். தேவன் நம்முடைய விசுவாச நடையை பயன்படுத்தி அவர் மீது நம்பிக்கை வைக்க மற்றவர்களை தூண்டுவார்.

சதாகாலமும் உண்மையுள்ள தேவன்

சேவியர், தொடக்கப் பள்ளி மாணவனாக இருந்தபோது, நான் அவனைப் பள்ளிக்குக் கூட்டிவந்து கூட்டிச் செல்வது வழக்கம். ஒரு நாள், திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. நான் அவனை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக செல்வதற்கு தாமதமாகிவிட்டது. நான் காரை நிறுத்திவிட்டு, ஜெபித்துக்கொண்டே அவனுடைய வகுப்பறையை நோக்கி ஓடும்போது, அவன் ஆசிரியையின் அருகாமையில் அமர்ந்துகொண்டு அவனுடைய பையை இறுக்கி பிடித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். “மிஜோ, என்னை மன்னித்துவிடு; நீ நன்றாய் இருக்கிறாயா?” என்று கேட்க, அவன் பெருமூச்சுடன், “நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் ஏன் தாமதமாய் வந்தீர்கள்?” என்று என்னை கடிந்துகொண்டான். நான் என் மகனை அதிகமாய் நேசிக்கிறேன், ஆகிலும் அவனை சில விஷயங்களில் சலிப்படையச் செய்திருக்கிறேன். அவன் ஒரு நாளில் தேவனோடும் சலிப்படைய நேரிடும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் தேவன் ஒருபோதும் தான் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றாமல் போவதில்லை என்னும் சத்தியத்தை அவனுக்கு விளங்கச்செய்வதற்கு தொடர்ந்து பிரயாசப்படுகிறேன்.

சங்கீதம் 33, தேவனின் நம்பத்தன்மையை மகிழ்ச்சியான துதிகளுடன் கொண்டாட நம்மை ஊக்குவிக்கிறது (வச. 1-3). ஏனெனில் “கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது” (வச. 4). தேவன் படைத்த உலகத்தை அவரது வல்லமை மற்றும் நம்பகத்தன்மையின் உறுதியான சான்றாகப் பயன்படுத்தி (வச. 5-7), பூமியெங்கும் இருக்கும் மக்களுக்கு சங்கீதக்காரன் அழைப்பு விடுக்கிறார் (வச. 8).

திட்டங்கள் தோல்வியடையும்போதோ அல்லது மக்கள் நம்மை தாழ்மைபடுத்தினாலே நாம் தேவனிடத்தில் சலிப்படைய நேரிடுகிறது. ஆயினும் தேவன் உண்மையுள்ளவர் என்பதை நாம் நம்பலாம். ஏனெனில், “கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாக” (வச. 11) நிற்கக்கூடியது. காரியங்கள் நமக்கு சாதகமாய் நடக்காவிட்டாலும் நாம் தேவனை துதிக்க பழகலாம். ஏனெனில் நம்முடைய அன்பான சிருஷ்டிகர் எல்லோரையும் எல்லாவற்றையும் தாங்கிப் பாதுகாக்கிறார். தேவன் சதாகாலமும் உண்மையுள்ளவர்.

கூடுதல் கிருபை தேவை

திருச்சபையை ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக நாங்கள் அலங்கரித்தபோது, அந்தப் பொறுப்பில் இருந்த பெண் என் அனுபவமின்மையைப் பற்றிக் கூறினார். அவள் சென்ற பிறகு, இன்னொரு பெண் என்னிடம் வந்தாள்: "அவளைப் பற்றி கவலைப்படாதே. அவளை "கூ.கி.தே" என அழைக்கிறோம்; அதாவது "கூடுதல் கிருபை தேவை" " என்றாள். 
  
நான் சிரித்தேன். விரைவில் நான் ஒவ்வொரு சச்சரவின் போதும் அந்த வாக்கிய சுருக்கத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். பல வருடங்கள் கழித்து, அதே திருச்சபையில் அமர்ந்து "கூ.கி.தே”வின் இரங்கலுரையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் எவ்வாறு பிறர் காணா வண்ணம் தேவனுக்கு சேவை செய்தாள், மற்றவர்களுக்கு தாராளமாக கொடுத்தாள் என்பதை அச்சபையின் போதகர் பகிர்ந்து கொண்டார். அவளையும் மற்றவர்களையும் கூ. கி. தே என நியாயந்தீர்த்து, முத்திரை பதித்து, கிசுகிசுத்ததற்காக என்னை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டேன். கடந்த காலத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற விசுவாசிகளைப் போல எனக்கும் கூடுதல் கிருபை தேவைப்பட்டது. 
  
கோபாக்கினையின் எபேசியர் 2ல் அப்போஸ்தலன் பவுல், அனைத்து விசுவாசிகளும் ”சுபாவத்தினாலே 
மற்றவர்களைப்போலக் பிள்ளைகளாயிருந்தோம்". (2:3) ஆனால், தேவன் நமக்கு இரட்சிப்பாகிய பரிசைக் கொடுத்திருக்கிறார், ”ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல". (2:9) என்கிறார். இந்த வாழ்நாள் பயணத்தின் போது நாம் ஒவ்வொரு கணமும் தேவனுக்கு நம்மை அர்ப்பணிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் நம் குணத்தை மாற்றியமைக்கவும், அதனால் கிறிஸ்துவின் தன்மையை நாம் பிரதிபலிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும் கூடுதல் கிருபை தேவைப்படுகிறது. ஆனால், தேவனுடைய கிருபை போதுமானது என்பதால் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம் (2 கொரிந்தியர் 12:9). 

இயேசுவைப் போல நடவுங்கள்

"மாறுவேடத்தின் தலைவன்" என்பது இந்தோனேசியாவில் நீரிலும், உலகின் மிகப்பெரிய பவளப்பாறையிலும் வாழ்கிறது. இந்தப் போலியான ஆக்டோபஸ், மற்ற ஆக்டோபஸ்களைப் போலவே தன் தோலின் நிறத்தை அதன் சுற்றுப்புறத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும். புத்திசாலித்தனமான இந்த உயிரினம் அதின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில்; விஷமுள்ள சிங்கமீன்கள், கொடிய கடல் பாம்புகள் ஆகியவற்றைப் போன்று, தன் வடிவம், நகர்வு மற்றும் குணாதிசியத்தை மாற்றிக் கொள்ளும். 
  
இந்தப் போலியான ஆக்டோபஸ் போலல்லாமல், இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகில் தனித்து நிற்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள, நம் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களால் நாம் அச்சுறுத்தப்படும் போது, அவர்களுடன் இணைந்து செயல்பட நாம் தூண்டப்படலாம். ஆனால் நாம் அப்படிச் செய்யும் போது, தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க முடியாது. எவ்வாறாயினும், அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய வாழ்க்கை ஒவ்வொரு அம்சத்திலும் இயேசுவைப் பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்று, "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக (ரோமர்12:1) நம்மை உற்சாகப்படுத்துகிறார். 
  
ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று" நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் "இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கும்படி" (வச. 2) நமக்கு அழுத்தம் கொடுக்க முயலலாம். ஆனால் நாம்தேவனைப் பின்பற்றுகிறோம் என்பதை நம்வார்த்தையிலும், அதேபோல நாம் செயலிலும் காட்ட வேண்டும். நாம் வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அன்பான குணாதிசயங்களை பிரதிபலிக்கும்போது, அதனால் வரும் பலன்கள், எந்த இழப்பைக் காட்டிலும் எப்பொழுதும் பெரிது என்பதை நம் வாழ்வில் நிரூபிக்க முடியும். இன்று நீங்கள் இயேசுவை எவ்வாறு பின்பற்றுவீர்கள்? 
  

  
 

படிப்படியாக

தோளோடு தோள் சேர்த்து நின்று, மூன்று பேர் கொண்ட ஒரு டஜன் அணியினர் நான்கு-கால் பந்தயத்திற்குத் தயாராயினர். இருபுறத்திலும் இருந்த இரண்டு நபர்களும் நடுவில் இருந்த நபரின் காலோடு, ஒரு வண்ணமயமான கயிற்றினால் பிணைக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டது. விசில் அடித்ததும் ஒவ்வொரு அணிகளும் இலக்கை நோக்கி முன்னேறின. அவர்களில் பெரும்பாலானோர் கீழே விழுந்து மீண்டும் எழும்பி நிற்க போராடினர். ஒரு சில குழுக்கள் நடந்துசெல்வதற்கு பதிலாக குதித்து செல்ல முயற்சித்தனர். சிலர் ஆட்டத்தை இடையிலேயே நிறுத்திக்கொண்டனர். ஆனால் அதில் ஒரு குழு மட்டும் தங்கள் ஓட்டத்தை துவக்கமாமல் தாமதம் செய்தது. ஒரு திட்டத்தை தீட்டியது. போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் தெளிவாய் தொடர்புகொண்டனர். அவர்களும் அவ்வப்போது இடற நேரிட்டது, ஆனாலும் மீண்டெழுந்து ஒவ்வொரு அணியையும் முந்தினர். அவர்கள் ஒருவரோடொருவர் ஒத்துழைக்க எடுத்த தீர்மானம், வெற்றி இலக்கை அடைய அவர்களுக்கு உதவியது.  
கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்த சமுதாயத்தில் வாழும் வாழ்க்கையில் இந்த நான்கு-கால் பந்தயத்தைப் போலவே சலிப்படைய நேரிடுகிறது. நம்மிலிருந்து முரண்படும் கருத்துக்களை உடையவர்களோடு ஓடும்போது அடிக்கடி தடுமாறுகிறோம்.  
பேதுரு, ஜெபம், விருந்தோம்பல், மற்றும் நமக்கு முன்பாக இருக்கும் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்வதைக் குறித்து பேசுகிறார். அவர், “நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல,” (வச. 10) “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” (1 பேதுரு 4:8) என்று வலியுறுத்துகிறார். நாம் தேவனிடத்தில் தொடர்புகொள்வதற்கும் ஒத்துழைப்பதற்குமான உதவி கேட்கும்போது, வேற்றுமையிலும் ஒற்றுமையை கொண்டாடக்கூடிய ஓட்டத்தை நாம் நேர்த்தியாய் ஓட முடியும்.  

தேவனுக்கு அருகாமையில்

ஒரு அதிகாரி என்னை அழைத்த பின்பு, நான் மாவட்ட சிறைச்சாலைக்குள் நுழைந்தேன். பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டேன். நெரிசலான லாபியில் அமர்ந்தேன். வெகு நேரம் காத்திருப்பதைக் குறித்து சிறுபிள்ளைகள் குறைகூறுவதைக் கண்டு பெரியவர்கள் நடுங்குவதையும் பெருமூச்சிவிடுவதையும் பார்த்து, நான் அமைதியாக ஜெபித்தேன். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு ஆயுதமேந்திய காவலர் என்னுடைய பெயர்கள் அடங்கிய பட்டியலை அழைத்தார். அவர் என் குழுவை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில் அமரும்படிக்கு சைகை செய்தார். தடிமனான கண்ணாடி ஜன்னலின் மறுபக்கம் இருந்த நாற்காலியில் என் சித்தி மகன் அமர்ந்து டெலிபோன் ரிசீவரை எடுத்தபோது, என் இயலாமையின் ஆழம் என்னை ஆட்கொண்டது. ஆனால் நான் கண்ணீர் சிந்தி அழுதபோது, என்னுடைய வளர்ப்பு மகன் இன்னும் தேவனுக்கு அருகாமயில் தான் இருக்கிறான் என்பதை தேவன் எனக்கு உறுதிபடுத்தினார்.  
சங்கீதம் 139இல், தாவீது தேவனைப் பார்த்து, “நீர் என்னை.. அறிந்திருக்கிறீர்... என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்” என்று சொல்லுகிறான். அனைத்தும் அறிந்த தேவனை அறிக்கையிட்ட தாவீது, தேவனுடைய பாதுகாப்பையும் பராமரிப்பையும் உணருகிறான் (வச. 5). தேவனுடைய ஆச்சரியமான அறிவைக் குறித்தும் அவருடைய தொடுதலைக் குறித்தும் ஆச்சரியப்பட்ட தாவீது இரண்டு கேள்விகளின் மூலம் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறான்: “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” (வச. 7).  
நாமோ அல்லது நம்முடைய நேசத்திற்குரியவர்களோ கடினமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும்போது, அது நம்மை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும். அதுபோன்ற சூழ்நிலையில், தேவனுடைய கரம் நமக்கு ஆதரவாகவும் உறுதியாகவும் இருக்கும். அவர் நம்மை மீட்கமுடியாத தூரத்தில் நாம் இருப்பதாக ஒருவேளை நாம் எண்ணினாலும், அவருக்கு எட்டும் தூரத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பதை நாம் மறந்துபோகவேண்டாம்.

தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்

சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான். 
தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5). 
தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம். 

இயேசுவைப் போல் நேசித்தல்

ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் ஒரு ரயில் நிலையத்தில் நேர்த்தியாய் உடையணிந்த ஒரு இளைஞன்,  ஒரு இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தான். அவன் டை கட்டுவதில் சிரமப்பட்டபோது, ஒரு வயதான பெண்மணி தன் கணவரிடம் அவனுக்கு உதவிசெய்யும்படிக்கு கேட்டுக்கொண்டார். அந்த முதியவர் குனிந்து அந்த இளைஞனுக்கு டை முடிச்சு போடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்தபோது, யாரோ ஒருவன் மூவரையும் புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானபோது, அதைப் பார்த்த பலர் பலன் எதிர்பாராமல் உதவிசெய்வதின் முக்கியத்துவத்தைக் குறித்த தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டனர்.  
மற்றவர்களுக்கு இரக்கம் காண்பித்தல் என்பது கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், இயேசு நமக்கு செய்த தியாகமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இது தேவனுடைய அன்பின் பிரதிபலிப்பு. மேலும் “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே” இயேசு சீஷர்களிடம் விரும்பிய ஒரு காரியம். சகோதரனையோ சகோதரியையோ வெறுப்பதை கொலைபாதகத்திற்கு யோவான் சமமாக்குகிறார் (வச. 15). பின்பு இயேசுவையே அன்பின் கிரியைகளுக்கு அவர் மாதிரியாக்குகிறார் (வச. 16).  
தன்னலமற்ற அன்பை நிரூபிக்க அதிகப்படியான தியாகத்தை செய்திருக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, தேவ சாயலில் படைக்கப்பட்ட சக மனிதனுடைய தேவையை நம்முடைய தேவைக்கு மேலாக வைப்பதே தன்னலமற்ற அன்பாகும். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் வாய்ப்பு கிட்டும் சில முக்கியமான தருணங்களில் தன்னலமற்ற அன்பை பிரதிபலிக்கக்கூடும். நம்முடைய சுகமான சுயநல வட்டத்தை விட்டு வெளியேறி, நாம் செய்ய வேண்டிய அவசியமாய் தெரியாத உதவிகளையும் மற்றவர்களுக்கு செய்யும்போது, நாம் அவர்களை இயேசு நேசிப்பதுபோல் நேசிக்கத் துவங்குகிறோம் என்று அர்த்தம்.