எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

தேவக்கிருபையில் மூழ்குதல்

கடைசியாக ஜனவரி 8 ஆம் தேதி 1964 ஆம் ஆண்டு பதினேழு வயது நிரம்பிய ராண்டி கார்ட்னர் பதினொரு நாள், இருபத்தைந்து நிமிடங்கள் தான் செய்யாத ஒன்றைச் செய்தான். அவன் தலை சாய்த்துத் தூங்கினான். அவன் கின்னெஸ் புத்தகத்தின் உலகப் பதிவை முறியடிக்க விரும்பினான். ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் தூங்காமல் இருக்க முடியமென காட்ட விரும்பினான். மென் பானங்களைக் குடித்தும், மைதானத்தில் பந்து விளையாடியும் பந்து வீசியும், கார்ட்னர் ஒன்றரை வாரத்திற்குத் தூக்கத்தை தள்ளி வைத்தான். கடைசியாக, அவன் நிலை குலைந்து போவதற்கு முன்பாக, அவனுடைய சுவை உணர்வு, நுகர்வு, கேட்கும் திறன் ஆகியவற்றை ஒவ்வொன்றாக இழந்தான். பல ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் வன்மையான தூக்கமின்மை வியாதியால் பாதிக்கப்பட்டான். அவன் உலகப் பதிவை நிர்ணயித்தான். அத்தோடு மனிதனுக்கு தூக்கம் மிக அவசியம் என்பதை உறுதிப்படுத்தினான்.

நம்மில் அநேகர் நிம்மதியான தூக்கத்தைப் பெற போராடுகின்றோம். கார்ட்னர் தன்னுடைய தூக்கத்தை வேண்டுமென்றே தடுத்துக் கொண்டதைப் போலல்லாமல், அநேக பல காரணங்களால் தூங்க முடியாமல் தவிக்கின்றோம். மலைபோல பதட்டங்கள், நாம் அடைய முயற்சிப்பதைக் குறித்த பயம், பிறருடைய எதிர்பார்ப்புகளின் மீது பயம், என பலவகையான கவலைகளால் நடுக்கத்தோடு வாழ்கின்றோம். இந்தக் கவலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு நிம்மதியாக ஓய்வெடுப்பது என்பது இயலாததாகிவிடுகின்றது.

'கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா" என சங்கீதக்காரன் (சங். 127:1). நம்முடைய வீணான முயற்சிகளைக் குறித்து கூறுகின்றார். தேவன் நம்முடைய தேவைகளுக்குத் தராவிடில், நம்முடைய கடின உழைப்பும், கொடுமையான முயற்சிகளும் வீணானவை. ஆனால், தேவன் நம் தேவைகளுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பதால் நன்றி சொல்லுவோம். அவர் 'தமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திரையளிக்கின்றார்" (வச. 2). தேவனுடைய அன்பு நம்மனைவருக்கும் கொடுக்கப்படுகின்றது. நம்முடைய பதட்டங்களையெல்லாம் தேவனிடம் கொடுத்து விட்டு, அவர் தரும் இளைப்பாறலிலும், கிருபையிலும் அமர்ந்திருக்குமாறு தேவன் நம்மை அழைக்கின்றார்.

வானங்களைக் கிழித்துக் கொண்டு

சமீபத்தில் நான் என்னுடைய சிநேதிதியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவள் தன்னுடைய விசுவாசத்தை விட்டு விட்டதாகவும், நாம் அடிக்கடி சொல்லக் கேட்டுள்ள ஒரு குற்றச் சாட்டைக் காரணமாகக் கூறினாள். ஒன்றுமே செய்யாமலிருக்கும் ஒரு தேவனை நான் எப்படி நம்புவது? எனக் கேட்டாள். இந்த துணிச்சலான கேள்வி நம்மில் அநேகருக்கு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தோன்றலாம். நாம் தீவிரவாத செயல்களைக் குறித்துச் செய்தித்தாளில் வாசிக்கும் போதும், நம்முடைய உள்ளத்தை உடைக்கக் கூடிய காரியங்களின் வழியே கடந்து செல்லும் போதும் இத்தகைய கேள்வி நமக்கும் தோன்றலாம். என்னுடைய சிநேகிதியின் சார்பில் தேவன் செயல்பட வேண்டிய தேவையுள்ளது என்பதை அவளுடைய வேதனை வெளிப்படுத்தியது. நாம் அனைவருமே உணர்ந்திருக்கும் ஓர் ஏக்கம் அவளிடம் இருந்தது.

இஸ்ரவேலர் தங்களுடைய நிலப்பரப்பை நன்கு அறிவர். பாபிலோனிய பேரரசு இஸ்ரவேலரின் தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இஸ்ரவேலரை இரும்புக் கரம் கொண்டு நசுக்கி எருசலேமை தீக்கிரையாக்கி புகைந்து கொண்டிருக்கும் குப்பை மேடாக்கினர். நம்மை விடுவிக்கிறவராக இருந்த தேவன் எங்கே? (ஏசா. 63:11-15) என்ற கேள்வியோடிருந்த ஜனங்களின் இருண்ட உள்ளத்தில் ஏசாயா தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தைகளைப் போடுகின்றார். அதே இடத்திலிருந்தே ஏசாயா தைரியமாக ஒரு ஜெபத்தை ஏறெடுக்கின்றார். “தேவரீர் வானங்களைச் கிழித்திறங்கி... வாரும்" (64:1) என்கின்றார். ஏசாயாவின் வேதனையும், கவலையும் அவரை தேவனைவிட்டு விலகிப் போகச் செய்யவில்லை. ஆனால், அவர் இன்னும் அதிகமாக தேவனைத் தேடவும் அவரைக் கிட்டிச் சேரவும் செய்தது.

நம்முடைய சந்தேகங்களும் துன்பங்களும் நமக்கு ஒரு வித்தியாசமான ஈவைத் தருகின்றன. நாம் தேவனை விட்டு எவ்வளவு தூரமாய் காணாமல் போய் விட்டோமென்பதையும், தேவன் நம்மிடம் வரும்படியான தேவையில் இருக்கிறோமென்பதையும் அவை நமக்குக் காட்டுகின்றன. இப்பொழுது நாம் நடக்கக் கூடாததும், மறக்க முடியாததுமான கதைகளைக் காண்கின்றோம். இயேசுவின் மூலம் தேவன் வானங்களைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தார். கிறிஸ்து தன்னுடைய சொந்த சரீரத்தைக் கிழிக்கப்பட ஒப்புக் கொடுத்தார். எனவே அவருடைய அன்பினாலே அவர் நம்மை மேற்கொள்ள முடிந்தது. இயேசுவின் மூலம் தேவன் நம்மருகில் இருக்கின்றார்.